முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாடகை வீடுகளை முறைப்படுத்துவது



வீட்டு உரிமையாளர்கள்-வாடகையாளர்கள் நீயா நானா விவாதத்தைப் பார்த்த போது ஒரு முக்கியமான அவா எனக்கு ஏற்பட்டது.
இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அரசு - இந்த வாடகை வீடுகளை முறைப்படுத்தி தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அதாவது நகரத்தின் மையத்தில் உள்ள வீடென்றால் 30,000 வெளியே உள்ள வீடென்றால் 8000 எனும் பாரித்த வேறுபாடு இருக்கக் கூடாது. ரெண்டாயிரத்துக்கு மேல் வீடுகளின் வாடகையை இடத்தின் பொருட்டு உயர்த்த அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அடையாறில் வேலை பார்த்தாலும் அயப்பாக்கத்தில் வேலை பார்த்தாலும் உங்களுடைய சம்பத்தில் 20,000 வித்தியாசம் இருக்கப் போவதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் மாறப் போவதில்லை. அரசு ஒரு இணையதளம் ஆரம்பித்து அதில் உரிமையாளர்களும் வாடகையாளர்களும் தம்மைப் பதிவு பண்ணி வரிசை முறையில் வீட்டை மென்பொருளே ஒதுக்கீடு செய்ய வேண்டும். புரோக்கர்களை ஒழிக்க வேண்டும். வீட்டை அடிப்படையான விதிமுறைகள் ஒழிய வேறு காரணங்களுக்காக மறுக்கும் உரிமையை பதிவு பண்ணியுள்ள உரிமையாளர்களுக்கு மறுக்க வேண்டும். அதே போல வாடகையையும் முன்பணத்தையும் இணையதளம் மூலம் செலுத்தி அதை அவ்வழியே உரிமையாளரும் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அட்வான்ஸை சரியான நேரத்தில் திரும்ப வாங்குவதும் வாடகையாளர்களுக்கு சுலபம் ஆகும். இப்போது நடப்பதைப் போல அட்னாவ்ஸ் பணத்தை வாங்கி வட்டிக்கு, ரொட்டேஷனுக்கு விடும் வழக்கம் இல்லாமல் ஆகும். அரசின் கையிருப்பில் அட்வான்ஸ் இருந்தால் அது பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
அதே போல இருதரப்புகளின் குறைகளை சரிசெய்யும் நடுவராக அரசே செயல்பட வேண்டும். நகரத்தின் மத்தியில் வசிப்பதில் உள்ள மிகப்பெரிய சிரமமே அதிக வாடகை தான். அரசு இதை நெறிப்படுத்தினால் அது நீண்ட தூரம் பயணித்து வேலைக்கு வரும் சிரமத்தை குறைக்கும். பணக்கார, மேல் மத்திய, மத்திய வர்க்க வாரியாக மக்கள் பிரிந்து கிடக்கிற பாரபட்சம் இல்லாமல் ஆகும். சாதி, மதம், சைவம், ஒழுக்கக் கட்டுப்பாடு, குறுக்கீடுகள், ஆதிக்க சுபாவம் என வீட்டு உரிமையாளர்கள் பண்ணுகிற அட்டூழியங்களும் ஒரு முடிவுக்கு வரும். மக்கள் மீதுள்ள பொருளாதார அழுத்தம் குறையும். நான்கு வீடுகளைக் கட்டிப்போட்டு அநியாய வாடகைப் பணத்தில் உட்கார்ந்து தின்னுகிற, மென்பொருள் துறை கவிழ்ந்ததும் ஆள் கிடைக்காமல் அந்த வீடுகளைப் பூட்டிப் போட்டு உட்கார்கிற அவல நிலை இல்லாமல் ஆகும். வாடகை கடைகளை எடுத்துக் கொண்டாலும் வாடகைப் பணமே அங்கு விற்கப்படும் சேவை அதிகமாக ஆவதற்கு முக்கிய காரணம். அதையும் சீராக்கினால் அங்குள்ள சேவையின், பொருட்களின் விலையையும் குறைக்கும் படி அரசால் கட்டளையிட முடியும். இதுவும் மத்திய வர்க்கம் மீதான அழுத்தத்தை குறைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...