இம்மாத உயிர்மையில் வந்துள்ள என் நேர்முகத்தில் இருந்து: "நான் என்னை ஒருவித எதிர்விசையாக கருதுகிறேன். என்னை வலப்பக்கமாக திருகி விட்டால் நான் இடப்பக்கமாக இரட்டி வேகத்தில் சுழல்வேன். எனக்கு சதா எதிர்ப்பதற்கு, மறுப்பதற்கு எதாவது ஒன்று இருந்து கொண்டிருக்க வேண்டும். (...) பெரும்பான்மைத் தமிழக மாநிலங்களில் உள்ள உறவுகள் சார்ந்த செண்டிமெண்டுகள், அரசியல், சினிமா, கடவுள், மதம் சார்ந்த மிகையுணர்ச்சி எங்கள் ஊரில் இல்லை. எங்கள் மக்கள் கோயிலுக்குள் நின்றபடியே இயல்பாக பூசாரியையும் கடவுளையும் கலாய்ப்பார்கள், தேவாலயத்திற்குள் இருந்து போதகரை பகடியாக பார்ப்பார்கள்."
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments