முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய சந்தை நடுவே பேச்சாளனுக்கு மேடை அமைக்காதீர்

 


புத்தக கண்காட்சிகள் வாசிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, எழுத்தாளர்களை பிரபலமாக்க அல்ல எனும் வாதம் மிகவும் அபத்தமானது. உலகம் முழுக்க எழுத்தாளர்களை பிரபலமாக்கியே புத்தகங்களை விற்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாக அப்படித்தான் உலக புத்தக சந்தை இயங்குகிறது. இங்கு மட்டுமே சுகிசிவம்களும், பர்வீன் சுல்தானாக்களும் மேடையில் தோன்றி பேசினால் புத்தக வாசிப்பு மக்களிடம் ஏற்படும் என நம்புகிறார்கள். அவர்கள் பேசினால் பட்டிமன்ற / பேச்சுக் கலை தான் வளருமே அன்றி, வாசிப்பு அல்ல. ஒரு சோப்பை ஒரு மாடல் அழகியை வைத்து விளம்பரப்படுத்துவதைப் போல ஒரு புத்தகத்தை ஒரு பட்டிமன்ற பேச்சாளரை வைத்து விளம்பரப்படுத்த முடியாது. இரண்டும் இருவேறு பண்டங்கள். இது போன்ற விழாக்களில் பபாசியின் / விழா ஒருங்கிணைப்பாளர்களின் நோக்கம் கூட்டம் சேர்ப்பதே அன்றி புத்தகத்துக்கு வாசகனை உருவாக்குவது அல்ல. தற்காலிகமாக ஒரு கூட்டத்தை உண்டு பண்ணிக் காட்டினால் தம் சோலி முடிந்தது என நினைக்கிறார்கள். எங்காவது ஒரு ஆய்வு பண்ணி சுகிசிவத்தினால் இத்தனை ஆயிரம் புது வாசகர்கள் மாதாமாதம் உருவாகிறார்கள் என நிரூபித்ததுண்டா? இல்லை.

என்னுடைய பரிந்துரை எழுத்தாளனை பேச வையுங்கள் என்பதல்ல. சின்னச்சின்ன அமைப்புகளை உருவாக்கி எழுத்தாள பிம்பங்களை உண்டுபண்ணுங்கள். வாசிப்பு ஒரு உயர் பண்பாட்டுச் செயல் எனும் பிம்பத்தை கட்டமையுங்கள். கர்நாடக / இந்துஸ்தானி இசைக்கு ஒரு சந்தையை உருவாக்கிய பாணியில் இதை செய்யுங்கள் என்பதே. எண்ணிக்கை ரொம்ப முக்கியம் அல்ல. மேற்தட்டு, மேல்மத்திய வாசகர்களை உருவாக்கினாலே போதும், மத்திய வர்க்கம் அவர்களால் கவர்ந்திழுக்கப்படும். இம்மாதிரி விசயங்களில் சந்தைப்படுத்தல் உத்தியாளர்களின் பங்களிப்பு அவசியம். பபாசியோ அரசு ஊழியர்களோ இதில் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.
ஏற்கனவே இலக்கிய வாசிப்பு வீழ்ந்து கிடக்கிறது. இதற்கு நடுவே பட்டிமன்ற பேச்சாளர்கள் வேறு வந்து நொய் நொய் என டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.