Skip to main content

ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் காதல்

 


கேள்வி: அழகான பெண்கள் ரொம்ப பிகு பண்ணிக் கொள்வதால் ஆண்கள் தகுதி குறைவான பெண்களை நாடும் அவல நிலை ஏற்படுகிறது. இந்த இரண்டாம் கட்ட பெண்களுக்கான சந்தை மதிப்பும் இதனால் உயர்ந்துவிட அவர்கள் முன்னவர்களை விட அதிகமாக பிகு பண்ண ஆண்களின் நிலை கந்தரகோலமாகி விடுகிறதே. இதற்கு என்ன செய்ய?

பதில்: பெண்ணுடலை எந்த தகுதியும் கோராமல் நாடுவதே சிறப்பானது, அதுவே இயல்பானது, ஆகையால் அதுவே என் தீர்வும். மரபணு ரீதியாக பார்த்தாலும் அழகான பெண்ணிடம் எந்த உயர்வான திறனும் இல்லை. மேற்பூச்சு இல்லாமல் மனிதர்களை எதிர்கொள்வதே அழகு. ஒரு எளிய மிருகமாக நான் இதையே நம்புகிறேன். இந்த ஆன்மீகம், காதல் போன்ற அபத்தங்களை நான் நம்பாததது இதனாலே.

இந்த உலகின் மிகப்பெரிய வக்கிரம் பிடித்த மனிதன் காதலைக் கண்டுபிடித்தவனே. காதல் கேவலமானது என்பதல்ல என் பிரச்சினை. காதல் அழகானதே. ஆனால் அது ஒரு அழகான பொய். காதல் ஒரு மதசார்பற்ற பக்தியுணர்வு. எப்படி ஒரு கல்லில் கடவுளைக் காண்கிறோமோ அப்படியே ஒரு பெண்ணுடலில் நாம் காதலியைக் காண்கிறோம். எப்படி கல் என்பது வெறும் கல்லோ, அப்படியே பெண்ணுடலும் வெறும் உடல் தான். வெறும் உடல் எனும் போது எல்லா உடல்களும் ஒன்று தான். நாம் காதலுணர்வை 'வென்று' விட்டால் இயல்பாக நம் உலகில் சமத்துவம் வந்துவிடும். பிராயிட் சொன்னதைப் போல நமது பாதுகாப்பின்மை, தாழ்வுணர்வு, போதாமை உணர்வு ஒவ்வொன்றுமே பாலியல் போட்டியில் நமது தவிர்க்க முடியா தோல்விகளில் இருந்தும், பொருளாதார ரீதியான ஏற்றத்தாவில் இருந்தும் பிறக்கிறது. சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பாலியல் தேர்வில் நம் தெரிவுகளை நியாயமற்றதாக்கி நம்மை பலவீனமான போட்டியாளனாக்கி நம் முதுகெலும்பை ஒடித்து விடும் போது, அத்துடன் கூடுதலாக அழகும் ஆரோக்கியம் குறித்த பாவனைகளும் சேரும் போது உலகின் மிக மிக அசமத்துவமான செயலாக காதல் அமைந்து விடுகிறது. இந்த முற்போக்காளர்கள் எப்படி இவ்வளவு மோசமான அநீதியால் ஆன காதலை கொண்டாடுகிறாரக்ள் என்பது ஒரு புதிரே. ஆனால் இதற்கான பதிலை நாம் இறையியலில் தேட முடியும்.

எப்படி உலகம் ஏற்றத்தாழ்வானது, அநீதியானது, ஆனால் இறைவன் வழியாக பார்க்கையில் உலகம் பிழையற்றதாகி விடும் என இறையிலாளர்களும் பக்திமான்களும் கூறுவார்களோ அப்படியே காதல் குறித்து அதன் ஆராதகர்களும் கூறுவார்கள் (இதை தத்துவத்தில் கடப்புநிலை வாதம் என்பார்கள்.) உலகின் மிக ஆபாசமான அபத்தமான சிந்தனை இதுவே.

அதனாலே சொல்கிறேன் அழகு எனும் அளவுகோலின் அடிப்படையிலான காதல் ஒழிவதும், மனிதன் பாலுணர்வின் அடிப்படையில் மட்டும் தூய்மையாக தன் துணையை நாடுவதுமே நியாயமான மனித உறவுகளுக்கு வழிவகுக்கும். அதற்காக கட்டற்ற பாலியலே சரியானது என நான் கூறவில்லை. நாம் விரும்பும் பாலியல் துணையுடன் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதை நாம் நேரடியாக சொல்ல முடியாது - ஏனென்றால் மொழி எனும் போதை நம்மை ஆட்டிப் படைக்கிறது. அதனால் நாம் 'பொய்' சொல்லியே ஆக வேண்டி இருக்கிறது. அதே நேரம் நமக்குள் காதல் என்பது ஒரு பெரும் பொய் எனும் தெளிவு வேண்டும். இது இருந்தால் ஆண்கள் பெண்ணுக்காக அலைந்து சோர்வடைய வேண்டியிராது.  

