முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாடகை வீடுகளை முறைப்படுத்துவது



வீட்டு உரிமையாளர்கள்-வாடகையாளர்கள் நீயா நானா விவாதத்தைப் பார்த்த போது ஒரு முக்கியமான அவா எனக்கு ஏற்பட்டது.
இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அரசு - இந்த வாடகை வீடுகளை முறைப்படுத்தி தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அதாவது நகரத்தின் மையத்தில் உள்ள வீடென்றால் 30,000 வெளியே உள்ள வீடென்றால் 8000 எனும் பாரித்த வேறுபாடு இருக்கக் கூடாது. ரெண்டாயிரத்துக்கு மேல் வீடுகளின் வாடகையை இடத்தின் பொருட்டு உயர்த்த அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அடையாறில் வேலை பார்த்தாலும் அயப்பாக்கத்தில் வேலை பார்த்தாலும் உங்களுடைய சம்பத்தில் 20,000 வித்தியாசம் இருக்கப் போவதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் மாறப் போவதில்லை. அரசு ஒரு இணையதளம் ஆரம்பித்து அதில் உரிமையாளர்களும் வாடகையாளர்களும் தம்மைப் பதிவு பண்ணி வரிசை முறையில் வீட்டை மென்பொருளே ஒதுக்கீடு செய்ய வேண்டும். புரோக்கர்களை ஒழிக்க வேண்டும். வீட்டை அடிப்படையான விதிமுறைகள் ஒழிய வேறு காரணங்களுக்காக மறுக்கும் உரிமையை பதிவு பண்ணியுள்ள உரிமையாளர்களுக்கு மறுக்க வேண்டும். அதே போல வாடகையையும் முன்பணத்தையும் இணையதளம் மூலம் செலுத்தி அதை அவ்வழியே உரிமையாளரும் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அட்வான்ஸை சரியான நேரத்தில் திரும்ப வாங்குவதும் வாடகையாளர்களுக்கு சுலபம் ஆகும். இப்போது நடப்பதைப் போல அட்னாவ்ஸ் பணத்தை வாங்கி வட்டிக்கு, ரொட்டேஷனுக்கு விடும் வழக்கம் இல்லாமல் ஆகும். அரசின் கையிருப்பில் அட்வான்ஸ் இருந்தால் அது பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
அதே போல இருதரப்புகளின் குறைகளை சரிசெய்யும் நடுவராக அரசே செயல்பட வேண்டும். நகரத்தின் மத்தியில் வசிப்பதில் உள்ள மிகப்பெரிய சிரமமே அதிக வாடகை தான். அரசு இதை நெறிப்படுத்தினால் அது நீண்ட தூரம் பயணித்து வேலைக்கு வரும் சிரமத்தை குறைக்கும். பணக்கார, மேல் மத்திய, மத்திய வர்க்க வாரியாக மக்கள் பிரிந்து கிடக்கிற பாரபட்சம் இல்லாமல் ஆகும். சாதி, மதம், சைவம், ஒழுக்கக் கட்டுப்பாடு, குறுக்கீடுகள், ஆதிக்க சுபாவம் என வீட்டு உரிமையாளர்கள் பண்ணுகிற அட்டூழியங்களும் ஒரு முடிவுக்கு வரும். மக்கள் மீதுள்ள பொருளாதார அழுத்தம் குறையும். நான்கு வீடுகளைக் கட்டிப்போட்டு அநியாய வாடகைப் பணத்தில் உட்கார்ந்து தின்னுகிற, மென்பொருள் துறை கவிழ்ந்ததும் ஆள் கிடைக்காமல் அந்த வீடுகளைப் பூட்டிப் போட்டு உட்கார்கிற அவல நிலை இல்லாமல் ஆகும். வாடகை கடைகளை எடுத்துக் கொண்டாலும் வாடகைப் பணமே அங்கு விற்கப்படும் சேவை அதிகமாக ஆவதற்கு முக்கிய காரணம். அதையும் சீராக்கினால் அங்குள்ள சேவையின், பொருட்களின் விலையையும் குறைக்கும் படி அரசால் கட்டளையிட முடியும். இதுவும் மத்திய வர்க்கம் மீதான அழுத்தத்தை குறைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...