முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரபியும் ஒட்டகமும்


ஈதினா தேர்தல் கணிப்பு நிறுவனத்தின் டாக்டர் வாசு நியூஸ்மினிட் யுடியூப் அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் பாஜக-ஜெ.டி.எஸ் கூட்டணி பற்றி ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பகிர்கிறார். வொக்கலிகா சமூகத்தை கவர்ந்து தென்கர்நாடகாவை வெல்வது பாஜகவின் நோக்கம். அதற்காக அவர்கள் கடந்த சில வருடங்களாகவே அச்சமூகத்தை கவரும் நோக்கில் நிறைய முயற்சிகளை எடுக்கிறார்கள்; கெம்பேகௌடா சிலை அமைப்பது,அச்சமூகத்திற்காக நிறைய நிதியை செலவிடுவது, அச்சமூகத்தை சேர்ந்தவரை கடந்த ஆட்சியின் போது துணைமுதல்வர் ஆக்கியது என. தென்கர்நாடகாவில் வலுவாக உள்ள ஆர்.டி.எஸ்ஸை பாஜக வீழித்தி அங்கு வளரத் தேவையில்லை, கூடவிருந்தே அக்கட்சியின் வாங்கு வங்கியை அவர்கள் கவர்ந்து கட்சியை செரிக்க முடியும் என டாக்டர் வாசு சொல்கிறார். குறிப்பாக, பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார வழக்குக்குப் பின்னர் ஹசனில் அவர் தோற்பது சாத்தியமாகும் எனில் அதை பயன்படுத்தி ஹசனில் ஜெ.டி.எஸ்ஸை பாஜக முழுங்கிவிட்டு அதனிடத்தில் ஒரு பெரிய கட்சியாக மலரும் என்கிறார்.
ரேவண்ணாவின் பலாத்கார காணொளிகளை பென் டிரைவில் மக்களிடம் பரப்பியவர்கள் காங்கிரஸ் அல்ல, பாஜகவினரே என ஒரு பேச்சு ஓடியது. ரேவண்ணாவின் ஓட்டுநரும் அந்த பென் டிரைவை தான் பாஜக தலைவர் ஒருவரிடம் அளித்ததாக சொன்னார். தன் கூட்டணி கட்சியின் முக்கிய வாரிசை ஏன் பாஜக வீழ்த்தி, தேர்தலில் ஒரு இடத்தை இழக்க வேண்டும்? இது ஒருவேளை பாஜகவின் உள்முரணின் விளைவோ, ஹசன் தொகுதியைப் பெற முடியாத ஆத்திரத்தில் பாஜக தலைவர் செய்த சூழ்ச்சியோ இது என பலரும் கருதினார்கள். ஆனால் இப்போது அது முழுக்க பாஜக தலைமையின் திட்டமிடலே என அம்பலமாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் தன் கட்சி பாஜகவுடன் இணையுமா எனக் கேட்ட போது வாய்ப்பே இல்லை, கூட்டணி மட்டும் தான் என குமாரசாமி சொன்னார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது இப்படி ஒரு ஆப்பு தன் கட்சிக்கு தயாராகிறது, ரேவண்ணாவை வைத்தே அடித்து காலி பண்ணப் போகிறார்கள் என அவர் கற்பனை செய்திருக்க மட்டார். அவருக்கு ரேவண்ணாவை ஒரேயடியாக நீக்கவும் முடியவில்லை, பாஜகவை கண்டிக்கவும் இயலவில்லை, முழுங்கவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை. ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த அரபியின் நிலையே தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...