Skip to main content

கோன்ஸ்டாஸிடம் சிக்கிக் கொண்ட பும்ரா

 

கிரேக்க எழுத்தாளரைப் போன்ற பெயர் கொண்ட சேம் கோன்ஸ்டாஸின் உள்ளூர் போட்டி ஆட்டங்களை நேற்று பார்த்தபோதே அவர் இதைத்தான் இன்று பும்ரா, சிராஜுக்கு எதிராகப் பண்ணப்போகிறார் என எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அவர் அதில் வெற்றிபெறுவார் என நான் ஊகிக்கவில்லை. துவக்க மட்டையாளராக அவருக்கு சரியான காலாட்டம் இல்லை, உள்ளே வரும் பந்துக்கு போதுமான தடுப்பாட்டம் இல்லை. அவர் ஒன்று முன்னங்காலுக்கு வந்து சமநிலைத் தவறி ஸ்டம்புக்கு குறுக்கே சரிந்து LBW ஆவார் அல்லது பந்தை மிஸ் பண்ணி பவுல்ட் ஆவார். ஆகையால் அவரது சிறந்த உத்தி அவரது வலிமையான டி20 ஷாட்களை - ரிவர்ஸ் ஸ்கூப், ராம்ப் - ஆடுவதுதான். பந்துவீச்சாளர் இன்னும் முழுநீளத்தில் வீசினால் அவர் ஸ்டம்புகளை விட்டு ஆப் பக்கத்தில் கவருக்கு மேல் அடிப்பார் அல்லது மிட் விக்கெட்டுக்கு அடிப்பார். அடுத்து பந்து வீச்சாளர் அரைக்குழியாகப் போட்டால் பின்னால் சென்று பைன் லெக், பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்குக்கு புல் / ஹூக் அடிப்பார். சும்மா அழகுக்கு நேராக டிரைவ் செய்யவும் செய்வார். ஒட்டுமொத்தமாக 5-6 ஷாட்களை வைத்து ஓடும் வண்டியே சேம் கோன்ஸ்டாஸ். என்ன பிரச்சினை என்றால் இதை வேகவீச்சாளர்கள் எதிர்பாராமல் திகைத்துப் போவதால் அவர்கள் தொடர்ந்து அவரது வலிமைக்கே பந்துவீசிக் கொண்டிருப்பர். இதுதான் இன்று நடந்தது. இன்று அவர் அடித்த பந்துகளின் நீளத்தையும் திசையையும் பார்த்தால் நான் சொல்வது புரியும். இதுவே இனி எல்லா போட்டிகளிலும் நடக்கும்.

2000இல் இருந்து ஆட்டத்தைப் பார்ப்பவர்களுக்கு இது சேவாகின் ஸ்டைல் என்று தெரியும். ஒரே வித்தியாசம் அவர் ஸ்கூப், ரேம்ப் அடிக்க மாட்டார். ஸ்டம்புகளை விட்டு நின்று பந்து விரட்டவோ வெட்டவோ செய்வார். அவரது தடுப்பாட்டம் பலவீனமானது என்பதால் அவரைத் தூக்கிவிடலாம் என நினைத்து அவுட் ஸ்விங் போட முயன்று வேகவீச்சாளர்கள் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கு நிலைமை புரியும் முன்பு அரை சதத்தைக் கடந்துவிடுவார், சதமும் அடிப்பார். 10இல் 4 போட்டிகளில் சேவாக் இப்படி ரன் அடித்தால் 4 போட்டிகளில் ஸ்லிப்பிலோ கீப்பரிடமோ கேட்ச் கொடுத்து அவுட் ஆவதால் பந்து வீச்சாளர்களுக்கு போலியான நம்பிக்கையைக் கொடுப்பார். இது ஒரு சுழல் - அவர் அவுட் ஆவதாகக் காட்டுவதாலே அவருக்கு நிறைய அடிக்கும் பந்துகளை வேகவீச்சாளர்கள் கொடுப்பார்கள். இந்தப் பொறியில் சிக்காதவர்களே கிடையாது. ஆனால் சேவாக்கின் ஆட்டவாழ்வின் கடைசிக் காலத்தில் வேகவீச்சாளர்கள் அவருக்கு பந்தை உள்ளே மட்டும் வீசிக் கட்டுப்படுத்தினார்கள் - அதாவது மிடில் ஆண்ட் லெக் ஸ்டம்பில். அதுவும் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்தால் சேவாக் அந்த திசைக்கு வரும் பந்துக்குத் திணறினார்.
எ.பி டிவில்லியர்ஸும் இப்படித்தான். அவரையும் வழக்கமான நீளத்தையும் திசையையும் வைத்துக் கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு ஒன்று கால் சுழலை வெளியே வீச வைக்கவேண்டும் அல்லது ரவுண்ட் தெ விக்கெட் வந்து பந்தை உள்ளே கொண்டு வரவேண்டும். அப்போது அவரால் ரேம்ப், ஸ்கூப் அடிக்க முடியாது, விட்டு பந்தை வெட்டவோ தூக்கவோ முடியாது. ஐ.பி.எல்லில் இதை அவருக்கு எதிராக வெற்றிகரமாக முயன்றார்கள். ஆனால் டிவில்லியர்ஸுக்கு இருக்கும் ஷாட்களின் சாத்தியங்கள் கான்ஸ்டஸிடம் இல்லை என்பதால் அவருக்கு ரவுட் தெ விக்கெட் வந்து பந்தை உள்ளே (மிடில் மற்றும் லெக் ஸ்டம்பில்) அரை நீளத்தில் வீசிவிட்டு, எட்டு களத்தடுப்பாளர்களை மிட் விக்கெட், ஸ்கொயர் லெக், பைன் லெக், லெக் ஸ்லிப், ஷார் மிட் விக்கெட் எனப் பெரும்பகுதி கால்பக்கமாக நிறுத்தி அவரை அடிக்க விடாமல் தடுத்தாலே அவர் எதாவது ஒரு பந்துக்கு LBW ஆவார்; அல்லது குறைந்தது அவரை ஆஸ்திரேலிய நிர்வாகம் கொண்டு வந்த நோக்கம் நிறைவேறாது - பும்ராவைத் தாக்கி நிலைகுலையச் செய்வது. கோலியை விட்டு அவரது தோளை மோதவிடாமல் இந்தியா இந்த வியூகத்தை இரண்டாவது இன்னிங்ஸில் முயலவேண்டும். இன்னொரு யுக்தி பந்தை 6வது ஸ்டம்பில் மிக வைடாக வீசுவது. ஆனால் இது மிகவும் மெதுவாக பந்து நின்று வரும் ஆடுதளங்களில் மட்டுமே எடுபடும்.
ஆனால் இதை இந்தியா உடனடியாக செய்வார்கள் என எனக்குத் தோன்றவில்லை. அவரது தடுப்பாட்ட control percentage 56 சொச்சமாக குறைவாக உள்ளதால் அவரை ஸ்லிப்பிலே தூக்கலாம் என நம் வேகவீச்சாளர்கள் வெறித்தனமாக நம்புவார்கள். அது ஒரு இன்னிங்ஸில் நடந்தாலும் அவர் அடுத்த இன்னிங்ஸில் திரும்பவும் பொளந்து கட்டுவார்.
அடிக்க விரும்பும் மட்டையாளருக்கு அடிக்க பந்தைக் கொடுக்காமல் இருந்தாலே அவரது பாதி ஆட்டம் காலியாகி விடும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...