முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் சாதி எதிர்ப்பு சினிமா

சாதி ஒழிப்பு படங்கள் சாதி எதிர்ப்பு படங்களாக மாறியதும் சமூகத்தில் கெட்ட சாதி vs களங்கமற்ற நல்ல சாதி என இருமையை உண்டுபண்ணி அதன் அடிப்படையில் வெறுப்பரசியலை உண்டுபண்ணி அதன் மேல் மதவாத அரசியல் சோஷியல் இஞ்சினியரிங் செய்ய உதவும் மூன்றாம் அணி அரசியல் புரோஜெக்ட்களாக மாறின. அதற்கு தெம்பூட்டும் விதமாக சுயசாதிப் பெருமையும் சாதி எதிர்ப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகின. அதற்கு வரலாற்றை திரும்ப சொல்லுதல் எனப் பெயரும் அளித்தோம். இது அடிப்படையில் ஒரு சீரழிவுதான். இதற்கு அந்த காலத்து இடதுசாரி கலகப் படங்களே மேல். அவை எல்லா தரப்புகளையும் உள்ளடக்கி அசல் பொருளாதார, வர்க்கப் பிரச்சினைகளைப் பேசின. அவற்றுக்கு ஆளுங்கட்சி சார்பு அரசியல் நிலைப்பாடும் இருக்கவில்லை. புரோஜெக்ட் வேல்யூவும் இருக்கவில்லை. அப்போது இயக்குநர்கள் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கமாக இருக்கவும், அரசியல் கனவுகள் காணவும் தலைப்படவில்லை. அப்போது அவர்கள் கூட்டம், பேரணி நடத்தவும், அறிக்கை விடவும், அரசியல் செய்திகளை, தலைவர்களை, கொள்கைகளை தம் வியாபாரத்துக்கு பயன்படுத்தவும் இல்லை.

மலினமான அர்த்தமற்ற வணிகப் படங்கள் கூட இவ்வளவு விஷமத்தனமாக இல்லையெனும்படியாக நிலைமை மாறியிருக்கிறது. சமூகவலைதள குழுக்களுக்கும் இதில் முக்கிய பங்குள்ளது. மகத்தான விசயங்களை இப்படித்தான் நம் சுயநலத்துக்காக சேற்றில் புரட்டி நாசமாக்குகிறோம்.
தமிழில் இப்படியென்றால், ஒன்றியத்தில் தேசியவாத, மதவாத அரசியலை படமாக்கும் இயக்குநர்களும் இதையேதான் செய்கிறார்கள். இரண்டு தரப்புகளையும் ஆசீர்வதிக்கும் மாயாவியின் கரங்கள் எவருடையவை?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.