முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப. காளிமுத்துவிற்கு வாழ்த்துகள்


ப. காளிமுத்துவின் இக்கவிதையை பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறது:

"மழைத் துளிகள் கூட்டாகி 
திரண்டு கீழிறங்குகிறது 
அவைகள் துளித்த போதிருந்த தெருக்குழாய் வசைக்கதைகள் கோணல்மானலாக மாறிக் கூட்டாகத் துவங்கியது 
அதன் துளிகள் முன்னுக்குப் பின் மாறி இத்தெருக்காரியின் பெயர் 
அடுத்த தெருக்காரனின் பெயரென திரட்சியில் மாட்டிக் கொண்டது 
அதனடி ஓயாது ஒலியெழுப்பிக் கொண்டிருந்த வெள்ளைக்கோழி அங்கு ஒதுங்கியிருந்த கிழவனாகியிருந்தது அம்மழைத் திரட்டு தரையில் விழுந்து சிதறிய சமயம் சிறு விசும்பல்கள் மேலெழ அதை மறுப்பதாய் சில தென்னம்பூக்கள் பரவிக் கிடந்தன."

காளிமுத்துவிடம் ஒரு அபாரமான கவி ஒழுக்கு (poetic flow), சரளத்தன்மை, காட்சிபூர்வமான மொழிநடை இருக்கிறது. வண்ணதாசனின் மென்னுணர்வு, கற்பனாவாதம், முகுந்த நாகராஜனின் வளர்ந்தவர்களின் அன்றாட உலகில் உள்ள குழந்தைமை, அது சார்ந்த ஒரு விளையாட்டு உள்ளது. இந்த இரண்டு கவிகளின் தாக்கத்தை அதிகமாக நான் காளிமுத்துவிடம் காண்கிறேன்.

அடுத்து, காளிமுத்துவின் படைப்புலகின் ஒரு பிரதான வசீகரமாக அதன் துல்லியமான காட்சி ஒழுங்கு - கிட்டத்தட்ட சினிமா மொழியை நினைவுபடுத்துகிற காட்சி செறிவு - உள்ளது.

அவரை ஆட்கொள்ளுகிற ஒரு அக்கறை, கேள்வி மனிதர்களிடையே தோன்றும் தொடர்புக் கண்ணிகள் எப்படி தொலைவிற்கு அப்பாலும் அண்மையாக உள்ளன என்பதே. அதாவது நெருங்கி இருந்தாலும் தொலைதூரமாவது, தொலைவில் அகன்றிருந்தாலும் அருகாமையில் உணர்வது. இந்த முரணை அவர் அன்றாட உலகின் காட்சிகள், பொருட்கள், இயற்கை வழியாக பரிசீலிக்கிறார். சில இடங்களில் நமது திணைக்கும், நாம் புழங்கும் உலகுக்கும், உடலுக்கும், மனதுக்கும் ஒரு அறுக்க முடியாத பிணைப்புள்ளதைக் காட்டுகிறார். ஒரு கவிதையில் திருமண வீட்டுக்கு வருவோருக்காக வைத்திருக்கிற வெற்றிலை, பாக்குகளை மனித உடல்களாக பாவித்து சிலாகிப்பாக எழுதுகிறார். எனக்கு இது தஸ்தவஸ்கியின் "வெள்ளை இரவுகள்" நாவலில் அவர் காலி செய்யப்பட்ட வீடுகளைப் பற்றி சொல்வதை நினைவுபடுத்தியது.

காளிமுத்துவுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.