முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிதீஷ் குமார் ரெட்டியும் மிச்ச அணியும்

 


நிதீஷ் குமார் ரெட்டி கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார்தான் - அவரது நிதானம், பின்னங்கால் ஷாட்கள், அம்பத்தி ராயுடு பாணியில் மட்டையைப் பிடித்து தடுக்கும், அடிக்கும் நளினம், பந்துக்கு சில மைக்ரோ நொடிகள் முன்பே தயாராகும் திறமை, கைகள் பந்தைச் சந்திக்கும் - கிட்டத்தட்ட தோனியிடம் கண்ட - வேகம் என பல விசயங்கள் இன்றைய சதத்தில் கவர்ந்தன. அவரைப் பார்க்க 28 வயதான வீரரின் முதிர்ச்சி தெரிகிறது. 21 வயதைப் போன்றே இல்லை. அவர் சதம் அடித்தபின்னர் ஒரு காலை மடித்து அமர்ந்து பொறுமையாக தலைக்கவசத்தை மட்டை மீது வைத்து அழகு பார்த்து கையை உயர்த்தி கொண்டாடியது கவித்துவமாக இருந்தது. ஏதோ சீரியல் கில்லர் தன் வசமுள்ள எலும்புக் கூட்டை ஒழுங்குபடுத்திப் பார்ப்பதைப் போல அல்லது மனத்தை ஒருமுகப்படுத்தி நிதானமாக இரு என அவர் தனக்கே சொல்லிக்கொள்வதைப் போல.

இன்னொரு பக்கம், நிதீஷ் குமாரின் இந்த பொறுமை ரிஷப் பண்டிடம் இருந்தால் அவர் இந்நேரம் கூடுதலாக பத்து சதங்கள் எடுத்திருப்பார். டி20யில் கேப்டன் கூட ஆகியிருப்பார். கடந்த நியுசிலாந்து தொடரில் பண்ட் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆடினார். ஆனால் அப்போதே அவர் தன் உடற்தகுதியிலும், விளைவாக கீப்பிங்கிலும் திணறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த ஆஸி பயணத்தின்போது எனக்கு பண்டின் உடற்தகுதி குறிதது கேள்விகள் இருந்தன - அவருக்கு முதுகிலோ முட்டியிலோ ஏதோ பிரச்சினை இருக்கிறது, அதனால்தான் 50 பந்துகளுக்கு மேல் நின்றாட அவர் தயங்கி சீக்கிரமாக அடித்துமுடித்துக் கிளம்ப விழைகிறார். இன்று அவர் ஸ்கூப் அடிக்கப் பார்த்து அவுட் ஆகி கவாஸ்கரிடம் கடுமையாகத் திட்டுவாங்கினார். "முட்டாள் முட்டாள், இப்படியா ஆடுவது? நிலைமையைக் கருத்திற் கொள்ள வேண்டாமா, களத்தடுப்பு அமைப்பைப் பார்க்க வேண்டாமா?" என்றெல்லாம் சீறிய கவாஸ்கர் பண்ட் நியாயமாக ஆஸி டிரெஸ்ஸிங் ரூமுக்கே போகவேண்டும் என்றார். இத்தொடரில் பண்டுக்கு ஓய்வளித்துவிட்டு ஜூரலை ஆட வைத்திருக்க வேண்டும். ரோஹித் நியுசிலாந்து தொடருடன் ஓய்வறிவித்திருக்க வேண்டும். அவர் காயத்தில் இருந்து திரும்பிய பின்னர் ரொம்ப அதிகமான போட்டிகளை ஆடிவிட்டார். என்னதான் அவரே விரும்பியிருந்தாலும் அவருக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்திருக்கவேண்டும். வெற்றிபெறும் நோக்கமன்றி சமாளிக்கும் உத்தேசத்துடன் வீரர்களை அணியில் எடுத்தால் இப்படித்தான் ஆகும்.
கிரிக்கெட் திறமை அளவுக்கு உடற்தகுதி, உடல்-மன ஆற்றல், புத்துணர்ச்சி அவசியமானது. நிதீஷ்குமார் ரெட்டிக்கும் ரோஹித், பண்ட், கோலி, சிராஜுக்கும் அதுதான் வித்தியாசம். பும்ரா என்னதான் களைத்திருந்தாலும் அவரது அணித்தலைமை குறித்த கனவு அவரைச் செலுத்துகிறது. அதனால் வெறியுடன் வீசுகிறார். இத்தொடரில் அவர் பின்வாங்கியிருந்தால் அணித்தலைமையை கில் / ராகுலுக்கு கொடுத்திருப்பார்கள்.
நான்காவது டெஸ்ட் ஆட்டத்தை நிதீஷும் வாஷிங்டனும் ஓரளவுக்கு காப்பாற்றியிருக்கிறார்கள் என்றாலும் நிதீஷால் இன்னொரு ஐம்பது ரன்களை எடுக்க முடிந்தால் மட்டுமே ஆஸி அணி பின்னங்காலுக்குப் போவார்கள். ஆட்டம் டிராவை நோக்கிப் போகும். அல்லது ஆடுதளம் தலைகீழாக மோசமானால் ஆட்டம் முடிவை நோக்கிப் போகும். 350 மேல் ஆஸி அணி எடுத்து இந்தியாவை நாளை மாலைக்குள் கடைசி செஷனில் ஆட வைத்து பந்து மேலும் கீழுமாகச் சென்றால் அவர்கள் வெற்றியடைவார்கள். 270க்குள் இலக்கை இந்தியா விரட்டினால், ஆடுதளமும் தொடர்மழை, வெயிலற்ற மந்தநிலை காரணமாக இப்படியே தட்டையாகத் தொடர்ந்தால் இந்தியா சுலபத்தில் வெல்லும். ஆனால் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் கடுமையாகப் போராடும் என்றும், மழையும் கூடத் துணை வந்தால் டிராவுக்கான வாய்ப்பு பிரகாசம் என்றும் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.