இம்முறை தில்லி சென்றிருந்த போது பல இடங்களில் மோடியின் பின்னால் யோகி பணிவாக நிற்கும் படங்களைப் பார்த்தேன். அவர்களுடைய எதிர்காலத் திட்டம் அது, நம்மை அதை நோக்கித் தயாரிக்கிறார்கள் எனத் தெளிவாகியது. அதற்காக யோகியை நம் மீது திணிக்கிறார்கள் என்றில்லை. இப்போது கூட யோகிக்கு ஓட்டுப்போட சொன்னால் வடக்கர்கள் குதித்தோடி வருவார்கள் என எனக்கு அங்கு கிடைத்த அனுபவம் உணர்த்தியது. நம் மக்களுக்கு மோடியை விட பொருத்தமான தலைவர் யோகி தான். அவர் பிரதமர் ஆனால் இந்த தேசம் அதன் 'ஒரிஜினலான'விலங்கு நிலையை அடைந்து விடும் என நம்புகிறேன். "புதுப்பேட்டை" படத்தில் தனுஷ் சொல்வார், "நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு புதுச்சட்டை போட்டு செண்ட் அடிச்சு பளிச்சின்னு இருக்கக் கூடாது. உடனே அவன் தாலியறுத்தான், இவன் வெட்டிட்டான், அவங்க கூட சேர்ந்துட்டான்னு சொல்லுவீங்க. நான் உடனே கத்தியைத் தூக்கிட்டு ரோட்ல ஓடணும். அதானே?" நமது நாட்டின் எதிர்காலத்தை நினைக்கையில் இதுதான் நினைவுக்கு வருகின்றது. கொஞ்ச நாளில் எல்லாரையும் கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓட வைப்பார்கள்!
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்