முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா - இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டி - என் கணிப்பு


இந்தியா - இங்கிலாந்து போட்டி நடக்கும் ஏகனா மைதான ஆடுதளம் சற்று மெதுவானது, அதனாலே அதிகமாக சுழலக் கூடாது என எண்ணி ஆடுதள அமைப்பாளர்கள் அதில் சற்று புற்களை விட்டு வைத்து மேலே ஒரு நிலை மண்ணைப் போட்டு உருட்டியிருக்கிறார்கள். அதனாலே மிதவேக வீச்சாளர்களுக்கு தையலில் பட்டு அசையும் (seam movement). இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இந்த ஆடுதளத்தில் வேகவீச்சாளர்கள் 7 போட்டிகளில் 52 விக்கெட்டுகளும், சுழலர்கள் 35 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது அதனால் தான். முதலில் மட்டையாடும் அணிகளின் சராசரி ஸ்கோர் 215. கடந்த முறை இங்கு ஆடிய போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக பந்துவீசிய காரணத்தாலே முதலில் மட்டையாடிய தென்னாப்பிரிக்கா 311 அடித்தது; அடுத்து பந்துவீசிய தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 177க்கு சுருட்டியது. ஏனென்றால் அது 250 ஸ்கோருக்கான ஆடுதளம் தான். அதனாலே இன்றைய போட்டியில் இந்திய அணி மூன்று வேகவீச்சாளர்களை எடுத்திருக்கிறது. அது நல்ல முடிவுதான்.

என்னுடைய கணிப்பு இந்த ஆடுதளத்தில் இந்தியா 250-275 எடுத்தால் அது வெற்றி இலக்காக அமையும் என்பது. ஆனால் இந்திய மட்டையாளர்கள் இதுவரை 300ஐ இலக்காக வைத்து வேகமாக அடிக்க முயன்று ஒற்றை, இரட்டை இலக்கங்களை நாடாமல் பவுண்டரி அடிக்க முயன்று, குறிப்பாக இறங்கி வந்து தூக்கி அடிக்க முயன்று, பந்து மெதுவாக வருவதாக உள்வட்டத்துக்கு உள்ளாகவே கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார்கள். இப்போது கூட அவர்கள் சற்று பொறுமையாக ஆடி 240-250 இலக்கை எட்டினாலே வெல்ல முடியும். அப்படி இலக்கை எடுத்தால் முகமது ஷமி இந்த ஆடுதளத்தில் நன்றாக வீசி குறைந்தது 3 விக்கெட்டுகளும், ஜடேஜா குறைந்தது 2 விக்கெட்டுகளும் எடுப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை, கொஞ்சமாக ஸீம் ஆகிறது, மெதுவாக வருகிறது என்பதால் இவர்கள் இருவருடைய பந்துவீச்சு பாணி எடுபடும் என நினைக்கிறேன்.

ஆனால் பெரிய இலக்கை எடுக்க முயன்று (இரவில் பனி அதிகமாக விழும் எனும் பயத்தில்) இந்தியா 220க்கு கீழே சுருண்டு விட்டால் இங்கிலாந்து சுலபத்தில் வெல்லும் என கணிக்கிறேன்.

இந்தியாவின் இலக்கு இப்போதைக்கு 40 ஓவர்களில் 180-200 என்பதாகவும், கடைசி பத்து ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வரை கொடுத்து 60-80 வரை எடுப்பதுமே நோக்கமாக இருக்க வேண்டும். அதுவே போதும் என நினைக்கிறேன். ரோஹித் பொறுமையாக 40 ஓவர் வரை நின்று ஆட வேண்டும். பவுண்டரிகளுக்காக அதிகம் முயலக் கூடாது. சுழலர்களை ஸ்வீப் பண்ணாமல் மிட் ஆப், மிட் ஆனை நோக்கி நேராக அடிக்க வேன்டும்.

என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.