முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பகற் கொள்ளை


 

மக்களால் நிலத்திலோ வங்கியிலோ பணத்தைப் போட்டு வைக்க முடியாதபடி பொருளாதாரம் வீங்கி விட்டது; எல்லா இடங்களிலும் வரியை அதிகரிக்கிறார்கள். ஓய்வூதிய திட்டமென ஒன்று அரசிலோ தனியார் நிறுவனங்களில் இன்று இல்லை. எதிர்காலம் குறித்த கவலைகள், நிலையாமை குறித்த பதற்றமும் சேர்ந்து மக்களை குழப்பமான நிலையில் தள்ளுகின்றன. மக்கள் பின்வாசல் வழியாகத் தப்பிக்கலாம் என்று போகும் போது அங்கு அவர்களை மடக்கிப் பிடிக்க போலி நிதி நிறுவனங்கள் நிற்கின்றன. 14, 346 கோடி என்பது சாதாரணத் தொகை அல்ல. நிச்சயமாக அதிகாரிகளின் (கூடவே 'அரசியல்வியாதிகளின்'), காவல்துறையின் அனுமதியுடனே, பங்களிப்புடனே இந்த முறைகேடுகள் நடக்கின்றன. இதுவரை தமிழ்நாட்டில் நடந்த மோசடிகளில் திருடப்பட்ட பதினாலாயிரம் கோடிகளில் ரெண்டாயிரம் கோடிகளையாவது அவர்கள் முழுங்கி இருப்பார்கள்.

நவீன இந்தியாவின் மிகச்சிறந்த தொழிலே நிதி மோசடி தான் - மக்களை ஏமாற்றிப் பறிப்பது, சவுக்கு ஸ்டைலில் தொழிலதிபர்களை மிரட்டிப் பறிப்பது, கறுப்புப் பணம், வங்கியில் இருந்து பல ஆயிரம் கோடிகளை சுருட்டுவது - இதற்கெல்லாம் பெரிய தண்டனைகளோ கட்டுப்படுத்த வலுவான சட்டங்களோ இல்லை. நிதி மோசடியை ஒரு குற்றமாக ஊடகம் காட்டுவதோ குற்றவாளிகளை விமர்சிப்பதோ இல்லை. மாறாக அவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களை அரசியல் தலைவர்கள் பஞ்சாயத்து பண்ணி மிரட்டினால் கட்சியின் தலைவர் என்றும் பாராமல் வாடகைக் கொலையாளியை வைத்து ஆளைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களே கட்சியொன்றை உருவாக்கி ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன்.
இதற்கு உண்மையான தீர்வு வங்கி இருப்புத் தொகைக்கான வட்டியை அதிகரித்து ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை , ஜி.எஸ்.டி வரிகளைக் குறைத்து மக்களை நியாயமான இடங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பதே. நிதி நிறுவனங்களை அரசின் கூட்டுறவிலே செய்ய முடியும் எனும்படி சட்டத்தை மாற்ற வேண்டும். அது ஒரு பாதுகாப்பை அளிக்கும். இப்போது நடப்பது அரசு அதிகாரிகளின், 'அரசியல்வியாதிகளின்' உதவியுடன் நடக்கும் பகற்கொள்ளை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...