Skip to main content

மர்ம தேசம்

ஜூன் 4க்குப் பிறகு பாஜக எப்படி நடந்துகொள்ளும் என்பதைப் பற்றின கணிப்புகள் எனக்கு எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா-சஞ்சய் அணி காங்கிரஸ் கட்சியையும் ஊடஙகளையும் ஒரேயடியாக கட்டுப்படுத்தி எந்த உண்மை செய்திகளும் மக்களுக்கு போய் சேர விடாமல் தடுத்து ஒரு பூடகமான, மர்மமான சூழலை உருவாக்கியதை நினைவுபடுத்துகிறது. இந்திரா சட்டம் மூலமாக கடும் ஊடக தணிக்கையை கொண்டு வந்தார் எனில் மோடி-ஷா ஊடகங்களின் பங்குகளை விலைக்கு வாங்கி, அமலாக்கத் துறையை ஏவிய அச்சுறுத்தியும், ஓசி விளம்பரங்களைக் கொடுத்தும் அனேகமாக எல்லா ஊடகவியலாளர்களையும் ஊடக முதலாளிகளையும் மறைமுக தணிக்கை செய்துவிட்டார்கள். ஒட்டுமொத்த தேசமும் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் கையறு நிலையில் இருக்கிறது. வாக்களிப்பதுடன் மக்களின் பங்கு முடிவதில்லை, ஜனநாயக விழுமியங்கள் பேணப்பட்டு அடுத்த அரசு ஒழுங்காக அமைவதையும் உறுதிபடுத்த வேண்டும் என சில சிவில் அமைப்புகள் கோரும் நிலை வந்திருக்கிறது. ராணுவ ஆட்சி, வாக்கு எந்திரங்களை கைப்பற்றுவது போன்ற புரளிகளும் பரவுகின்றன. இந்திராவின் எமெர்ஜென்ஸியின் போது அவர் அமெரிக்க சதியுடன் தன்னைக் கொல்லும் சதித்திட்டம் உள்ளது எனத் தொடர்ந்து பேசி வந்ததுடன், தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுக்கு நிதியளிப்பது அமெரிக்க உளவுத்துறையே என்றார். இது போக தேர்தலில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்களை அவர் கடைசி சில வாரங்கள் வரும் வரை அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லா எதிர்க்கட்சியினரும் சிறையிலிருந்த நிலையிலே ஒரு அரசியல் எழுச்சி நிகழ்ந்து இந்திரா ஆட்சியை இழந்தார். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது அங்குள்ள ஜெர்மானிய பிரஜைகளுக்கு இரண்டாம் உலகப்போரின் போது அவர்களுடைய தேசம் பல மாதங்களாக தோல்வியைத் தழுவி வரும் உண்மை தெரிவிக்கப்படவில்லை. ஹிட்லர் வீழ்ந்த பின்னரே அவர்கள் அதிர்ச்சியடைந்து என்ன நிஜமாகவே நாம் தோற்றுவிட்டோமா எனக் குழம்பியதாக சொல்வார்கள். கடந்த முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்ற பிறகும் அவரது ஆதரவாளர்களுக்கு அவர் வென்றுவிட்டதாகவே சொல்லப்பட்டது, அவர்கள் அதனாலே அவரது தோல்வியை ஏற்காமல் கலவரம் பண்ணினார்கள், டிரம்பும் கடைசி வரை அதை ஏற்க தலைப்படவில்லை. மோடி ஆண்ட் கோவின் நடவடிக்கைகளும் இப்படியே உள்ளன.
என்ன பிரச்சினையெனில் இந்திராவோ ஹிட்லரோ டிரம்போ இப்போது மோடியோ தோல்வியை ஒப்புக்கொண்டால் தலைபோகும் எனும் அளவுக்கு குற்றங்களை, மோசடிகளை இழைத்திருக்கிறார்கள், ஊழல் செய்திருக்கிறார்கள், தோல்வி என்றால் முடிவு எனும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். இது சர்வாதிகாரிகளின் உளவியல் மற்றும் நடத்தை. அவர்களுடைய உளச்சிதைவு ஒரு தேசத்தின் மனநிலையாகவும் பீதியாகவும் மாற்றப்படுவதே அவலம்.
வரலாற்றில் நாம் காணும் இன்னொரு வினோதம் சர்வாதிகாரிகளை வலதுசாரி நிறுவனங்களுடன் முதலீட்டாளர்களின் லாபி ஒன்றும் சேர்ந்தே எப்போதும் வளர்த்தெடுக்கிறது என்பது. (இந்திரா மட்டுமே இதில் விதிவிலக்கு; எதிர்க்கட்சிகளுக்கு நிதியளித்து அவரை வீழ்த்த முயன்ற இந்த லாபி மீதான அச்சத்தாலும் தன் பதவி ஆசையாலும் அவர் சர்வாதிகார லட்சணங்களை வெளிப்படுத்தினார்.) இந்த முதலீட்டிய லாபியும் ஸ்தாபனங்களும் இவர்களை தற்காலிகமாக கைவிட்டால் தோல்விக்குப் பின்னர் மக்கள் இவர்களை மன்னித்து ஏற்பதும் நடக்கவே செய்கிறது. ஹிட்லரை அவரது வீழ்ச்சிக்குப் பின்பும் ஜெர்மானியர்களில் பெரும்பகுதியினர் சுலபத்தில் வெறுக்கவில்லை. ஆனால் போகப் போக அவரை மறந்துவிட்டார்கள். அவர் இறந்து போகாமல் தேர்தலில் நின்றிருந்தால் ஜெயித்திருப்பாரா என்பதும் சந்தேகமே. ஆனால் இந்திராவும் மீண்டு வந்தார். அவர் உண்மையான தலைவர்.

டிரம்பு இப்போது முழுமையான காணாமல் போய்விடவில்லை. பாலியல் வழக்குகள், மோசடி வழக்குகளுடன் போராடிக்கொண்டு தன் ஆதரவாளர்களையும் அரவணைத்து தான் போகிறார். ஆனால் மோடிக்கு இந்த முதலீட்டாளர்கள், ஊடக, ஸ்தானப ஆதரவுக்கு வெளியே ஒரு மக்கள் ஆதரவு உண்டா என்று எனக்கு சந்தேகம் உண்டு. ஏன் பிரச்சினை வரும் போதெல்லாம் அவர் மக்களின் பிரச்சினையை பேசாமல் அம்பானி, அதானிகளுக்கு சாதகமான கூடுதல் முடிவுகளை எடுப்பது, கோயில் கட்டுவது, வேடம் போடுவது என மீண்டும் ஊடகங்களயே சார்ந்து நிற்க நேர்கிறது? அவர் ஹிட்லரைப் போல ஒரு வெற்று பிம்பமோ எனும் சந்தேகம் எழுகிறது? இல்லாவிடில் அவர் ஏன் உண்மையை (பணவீக்கம், வேலையின்மை, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, அதிக வரிகள்) எதிர்கொள்ள விரும்பாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...