ஒரு வியப்பான விசயம் - நான் ஊரில் வாழ்ந்த காலத்தில் என் அப்பா தலைமுறை ஆட்கள் இந்தளவுக்கு காதல் மீது பித்தாக இருந்து அதைக் குறித்தே சதா சர்வ நேரமும் சிந்திப்பதை நாம் கண்டதில்லை. அவர்களுக்கு ஒரு பெண்ணை பெண்ணாக மட்டும் காணும் இயல்பு இருந்தது. ஆனால் எழுபது, எண்பது, தொண்ணூறுகளுக்குப் பிறகு, குறிப்பாக என் தலைமுறையினருக்குப் பின்னரே அதிகமாக ஒரு பெண்ணை பெண் அல்லாமல் பாவித்து பேரழகியாக, தேவதையாக, பெரும் உவகையின் திறப்பாக பார்க்கும் கற்பனாவாதம் அதிகரித்துள்ளது. வியப்பாக இந்த தலைமுறைகளில் தான் ஆண்களுக்கு செக்ஸில் திருப்தியடையும், செக்ஸை தேவையான அளவுக்கு அனுபவிக்கும் சாத்தியங்கள் குறைந்து வந்துள்ளன, ஆண்கள் தம்மை தகுதியற்றவர்களாக அதிகமாக உணர்ந்து வந்துள்ளனர், அவர்களுடைய தாழ்வுணர்வே காதல் மயக்கமக தோற்றமெடுத்துள்ளது.

பெண்ணை பெண்ணாக பார்க்க ஒரு துணிச்சல், தன்னம்பிக்கை வேண்டும், அது இல்லாத போது நாம் அவளை ஒரு மீ-இருப்பாக நோக்க தலைப்படுகிறோம், அவளை அடையாமலே அவளைக் கடந்து போக முயல்கிறோம் (லக்கான் இதை கனவு மயக்கம் கொண்ட மிகுகற்பனை (fantasy) என்று தன் உளவியலில் கூறுகிறார்.) இந்த தலைமுறைகளை சேர்ந்த ஆண்களையே பெண்கள் அதிகமாக தகுதி குறைவானவர்களாக நினைக்கிறார்கள், அவமதிக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள். பெண்களிடம் செருப்படி அதிகமாக வாங்க வாங்க இந்த ஆண்கள் அதிபயங்கர காதலர்களாக மாறுகிறார்கள். (லக்கான் இந்த நோய்மையை neurosis என்கிறார். அதனால் காமத்தை அடைய எண்ணாமலே காமத்தை நாட உத்தேசித்து துவங்கி இடத்திலே திரும்பத் திரும்ப சுவரில் மோதிக்கொண்டு நிற்பது.)

நம்மை விட இவ்விசயத்தில் நாய்களுக்கு அதிக திறனுள்ளது - எதிர்பாலினத்தின் பாலுறுப்பையும், மூத்திரத்தையும் முகர்ந்து பார்த்து அதன் ஆரோக்கியம், மனநிலை, அது உண்ணும் உணவு என ஒவ்வொன்றையும் துல்லியமாக கணித்துணரும் திறன் அதற்குண்டு என்பதால் நம்மை போல இல்லாத சங்கதிகளைப் பார்த்து ஏமாந்து காதலில் விழும் பைத்தியக்காரத்தனத்தை நாய்கள் செய்வதில்லை. ஒரு இணையைப் பார்த்ததும் அதன் முழுமையான ஹெல்த் ரிப்போர்ட், உளவியல் நிலை பரிசோதனை அறிக்கையை அது கையில் எடுத்துக் கொண்டு வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கிறது. அதுவும் ஒரு சில நொடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுவதை நாம் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் மனிதர்கள் ஒரு பெண்ணின் எழுதப்பட்ட கண்களையும் போலி கண்ணிமைகளையும் பார்த்து சொக்கி விழுந்து அவளை தான் காதலிப்பதாக ஏமாந்து போகிறான். அதைத் தாண்டி அவளைக் காணும் துணிச்சல் அவனுக்கு ஒரு போதும் வருவதில்லை. அவளுடைய பாலியல் திறன் என்ன, ஆரோக்கிய நிலை என்ன, மன அமைப்பு என்ன, குழந்தை பெறும் திறன் என்ன என ஒன்றுமே தெரியாத பத்தாம்பசலியாக அவன் இருக்கிறான். அதனாலே நாய்கள் நம்மை விட சிறந்த காதலர்கள் என நான் நினைக்கிறேன். அதனாலே மனிதர்களை விட விலங்குகள் இடத்து எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...