முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மடியில் விழுந்த வாய்ப்பைத் தவற விட்ட இந்திய அணி


ஆஸ்திரேலியா இன்றைய நாளின் கடைசி அரைமணி நேரத்தில் டிக்ளேர் பண்ணி பந்துவசியிருந்தால் ரோஹித்தையும், எண் 3இல் வரக்கூடிய நைட் வாட்ச் மேனையும் தூக்கியிருக்கலாம். ஆட்டம் ரொம்ப சுவாரஸ்யமாகப் போயிருக்கும். ஆனால் அவர்கள் ஸ்டார்க்குக்கு காயமுற்றிருப்பதால் கமின்ஸையும், போலாண்டையும் வைத்து வீசும் நிலைமையில் இருப்பதாலும், லயனுக்கு பந்து திரும்பவில்லை என்பதாலும், ஆடுதளம் முதல் 50 ஓவர்களுக்கு மட்டையாட சுமாராகவும், அதன் பிறகு வெகு எளிதாகவும் இருப்பதால் இந்தியாவுக்கு 300 இலக்கைத் தர விரும்பவில்லை. லயனும் போலண்டும் மரண கட்டை வைத்திட அவர்களையே வீழ்த்த முடியவில்லை எனும்போது ஆடுதளம் எவ்வளவு தட்டையாகியிருக்கிறது என்று தெரியும். இந்தியா மட்டையாடும்போது கூட ரோஹித், பண்ட், ஜெய்ஸ்வால், கோலி ஆகியோர் விக்கெட்டுகளை அள்ளி வீசியிருக்காவிடில் அவர்களும் 450ஐ தாண்டியிருப்பார்கள். இந்த ஆடுதளம் நினைத்தபடி மேலும் கீழுமாக பவுன்ஸ் கொள்ளவோ உடையவோ இல்லை, திரும்பவும் இல்லை. மழை அல்லது சீதோஷ்ண நிலை காரணமாக அது போதுமானபடிக்கு காயவில்லை, கீழ் அடுக்குகள் உறுதியாக உள்ளன என நினைக்கிறேன். ஆடுதள அமைப்பாளர் சிறிது புற்களை விட்டுவைத்திருந்ததாலே இந்தளவுக்காவது விக்கெட்டுகள் விழுந்தன. அல்லது ஆஸ்திரேலியா 650 அடித்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் வழக்கம்போல ஆஸ்திரேலியா மோசமாக ஆடினார்கள் அல்லது பும்ரா மிகப்பிரமாதமாக வீசினார். புதுப்பந்தில் முதல் 30 ஓவர்களில் கிடைக்கும் சீம் அசைவை சிராஜும் நன்றாக பயன்படுத்தி களத்தடுப்புக்கு ஏற்ப வீசினார்கள். ஆனால் 170க்கு 9 விக்கெட்டுகளைக் கொடுக்குமளவுக்கு மோசமான ஆடுதளமல்ல இது. அதை அவர்களே உணர்ந்து 8-11 வரையிலான டெயில் எண்டர்களைக் கொண்டு தடுத்தாடி சுதாரித்தார்கள். இன்னொரு விசயம், கடைசி மூன்று விக்கெட்டுகளுக்கு ரோஹித் களத்தைப் பரப்பி ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சுலபமாகக் கொடுப்பதும் ஒரு பிரச்சினை. ரோஹித்தின் தலைமை இப்படித்தான் மரணப்படுக்கையில் கிடப்பவரின் கடைசி மூச்சுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளைப் போல மசமசவென்றே உள்ளது. ஆட்டத்தை அதன்போக்கில் விட்டு ஊர், உலகம் பற்றியெல்லாம் நினைத்துக்கொண்டு நிற்கிறார். நிலைமை கைமீறிப் போனதும் களத்தடுப்பாளர்களை உள்ளே கொண்டு வந்து தாக்க முயல்கிறார். ஒரு தலைவராகவும் ரோஹித்தின் மிக மோசமான காலகட்டம் இது.
ஆக கமின்ஸும் பந்துவீசி வெல்ல விரும்பவில்லை, ரோஹித்தும் சீக்கிரமாக ஆட்டத்தை முடிக்க சிரத்தையெடுக்கவில்லை. நாளை லயனும் போலந்தும் சற்று வேகமாக அடித்து இலக்கை 350க்கு கொண்டு போக முயல்வார்கள். முதல் ஐந்து ஓவர்களுக்குள் விக்கெட் விழுந்தால் இந்தியாவால் 90 சொச்சம் ஓவர்களில் 340 எடுக்க முடியுமா? முடியும், ஆனால் டிராவுக்கே முயல்வார்கள். இந்தியா மிக மட்டமாக ஆடினால் ஒழிய இந்த ஆடுதளத்தில் இவ்வளவு குறைவான ஓவர்களில் ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியாது.
கடைசி மூன்று விக்கெட்டுகளை இன்னும் சற்று முனைப்பாக பந்துவீசி, களத்தடுப்பு பண்ணி, கேட்சுகளை எடுத்து சுருட்டியிருந்தால் இந்தியா 250-260 இலக்கை சுலபத்தில் அடித்து தொடரில் முன்னிலை பெற்றிருக்கலாம். மடியில் விழுந்த நல்லதொரு வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள்.
இந்த போட்டியுடன் ரோஹித் ஓய்வுபெற்று பும்ராவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். ஜாலியாக சோபாவில் சாய்ந்து கடைசி டெஸ்ட் ஆட்டத்தை ரசிக்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...