முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு முகமூடிகள்

விக்ரம் இந்த பிக்பாஸ் பருவம் முழுக்க நிலைமாறாமல், சமநிலை தவறாமல், கொஞ்சம் கூட தன் இயல்புணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்தார். அது ஒரு போலித்தனம். அதாவது விக்ரம் இந்த ஷோவுக்காக இப்படிச் செய்தார் என்று நான் சொல்லவில்லை - அதுவே அவர் இயல்பு, அவர் வேலையிடங்களில், பொதுவிடங்களில் இப்படியே இருப்பார், அவர் மனதில் என்ன ஓடுகிறதென நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஒரு அரசியல்வாதிக்குத் தேவையான மிக முக்கியமான இயல்பு இந்த செயற்கைத்தனம். உள்ளுக்குள் எவ்வளவு எரிமலைகள் வெடித்தாலும் வெளியே எப்படி ரம்யா பாண்டியனும் அவரது குடும்பத்தினரும் எப்போது சிரித்த மேனிக்கு இருந்தார்களோ அப்படியே தான் விக்ரமும், இது இப்படியானவர்களின் அடிப்படை சுபாவம். இந்த கேமராக்கள் இல்லாவிடில் அந்தரங்கமான சூழல் கிடைத்தால் இவர்கள் வேறுவிதமாக இருப்பர். 24 மணிநேரமும் ஒருவரால் அப்படி இருக்க முடியுமா என்றால் முடியும் - ஆயுள் பூரா கூட இருக்க முடியும்.

அவ்விதத்தில் நாம் பார்த்தது விக்ரம் எனும் ஒரு மனிதனை அல்ல, ஒரு முகமூடியை.

அஸீம் ஒரு சகிக்கத்தக்க ஆளுமை அல்ல. ஆனால் அவர் பொதுவெளியில் தன்னை வெளிப்படையாக மிகையாக  முன்வைப்பார். மேலும் இந்த நிகழ்ச்சியின் அமைப்புக்கு ஏற்ப அவர் வில்லன் பாத்திரத்தில் பக்காவாகப் பொருந்திப் போனார். அவ்வாறே அவரைக் காட்டினார்கள், அவரும் அதைப் பொருட்படுத்தவில்லை, அதுதான் அவரது வெற்றி, நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ நான் இப்படித்தான் இருப்பேன் என்பதில் உள்ள நாணயம்! நிஜத்தில் அணுக்கத்தில் கேமரா இல்லாமல் அஸீம் இன்னும் சற்று கனிவாக மென்மையாக இருப்பார், தன் ரத்தக்கொதிப்பு அதிகமாகும் போது மட்டும் கொந்தளிப்பார் எனத் தோன்றுகிறது. அதாவது அவர் பிக்பாஸில் அணிந்ததும் ஒரு முகமூடிதான் - சிலரால் அப்படித்தான் தன்னை வெளிப்படுத்த இயலும். ஆனால் அது அவரது இயல்புக்கு நெருக்கமான முகமூடி!

அப்புறம் அவரது நார்ஸிஸம் - அதை ஊக்கப்படுத்தும் போக்கை அவரது அப்பாவின் மேடை உரையில் கவனித்தேன். சிறுவயது முதலே அப்படி நார்ஸிஸம் முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழலிலே அஸீம் வளர்ந்திருக்க வேண்டும். அப்புறம் அஸீமின் நார்ஸிஸம் எனக்கு சில முக்கிய தமிழ் எழுத்தாளர்களை நினைவுபடுத்தியது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...