முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப. காளிமுத்துவிற்கு வாழ்த்துகள்


ப. காளிமுத்துவின் இக்கவிதையை பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறது:

"மழைத் துளிகள் கூட்டாகி 
திரண்டு கீழிறங்குகிறது 
அவைகள் துளித்த போதிருந்த தெருக்குழாய் வசைக்கதைகள் கோணல்மானலாக மாறிக் கூட்டாகத் துவங்கியது 
அதன் துளிகள் முன்னுக்குப் பின் மாறி இத்தெருக்காரியின் பெயர் 
அடுத்த தெருக்காரனின் பெயரென திரட்சியில் மாட்டிக் கொண்டது 
அதனடி ஓயாது ஒலியெழுப்பிக் கொண்டிருந்த வெள்ளைக்கோழி அங்கு ஒதுங்கியிருந்த கிழவனாகியிருந்தது அம்மழைத் திரட்டு தரையில் விழுந்து சிதறிய சமயம் சிறு விசும்பல்கள் மேலெழ அதை மறுப்பதாய் சில தென்னம்பூக்கள் பரவிக் கிடந்தன."

காளிமுத்துவிடம் ஒரு அபாரமான கவி ஒழுக்கு (poetic flow), சரளத்தன்மை, காட்சிபூர்வமான மொழிநடை இருக்கிறது. வண்ணதாசனின் மென்னுணர்வு, கற்பனாவாதம், முகுந்த நாகராஜனின் வளர்ந்தவர்களின் அன்றாட உலகில் உள்ள குழந்தைமை, அது சார்ந்த ஒரு விளையாட்டு உள்ளது. இந்த இரண்டு கவிகளின் தாக்கத்தை அதிகமாக நான் காளிமுத்துவிடம் காண்கிறேன்.

அடுத்து, காளிமுத்துவின் படைப்புலகின் ஒரு பிரதான வசீகரமாக அதன் துல்லியமான காட்சி ஒழுங்கு - கிட்டத்தட்ட சினிமா மொழியை நினைவுபடுத்துகிற காட்சி செறிவு - உள்ளது.

அவரை ஆட்கொள்ளுகிற ஒரு அக்கறை, கேள்வி மனிதர்களிடையே தோன்றும் தொடர்புக் கண்ணிகள் எப்படி தொலைவிற்கு அப்பாலும் அண்மையாக உள்ளன என்பதே. அதாவது நெருங்கி இருந்தாலும் தொலைதூரமாவது, தொலைவில் அகன்றிருந்தாலும் அருகாமையில் உணர்வது. இந்த முரணை அவர் அன்றாட உலகின் காட்சிகள், பொருட்கள், இயற்கை வழியாக பரிசீலிக்கிறார். சில இடங்களில் நமது திணைக்கும், நாம் புழங்கும் உலகுக்கும், உடலுக்கும், மனதுக்கும் ஒரு அறுக்க முடியாத பிணைப்புள்ளதைக் காட்டுகிறார். ஒரு கவிதையில் திருமண வீட்டுக்கு வருவோருக்காக வைத்திருக்கிற வெற்றிலை, பாக்குகளை மனித உடல்களாக பாவித்து சிலாகிப்பாக எழுதுகிறார். எனக்கு இது தஸ்தவஸ்கியின் "வெள்ளை இரவுகள்" நாவலில் அவர் காலி செய்யப்பட்ட வீடுகளைப் பற்றி சொல்வதை நினைவுபடுத்தியது.

காளிமுத்துவுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...