முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய சந்தை நடுவே பேச்சாளனுக்கு மேடை அமைக்காதீர்

 


புத்தக கண்காட்சிகள் வாசிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, எழுத்தாளர்களை பிரபலமாக்க அல்ல எனும் வாதம் மிகவும் அபத்தமானது. உலகம் முழுக்க எழுத்தாளர்களை பிரபலமாக்கியே புத்தகங்களை விற்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாக அப்படித்தான் உலக புத்தக சந்தை இயங்குகிறது. இங்கு மட்டுமே சுகிசிவம்களும், பர்வீன் சுல்தானாக்களும் மேடையில் தோன்றி பேசினால் புத்தக வாசிப்பு மக்களிடம் ஏற்படும் என நம்புகிறார்கள். அவர்கள் பேசினால் பட்டிமன்ற / பேச்சுக் கலை தான் வளருமே அன்றி, வாசிப்பு அல்ல. ஒரு சோப்பை ஒரு மாடல் அழகியை வைத்து விளம்பரப்படுத்துவதைப் போல ஒரு புத்தகத்தை ஒரு பட்டிமன்ற பேச்சாளரை வைத்து விளம்பரப்படுத்த முடியாது. இரண்டும் இருவேறு பண்டங்கள். இது போன்ற விழாக்களில் பபாசியின் / விழா ஒருங்கிணைப்பாளர்களின் நோக்கம் கூட்டம் சேர்ப்பதே அன்றி புத்தகத்துக்கு வாசகனை உருவாக்குவது அல்ல. தற்காலிகமாக ஒரு கூட்டத்தை உண்டு பண்ணிக் காட்டினால் தம் சோலி முடிந்தது என நினைக்கிறார்கள். எங்காவது ஒரு ஆய்வு பண்ணி சுகிசிவத்தினால் இத்தனை ஆயிரம் புது வாசகர்கள் மாதாமாதம் உருவாகிறார்கள் என நிரூபித்ததுண்டா? இல்லை.

என்னுடைய பரிந்துரை எழுத்தாளனை பேச வையுங்கள் என்பதல்ல. சின்னச்சின்ன அமைப்புகளை உருவாக்கி எழுத்தாள பிம்பங்களை உண்டுபண்ணுங்கள். வாசிப்பு ஒரு உயர் பண்பாட்டுச் செயல் எனும் பிம்பத்தை கட்டமையுங்கள். கர்நாடக / இந்துஸ்தானி இசைக்கு ஒரு சந்தையை உருவாக்கிய பாணியில் இதை செய்யுங்கள் என்பதே. எண்ணிக்கை ரொம்ப முக்கியம் அல்ல. மேற்தட்டு, மேல்மத்திய வாசகர்களை உருவாக்கினாலே போதும், மத்திய வர்க்கம் அவர்களால் கவர்ந்திழுக்கப்படும். இம்மாதிரி விசயங்களில் சந்தைப்படுத்தல் உத்தியாளர்களின் பங்களிப்பு அவசியம். பபாசியோ அரசு ஊழியர்களோ இதில் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.
ஏற்கனவே இலக்கிய வாசிப்பு வீழ்ந்து கிடக்கிறது. இதற்கு நடுவே பட்டிமன்ற பேச்சாளர்கள் வேறு வந்து நொய் நொய் என டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...