முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெருச்சண்டை குறிப்புகள்


 

இன்று ஒரு தெருச்சண்டையை பார்த்தேன். ஒரு கடையின் அகன்ற வாசல், அதை ஒட்டிய அகலமான நடைபாதை. ஒரு  பக்கம் இருபது பசங்க. எதிரில் இன்னொரு கூட்டம் பசங்க. நடுவில் சண்டையிடும் ரெண்டு இளைஞர்கள். ஒரு பையன் புல் ஓவர் அணிந்திருக்கிறான். இன்னொருவன் பார்மலாக ஆடையணிந்திருக்கிறான். முதல் பையன் இவனை மூஞ்சியிலே நான்கைந்து குத்துகள் குத்துகிறான். இவனோ எகிறி எகிறி முன்னே போய் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள். இங்கு ஒதுங்கி நிற்கும் போதும் அவனுடைய முகம் சிவந்திருக்க கையை முறுக்கிக் கொண்டு என்னை விடுறா என்று கூறுகிறான். "எதற்கு போய் திரும்பவும் முகத்தில் குத்து வாங்கவா?" என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன்.


நான் அந்த பையன் அடிவாங்காதிருக்க என்ன பண்ணியிருக்க வேண்டும் என யோசித்தேன்:

அவன் செய்த முதற் தவறு முன்னே முன்னே சென்று கொண்டிருந்தது. ஒருவர் நம்மை அடிக்க வரும் போது வலதுகாலை வலப்பக்கமாக நகர்ந்திட வேண்டும். இப்போது அடிக்கிறவரின் குத்துக்கள் மிஸ் ஆக அவர் தன் சமநிலையை இழப்பார். வேண்டுமென்றால் அவருக்கு ஒரு உதை கொடுத்து கீழே தள்ளலாம். அல்லது ஓடி வந்து விடலாம்.

அடுத்த தவறு முன்னே போகும் போது கைகளை தாழ்வாக வைத்திருந்தது. எப்போதுமே கைகள் தோள் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதே - அவன் ஓரளவுக்கு பயிற்சி பெற்றவன் என்றால் - பிளாக் செய்தபடியே திரும்ப சில குத்துக்கள் கொடுத்திருக்க முடியும். கைகள் தாழ்வாக இருக்கும் போது அவனுடைய முகம் அடிக்க தோதாக தடுப்பின்றி இருப்பதுடன் திரும்ப அடிக்கணும் என இவன் நினைக்கும் போதே முகத்தில் குத்துக்கள் விழுந்து கொண்டே இருக்கும்.


மூன்றாவதாக அவன் வலப்பக்கமாக விலகி அந்த குத்துக்களை மிஸ் பண்ணி விட்டு ஒரு வலதுகை ஹூக்கை அடித்திருக்க வேண்டும். அப்போது எதிராளி சமநிலை இழந்து முன்னே தடுமாறிப் போயிருப்பான். அடி தலையின் வலப்பக்கமாக விழுவதால் லேசாக தலைசுற்றும். அந்த அவகாசத்தை பயன்படுத்தி அவனுக்கு முன்னே போய் - எதிராளியின் தலை அப்போது தாழ்வாக இருப்பதால் - ஒரு அப்பர் கட் அடித்து அவனுடைய தாவாக்கட்டையை தாக்கிட வேண்டும். அடுத்து உடனே மற்றொரு வலதுகை ஹூக். அவ்வளவு தான் அந்த பையன் அரைமயக்கத்துக்கு போய் விடுவான். 3-4 வினாடிகளுக்குள் நாக் அவுட் ஆகியிருக்கும். ஆனால் இந்த அடிவாங்கின பையன் அவமானத்தில் அடுத்த சில நாட்களுக்கு மறுகிக் கொண்டே இருப்பான். கோபத்தை தீர்க்கத் தெரியாமல் மனதுக்குள் பழிவாங்க கற்பனை பண்ணிக் கொண்டிருப்பான். சரக்கடிப்பான். ஆனால் இனி அதனால் என்ன பயன்?

சண்டை முடிந்த பிறகு அந்த முகத்தில் குத்தின பையன் எங்கே என்று பார்த்தேன். அவன் அடிகொடுத்த கிளர்ச்சியில், சிறிய பதற்றத்தில், சிரித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...