நிறைய தோழர்கள் பேச்சாளர்களை புத்தக விழாவின் போது தலா 30,000 கொடுத்து வரவழைப்பதன் நோக்கம் அதிக மக்களை திரட்டுவதே என்கிறார்கள். எனக்கு இது குறித்து மூன்று ஐயங்கள்:
1) ஒரு நடிகை நடனமாடினால் பேச்சாளருக்கு வருவதை விட அதிக கூட்டம் வரும். எனில் ஏன் நாம் அதை பரிசீலிக்கக் கூடாது?
2) தேர்தல் பிரச்சாரங்களின் போது தலைக்கு இவ்வளவு என பணம் கொடுத்து பார்வையாளர்களை வேட்பாளர்கள் திரட்டுவதைப் பார்க்கிறோம். அவர்கள் இந்த பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரை அழைத்து வந்தால் லட்சக்கணக்கில் கூட்டம் குவியுமே? அதற்கு பதில் ஏன் கூட்டத்துக்காக இவ்வளவு பணத்தை அரசியல்வாதிகள் செலவழிக்கிறார்கள்? தமிழருவி மணியனின் சொந்த கட்சிக் கூட்டங்களில் எத்தனை லட்சம் மக்கள் வருகிறார்கள்? அதை வைத்து அவர் ஏன் ஒரு எம்.எல்.ஏ கூட ஆகவில்லை?
3) இவ்வளவு பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர்களை ஒரு படத்தில் தோன்றி அரைமணி பேச வைத்தால் அதைக் கேட்க ஒவ்வொரு காட்சிக்கும் சுமார் 10,000 பேர் வர மாட்டார்களா? எனில் அப்படம் பெரும் வெற்றி பெறுமே? முன்பு செந்தில்-கவுண்டகணி டிராக்குக்காக மட்டும் படங்கள் ஓடியுள்ளதைப் போல?
புத்தக விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு தோன்றிய இந்த பிரமாத ஐடியா ஏன் இவர்களுக்கு வரவில்லை?
இல்ல, எனக்கு சத்தியமா புரியல?
கருத்துகள்