முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்" - ஒரு பார்வை - ரமேஷ் மாணிக்கம்

// Ramesh Manickam
5.0 out of 5 starsVerified Purchase
எனது பார்வையில்......
Reviewed in India on 14 October 2021
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர் அபிலாஷின் கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் நாவலை கிண்டிலில் படிக்க வாய்த்தது.
இது ஒரு துப்பறியும் நாவல். துப்பறியும் நாவல் என்றாலே, வாசகனை துப்பறிவாளனாக்கி விடுவதில்தானே அதன் வெற்றியிருக்கிறது. அதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல துணிகிறேன்.

கதையை நீங்கள் இப்படி அணுகலாம்.இப்போது ஒரு பெரிய கேன்வாஷை கற்பனை செய்து கொள்ளுங்கள். கதையின் ஆரம்பத்தில் கை விரல்கள் காட்டப்படுகிறது. விரல்கள் ஒவ்வொன்றாய் வெட்டப்படுகிறது. தனித்தனியாக ஒவ்வொரு விரலும் வெட்டப்படுகிறது. அனைத்தும் வெட்டப்பட்ட பிறகு, வெட்டப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் கசிவதை உணர்கிறீர்கள். ஆம் வெட்டப்பட்டவை உங்கள் விரல்கள் தான். அங்கு வழிவது உங்கள் இரத்தமேதான்.
இப்போது உங்களுக்கு ஒரு திறப்பு ஏற்படுகிறது. மீண்டும் மெல்ல நடந்ததை ஒரு முறை ஓட்டிப் பார்க்கிறீர்கள். நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் அடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதும் நீங்கள் கதையின் தலைப்பை நினைவுபடுத்திக் கொள்ள தூண்டப்படுவீர்கள் அல்லது உங்கள் நிகழ்காலம் உங்களை அங்கே செலுத்தும்.
நிகழ்வுகளில் தொடர்பின்மையும் அல்லது ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத தன்மையும் சிறிய அளவில் நெருடுகின்றது. ஆனாலும் கதையின் சுவாரசியத்தில் பெரிய அளவில் குறைவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
கதையை படித்து முடித்து பின்னர் எனக்கு ஜெயமோகனின் "இரவு" நாவல் நினைவிற்கு வந்தது. பார்வையாளனாய் வந்து
இரவு வாழ்க்கைக்கு பழகி விடும் கதாநாயகனை போல், இந்த சமூகம் நம்மை, நம் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கின்றது?, எங்கே நாம் main stream வாழ்க்கையிலிருந்து விலகுகிறோம் ?,விலகியதிலிருந்து எப்படி நாம் பெரும்பான்மை வாழ்க்கைக்கு திரும்புகிறோம்? என்பதையும் நாமே சிந்திக்கவும் வழிவகை செய்கிறது.
வாய்ப்பிருப்பின் ஒருமுறை பிழை திருத்தம் செய்யவும். இறுதியாக வாழ்த்துகள் அபிலாஷ்! //

கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்: நாவல் (Tamil Edition) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...