முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மடியில் விழுந்த வாய்ப்பைத் தவற விட்ட இந்திய அணி


ஆஸ்திரேலியா இன்றைய நாளின் கடைசி அரைமணி நேரத்தில் டிக்ளேர் பண்ணி பந்துவசியிருந்தால் ரோஹித்தையும், எண் 3இல் வரக்கூடிய நைட் வாட்ச் மேனையும் தூக்கியிருக்கலாம். ஆட்டம் ரொம்ப சுவாரஸ்யமாகப் போயிருக்கும். ஆனால் அவர்கள் ஸ்டார்க்குக்கு காயமுற்றிருப்பதால் கமின்ஸையும், போலாண்டையும் வைத்து வீசும் நிலைமையில் இருப்பதாலும், லயனுக்கு பந்து திரும்பவில்லை என்பதாலும், ஆடுதளம் முதல் 50 ஓவர்களுக்கு மட்டையாட சுமாராகவும், அதன் பிறகு வெகு எளிதாகவும் இருப்பதால் இந்தியாவுக்கு 300 இலக்கைத் தர விரும்பவில்லை. லயனும் போலண்டும் மரண கட்டை வைத்திட அவர்களையே வீழ்த்த முடியவில்லை எனும்போது ஆடுதளம் எவ்வளவு தட்டையாகியிருக்கிறது என்று தெரியும். இந்தியா மட்டையாடும்போது கூட ரோஹித், பண்ட், ஜெய்ஸ்வால், கோலி ஆகியோர் விக்கெட்டுகளை அள்ளி வீசியிருக்காவிடில் அவர்களும் 450ஐ தாண்டியிருப்பார்கள். இந்த ஆடுதளம் நினைத்தபடி மேலும் கீழுமாக பவுன்ஸ் கொள்ளவோ உடையவோ இல்லை, திரும்பவும் இல்லை. மழை அல்லது சீதோஷ்ண நிலை காரணமாக அது போதுமானபடிக்கு காயவில்லை, கீழ் அடுக்குகள் உறுதியாக உள்ளன என நினைக்கிறேன். ஆடுதள அமைப்பாளர் சிறிது புற்களை விட்டுவைத்திருந்ததாலே இந்தளவுக்காவது விக்கெட்டுகள் விழுந்தன. அல்லது ஆஸ்திரேலியா 650 அடித்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் வழக்கம்போல ஆஸ்திரேலியா மோசமாக ஆடினார்கள் அல்லது பும்ரா மிகப்பிரமாதமாக வீசினார். புதுப்பந்தில் முதல் 30 ஓவர்களில் கிடைக்கும் சீம் அசைவை சிராஜும் நன்றாக பயன்படுத்தி களத்தடுப்புக்கு ஏற்ப வீசினார்கள். ஆனால் 170க்கு 9 விக்கெட்டுகளைக் கொடுக்குமளவுக்கு மோசமான ஆடுதளமல்ல இது. அதை அவர்களே உணர்ந்து 8-11 வரையிலான டெயில் எண்டர்களைக் கொண்டு தடுத்தாடி சுதாரித்தார்கள். இன்னொரு விசயம், கடைசி மூன்று விக்கெட்டுகளுக்கு ரோஹித் களத்தைப் பரப்பி ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சுலபமாகக் கொடுப்பதும் ஒரு பிரச்சினை. ரோஹித்தின் தலைமை இப்படித்தான் மரணப்படுக்கையில் கிடப்பவரின் கடைசி மூச்சுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளைப் போல மசமசவென்றே உள்ளது. ஆட்டத்தை அதன்போக்கில் விட்டு ஊர், உலகம் பற்றியெல்லாம் நினைத்துக்கொண்டு நிற்கிறார். நிலைமை கைமீறிப் போனதும் களத்தடுப்பாளர்களை உள்ளே கொண்டு வந்து தாக்க முயல்கிறார். ஒரு தலைவராகவும் ரோஹித்தின் மிக மோசமான காலகட்டம் இது.
ஆக கமின்ஸும் பந்துவீசி வெல்ல விரும்பவில்லை, ரோஹித்தும் சீக்கிரமாக ஆட்டத்தை முடிக்க சிரத்தையெடுக்கவில்லை. நாளை லயனும் போலந்தும் சற்று வேகமாக அடித்து இலக்கை 350க்கு கொண்டு போக முயல்வார்கள். முதல் ஐந்து ஓவர்களுக்குள் விக்கெட் விழுந்தால் இந்தியாவால் 90 சொச்சம் ஓவர்களில் 340 எடுக்க முடியுமா? முடியும், ஆனால் டிராவுக்கே முயல்வார்கள். இந்தியா மிக மட்டமாக ஆடினால் ஒழிய இந்த ஆடுதளத்தில் இவ்வளவு குறைவான ஓவர்களில் ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியாது.
கடைசி மூன்று விக்கெட்டுகளை இன்னும் சற்று முனைப்பாக பந்துவீசி, களத்தடுப்பு பண்ணி, கேட்சுகளை எடுத்து சுருட்டியிருந்தால் இந்தியா 250-260 இலக்கை சுலபத்தில் அடித்து தொடரில் முன்னிலை பெற்றிருக்கலாம். மடியில் விழுந்த நல்லதொரு வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள்.
இந்த போட்டியுடன் ரோஹித் ஓய்வுபெற்று பும்ராவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். ஜாலியாக சோபாவில் சாய்ந்து கடைசி டெஸ்ட் ஆட்டத்தை ரசிக்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.