முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா - இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டி - என் கணிப்பு


இந்தியா - இங்கிலாந்து போட்டி நடக்கும் ஏகனா மைதான ஆடுதளம் சற்று மெதுவானது, அதனாலே அதிகமாக சுழலக் கூடாது என எண்ணி ஆடுதள அமைப்பாளர்கள் அதில் சற்று புற்களை விட்டு வைத்து மேலே ஒரு நிலை மண்ணைப் போட்டு உருட்டியிருக்கிறார்கள். அதனாலே மிதவேக வீச்சாளர்களுக்கு தையலில் பட்டு அசையும் (seam movement). இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இந்த ஆடுதளத்தில் வேகவீச்சாளர்கள் 7 போட்டிகளில் 52 விக்கெட்டுகளும், சுழலர்கள் 35 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது அதனால் தான். முதலில் மட்டையாடும் அணிகளின் சராசரி ஸ்கோர் 215. கடந்த முறை இங்கு ஆடிய போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக பந்துவீசிய காரணத்தாலே முதலில் மட்டையாடிய தென்னாப்பிரிக்கா 311 அடித்தது; அடுத்து பந்துவீசிய தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 177க்கு சுருட்டியது. ஏனென்றால் அது 250 ஸ்கோருக்கான ஆடுதளம் தான். அதனாலே இன்றைய போட்டியில் இந்திய அணி மூன்று வேகவீச்சாளர்களை எடுத்திருக்கிறது. அது நல்ல முடிவுதான்.

என்னுடைய கணிப்பு இந்த ஆடுதளத்தில் இந்தியா 250-275 எடுத்தால் அது வெற்றி இலக்காக அமையும் என்பது. ஆனால் இந்திய மட்டையாளர்கள் இதுவரை 300ஐ இலக்காக வைத்து வேகமாக அடிக்க முயன்று ஒற்றை, இரட்டை இலக்கங்களை நாடாமல் பவுண்டரி அடிக்க முயன்று, குறிப்பாக இறங்கி வந்து தூக்கி அடிக்க முயன்று, பந்து மெதுவாக வருவதாக உள்வட்டத்துக்கு உள்ளாகவே கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார்கள். இப்போது கூட அவர்கள் சற்று பொறுமையாக ஆடி 240-250 இலக்கை எட்டினாலே வெல்ல முடியும். அப்படி இலக்கை எடுத்தால் முகமது ஷமி இந்த ஆடுதளத்தில் நன்றாக வீசி குறைந்தது 3 விக்கெட்டுகளும், ஜடேஜா குறைந்தது 2 விக்கெட்டுகளும் எடுப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை, கொஞ்சமாக ஸீம் ஆகிறது, மெதுவாக வருகிறது என்பதால் இவர்கள் இருவருடைய பந்துவீச்சு பாணி எடுபடும் என நினைக்கிறேன்.

ஆனால் பெரிய இலக்கை எடுக்க முயன்று (இரவில் பனி அதிகமாக விழும் எனும் பயத்தில்) இந்தியா 220க்கு கீழே சுருண்டு விட்டால் இங்கிலாந்து சுலபத்தில் வெல்லும் என கணிக்கிறேன்.

இந்தியாவின் இலக்கு இப்போதைக்கு 40 ஓவர்களில் 180-200 என்பதாகவும், கடைசி பத்து ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வரை கொடுத்து 60-80 வரை எடுப்பதுமே நோக்கமாக இருக்க வேண்டும். அதுவே போதும் என நினைக்கிறேன். ரோஹித் பொறுமையாக 40 ஓவர் வரை நின்று ஆட வேண்டும். பவுண்டரிகளுக்காக அதிகம் முயலக் கூடாது. சுழலர்களை ஸ்வீப் பண்ணாமல் மிட் ஆப், மிட் ஆனை நோக்கி நேராக அடிக்க வேன்டும்.

என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...