முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்ணாமலையின் ஊடக சந்திப்பு

 இந்த ஊடக சந்திப்பு ரொம்ப வேடிக்கையாக, ஜாலியாக இருந்தது. எட்டு வருடங்கள் காவல்துறையில் குப்பை கொட்டினேன் என்கிறார், தேசியக் கட்சியில் மாநிலத் தலைவராக நான் ஏன் குப்பை கொட்டவேண்டும் என்கிறார். "ரோட்டுக்கு வந்து போராட்டம் பண்ணினால் அப்படியே ஆயிரம் போலீசை அனுப்பி அமுக்கி கல்யாண மண்டபத்தில வச்சிருவீங்க. இனிமேல் அப்படிப் போராட்டம் பண்ண நாங்கள் தயாராக இல்லை, போராட்டம் பண்ணாத்தானே அரெஸ்ட் பண்ணுவீங்க?" என்று அவர் கேட்டபோது நான் சிரித்துவிட்டேன். நூதனமாக ஒரு புதிய உத்தியை அறிவித்தார், "எல்லா தொண்டர்களும் தம் வீட்டுக்கு முன் நின்று போராடுவார்கள்". வீட்டுக்கு முன்னால் போய் நிற்பதெல்லாம் போராட்டமா? வீட்டுக்கு வெளியே வராமால் ஒருவரால் வீட்டுக்குள்ளேயா இருக்க முடியும்? எத்தனை பேர் தினமும் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களையும் போராட்டக்காரர்களையும் மக்கள் எப்படி கண்டுகொள்வார்கள்? அப்படியே எதாவது பதாகையைப் பிடித்து செல்பி எடுத்தாலும் அது ஏதோ சாதா செல்பியைப் போலத்தான் இருக்கும். அதெல்லாம் போராட்டமா? தலைகீழாக நின்று போராடினால் கூட வித்தியாசமாக இருக்கும். எளிய மக்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாகப் போராடுகிறார்கள். இவர் ஏன் இப்படி உளறுகிறார் என விழுந்து புரண்டு சிரித்தேன். கடைசியாக அவர் சாட்டையால் ஆறுமுறை அடித்துக்கொள்வேன் என்று சொன்னதுதான் முத்தாய்ப்பு. அதைச் செய்துவிட்டாரா? காணொளி இருந்தால் பகிருங்கள்.

செருப்பில்லாமல் எப்படி பேரணியின் போது வெயிலில் நடப்பார்? தேர்தல் பிரச்சாரத்தின் போது என்ன செய்வார்? ஒருவேளை இனி பேரணியே போவதில்லை என முடிவெடுத்துவிட்டாரா?
அண்ணாமலை திரும்ப வந்தாலே அரசியல் ரொம்ப ஜாலியாக காமிடியாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.