முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளின் அரசியல்

 

தேர்தலின் கடைசி நாள் 6 மணிக்கு முடியவில்லை. தேர்தல் நாளன்று எட்டு மணி வரை மக்கள் தொடர்ந்து வாக்களிக்க வந்துகொண்டிருப்பது இயல்பே. ஆனால் நேற்றைக்கு கோ-டி மீடியா வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை அவர்கள் நேற்று காலையிலே முடித்து தொகுத்திருக்க வேண்டும். அது அப்படியே பாஜக தேர்தலுக்கு முன்பு கோரியதை பிரதிபலிப்பதைப் பார்க்கும் போது இந்த ஒட்டுமொத்த அபத்தத்தின் நோக்கம் என்ன எனும் கேள்விதான் எழுகிறது. "இது மோடிஜியின் மீடியாவின் மிகு கற்பனை" என ராகுல் காந்தி சொல்வது சரிதான் போல.
குறிப்பாக, வடக்கே இடங்கள் குறைந்து தெற்கே அதிகரிக்கும் என சொல்வது, தமிழகத்தில் பாஜக கூட்டணி 16 இடங்களை வரை வெல்லும் என்பதெல்லாம் நடக்குமா? இதெல்லாம் ஓவராக இல்லை?

இன்னொரு பிரச்சினை இது ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்கள் இடையே 0.02% மக்களிடம் மட்டும் எடுத்த கணிப்பு என்கிறார்கள். ஆனால் அதிக வாக்காளர்களிடம் கருத்துக் கேட்பது அவசியமல்ல என்று சி.எஸ்.டி.எஸ்ஸின் பேராசிரியர் சஞ்சய் குமார் சொல்கிறார். 1996இல் சி.எஸ்.டி.எஸ்ஸால் 17,604 வாக்காளர்களை கருத்துக்கணிப்பு செய்து கட்சிகளின் தொகுதி-வாரி வாக்குகளின் பங்கீட்டை துல்லியமாக கணிக்க முடிந்தது, இந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை பின்னர் ஊட்காங்களின் நெருக்கடியால் அதிகரிக்க நேர்ந்தது என்றும், அதன் பின்னர் தமது கணிப்புகள் சில நேரங்களில் பொய்த்துள்ளன என்று அவர் சொல்கிறார். பலவிதமான சாதி, மத, பொருளாதார நிலை, வயது, பாலின பின்னணிகளை சேர்ந்தவர்களை ஒழுங்காக பேட்டி கண்டால் மட்டுமே ஓரளவுக்கு துல்லியமான கணிப்பை நல்க முடியும் என்கிறார் அவர். பாஜகவுக்கு 370க்கு மேல் இடங்கள் கிடைக்கும் என சொல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்றினார்களா அல்லது கற்பனையாக வாக்காளர் கருத்துக்களை எழுதினார்களா அல்லது திரித்து சொல்கிறார்களா எனத் தெரியவில்லை.

ஒருவேளை இந்தியா கூட்டணி வெல்லும் என இவர்கள் சொல்லியிருந்தால் நாம் இதைக் கேட்டிருப்போமா? அது பொதுவாக நாடு முழுக்க உள்ள அதிருப்தி அலையை பிரதிபலிப்பதால் சற்று ஐயப்பாட்டுடன் ஒத்துக் கொண்டிருப்போம்.

இந்த கணிப்பு விசயத்தில் மூன்று பிரச்சினைகள்: இந்த கணிப்புகளை செய்ய முகமை நிறுவனங்களை அமர்த்திய டிவி ஊடகங்கள் ஏற்கனவே பெரும்பாலும் விலைபோய் விட்டவை. இவை தேர்தலுக்கு முன்பும் மோடிக்கு சாமரம் வீசியவையே. அடுத்து, இது தேசத்தில் உள்ள அதிருப்தி அலைக்கு நேர்மாறாக உள்ளது. கடைசியாக, என்ன மாதிரி முறைமையை பின்பற்றினார்கள், ஏன் கடைசி நாள் தேர்தல் 8 மணிக்கு முடியும் வரை அவர்கள் பொறுக்கவில்லை, ஏன் இன்று வெளியிடவில்லை, நேற்று வெளியிடும்படி ஏன் அவ்வளவு அழுத்தம் எனும் கேள்விகள் எழுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...