முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளின் அரசியல்

 

தேர்தலின் கடைசி நாள் 6 மணிக்கு முடியவில்லை. தேர்தல் நாளன்று எட்டு மணி வரை மக்கள் தொடர்ந்து வாக்களிக்க வந்துகொண்டிருப்பது இயல்பே. ஆனால் நேற்றைக்கு கோ-டி மீடியா வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை அவர்கள் நேற்று காலையிலே முடித்து தொகுத்திருக்க வேண்டும். அது அப்படியே பாஜக தேர்தலுக்கு முன்பு கோரியதை பிரதிபலிப்பதைப் பார்க்கும் போது இந்த ஒட்டுமொத்த அபத்தத்தின் நோக்கம் என்ன எனும் கேள்விதான் எழுகிறது. "இது மோடிஜியின் மீடியாவின் மிகு கற்பனை" என ராகுல் காந்தி சொல்வது சரிதான் போல.
குறிப்பாக, வடக்கே இடங்கள் குறைந்து தெற்கே அதிகரிக்கும் என சொல்வது, தமிழகத்தில் பாஜக கூட்டணி 16 இடங்களை வரை வெல்லும் என்பதெல்லாம் நடக்குமா? இதெல்லாம் ஓவராக இல்லை?

இன்னொரு பிரச்சினை இது ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்கள் இடையே 0.02% மக்களிடம் மட்டும் எடுத்த கணிப்பு என்கிறார்கள். ஆனால் அதிக வாக்காளர்களிடம் கருத்துக் கேட்பது அவசியமல்ல என்று சி.எஸ்.டி.எஸ்ஸின் பேராசிரியர் சஞ்சய் குமார் சொல்கிறார். 1996இல் சி.எஸ்.டி.எஸ்ஸால் 17,604 வாக்காளர்களை கருத்துக்கணிப்பு செய்து கட்சிகளின் தொகுதி-வாரி வாக்குகளின் பங்கீட்டை துல்லியமாக கணிக்க முடிந்தது, இந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை பின்னர் ஊட்காங்களின் நெருக்கடியால் அதிகரிக்க நேர்ந்தது என்றும், அதன் பின்னர் தமது கணிப்புகள் சில நேரங்களில் பொய்த்துள்ளன என்று அவர் சொல்கிறார். பலவிதமான சாதி, மத, பொருளாதார நிலை, வயது, பாலின பின்னணிகளை சேர்ந்தவர்களை ஒழுங்காக பேட்டி கண்டால் மட்டுமே ஓரளவுக்கு துல்லியமான கணிப்பை நல்க முடியும் என்கிறார் அவர். பாஜகவுக்கு 370க்கு மேல் இடங்கள் கிடைக்கும் என சொல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்றினார்களா அல்லது கற்பனையாக வாக்காளர் கருத்துக்களை எழுதினார்களா அல்லது திரித்து சொல்கிறார்களா எனத் தெரியவில்லை.

ஒருவேளை இந்தியா கூட்டணி வெல்லும் என இவர்கள் சொல்லியிருந்தால் நாம் இதைக் கேட்டிருப்போமா? அது பொதுவாக நாடு முழுக்க உள்ள அதிருப்தி அலையை பிரதிபலிப்பதால் சற்று ஐயப்பாட்டுடன் ஒத்துக் கொண்டிருப்போம்.

இந்த கணிப்பு விசயத்தில் மூன்று பிரச்சினைகள்: இந்த கணிப்புகளை செய்ய முகமை நிறுவனங்களை அமர்த்திய டிவி ஊடகங்கள் ஏற்கனவே பெரும்பாலும் விலைபோய் விட்டவை. இவை தேர்தலுக்கு முன்பும் மோடிக்கு சாமரம் வீசியவையே. அடுத்து, இது தேசத்தில் உள்ள அதிருப்தி அலைக்கு நேர்மாறாக உள்ளது. கடைசியாக, என்ன மாதிரி முறைமையை பின்பற்றினார்கள், ஏன் கடைசி நாள் தேர்தல் 8 மணிக்கு முடியும் வரை அவர்கள் பொறுக்கவில்லை, ஏன் இன்று வெளியிடவில்லை, நேற்று வெளியிடும்படி ஏன் அவ்வளவு அழுத்தம் எனும் கேள்விகள் எழுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.