முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருமுனைக் கத்தி அரியணை ஆகுமா?


காங்கிரஸ் கட்சியின் ஊடக சந்திப்பில் தேர்தல் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளின் ஆதரவை ஆட்சி அமைக்கத் தேடுவீர்களா என நிதீஷையும் சந்திரபாபு காருவையும் மனத்தில் வைத்து ஒரு பத்திரிகையாளர் கேட்க ராகுலும் கார்க்கேவும் நாளை கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்து முடிவெடுப்போம் என்றார்கள். சமயோஜிதமான முடிவு.
ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கும். கூட்டணிக்கு வெளியே இருந்து வந்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்தால் உள்ளே இருக்கும் கட்சியினர் கோபித்துக் கொண்டு போய் விட்டால் பஞ்சாயத்தாகி விடும். ஏற்கனவே மம்தாவும், ஸ்டாலினும் தில்லிக்குப் போகவில்லை. ஆக அவர்களிடமும் கேட்டுவிட்டு பகிர்ந்து முடிவெடுப்பதே ஆதாயம்.
இது காங்கிரஸை விட மோடி-ஷா தலைக்கட்டுகளுக்கே பெரிய குடைச்சலாக இருக்கும். நிதீஷைப் போன்றவர்கள் சும்மாவே ஆனையைக் கொடு, பூனையைக் கொடு எனக் கேட்பார்கள். காங்கிரஸ் எதையும் இழக்கப் போவதில்லை. அவர்கள் பரிசீலிக்கலாம். ஆனால் நம் தலைக்கட்டுகளுக்கு அது ஆபத்தானது. பொம்மை அமைச்சரவையை ஆட்டி வைத்துக்கொண்டு விமானத்தில் பறந்து, பாராளுமன்றத்தில் தலைகாட்டாமலும், மொத்த வருமானத்தையும் தானும் கூட்டாளியுமாக ஆட்டையைப் போட்டதெல்லாம் இனி சாத்தியப்படாது. ரொம்ப காரசாரமான போட்டியாக இருக்கும். லாபம் நிதீஷ் மற்றும் பாபு காருவுக்குத் தான்.
தலையைக் கொடுத்தாவது பாஜக ஆட்சியமைக்கும், பின்னாளில் அதிகாரம் நிலைப்பெற்றதும் சில கூட்டணி எம்.பிக்களை விலைக்கு வாங்கி தம் கட்சியில் சேர்த்து மாநில கட்சியினரை பஞ்சராக்கி ஜம்பமாக உட்கார பார்க்கும் என்றாலும் கூட மோடி ஜிக்கு திக்திக்கென்றே இருக்கும். ஒருவிதத்தில் மோடியின் ஜம்பம் குறைவது, ஷாவின் ஆட்டம் கட்டுக்குள் வருவது மக்களுக்கு நல்லது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினுள் மோடியை விரும்பாத அணிகளுக்கும் நல்லது. அவர்கள் வளர்ந்து வர முடியும்.
என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளுக்கோ காங்கிரஸ் கூட்டணிக்குப் போனால் கிடைக்கும் பெரும் அதிகாரம், சுதந்திரம், பாதுகாப்பு ஒரு போதும் பாஜக கூட்டணியில் இருக்காது. அடுத்த தேர்தலுக்குள் பாபு காருவை காலி பண்ணி நிதீஷையும் முழுங்கி விடவே பாஜக முயலும்.
காங்கிரஸுக்கும் கூட்டணி அமைப்பதில் சிக்கல் உள்ளது. ஆட்சி சரியாக அமையாமல் நிதி நிலைமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகமானால் அது அடுத்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பாதிக்க கூடும். ஏனென்றால் மக்கள் இதை காங்கிரஸின் கூட்டணி அரசென்றே பார்ப்பார்கள். ஜெ மறைவுடன் திமுக அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தில் அமர வாய்ப்பிருந்தது. ஆனால் அதனால் பாஜகவிடம் தாம் சிக்கி சீரழிய நேர்வதுடன், மக்களிடம் பெயர் கேட்டுப் போக நேரும் என்பதால் ஸ்டாலின் பொறுமை காக்க முடிவெடுத்தார். அது அவருக்கு பயன் தந்தது. இன்னொரு பக்கம் ஸ்டாலினுக்கு அன்றிருந்த நிச்சயத்தன்மை, தன்னம்பிக்கை, நிர்வாக கட்டமைப்பு, கட்சி வலிமை, நிதியாதாரம் காங்கிரஸிடம் இன்று இருக்கிறதா? இல்லை. அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருந்தால் அன்று இந்த எதிர்ப்பலை இருக்குமா? அன்று இந்த கூட்டணிக் கட்சிகள் அவர்களுடன் இருப்பார்களா? நிதியாதாரம் இருக்குமா? இதை பிரியங்காவே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அதிகாரத்தில் இல்லாமல் போனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவநம்பிக்கையில் சோர்ந்து போவதுடன் வேலை பார்க்காமலே இருப்பார்கள். ஏற்கவே காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையிலே இந்த தேர்தலை சந்தத்தது. ராகுலும், தென்னக கட்சித்தலைமைகளுமே காங்கிரஸை செலுத்தினர்.
இது காங்கிரஸுக்கு இருமுனைக் கத்தி. எந்த பக்கம் அமர்ந்தாலும் டவுசர் கிழியும். சில கட்சிகளின் தன்னலத்தை பயன்படுத்தியும் வேறு சிலரை சமாதானப்படுத்தியும் கூட்டணி அமைத்து அந்த ஆட்சியில் அதிர்ஷ்டவசமாக நல்ல வளர்ச்சியும் ஏற்பட்டு விட்டால் மட்டுமே அந்த ஒரு முனை வசதியான அரியணையாகும். அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...