முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தப்பு நிகழக்கூடாது என்று தப்பை ஆதரிப்பவர்

 ராஜன் குறை அரசியல் மனம் கொண்டவரல்லர், அரசியல்வாதியின் மனம் கொண்டவர். ஒரு ஓநாய் ஊருக்கு வந்து ஆட்டுக்குட்டியை அடித்து இழுத்துச்சென்று விடுகிறது. அப்போது அந்த ஓநாயைப் பிடித்து அடித்து பிரியாணி போட வேண்டும், கல்லால் அடித்து துரத்த வேண்டும் என்பது தார்மீகக் கோபம். அதுவே பிரச்சினையைத் தீர்க்கும். எந்த குடியானவனும் அதையே செய்வான். ராஜன் குறையோ அங்கு வந்து ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு போவது மிகப்பெரிய சமூக வலைப்பின்னலில் நிகழும் சின்னஞ்சிறு நிகழ்வு. அதற்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற காரணிகள் உள்ளன. அந்த கண்ணிகளைச் சரிசெய்யாமல் ஓநாய் வருவதை தடுக்க முடியாது. அதனால் ஓநாயுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வப்போது சில ஆட்டுக்குட்டிகளை அதற்குக் கொடுப்பதே நடைமுறை சாத்தியமானது. இல்லாவிட்டால் இயற்கையின் அடிப்படையான வலைப்பின்னலே சிதைந்து போகும். ஓநாய் திருந்தி சைவத்துக்கு வர இன்னும் சில நூறாண்டுகள். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும், நிதானமாக பக்குவமாக இதைக்குறித்து உரையாட வேண்டும். கொந்தளிக்கவோ அறச்சீற்றம் கொள்ளவோ கூடாது என்று நீண்ட உரையாற்றுவார். இப்படி ஒரு லட்சிய சமூக அரசியல் கட்டமைப்பைக் காட்டி, அதுவே நடைமுறை சாத்தியம் என்று சொல்லி அனேகமாக எல்லா சீரழிவுகளையும் ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ சொல்வார். ஜனநாயகத்துக்கும் வளர்ச்சிக்காகவும் ஊழல், குடும்ப அரசியலைக் கூட ஆதரித்து நீண்ட கட்டுரைகளை எழுதுவார். அவரது இந்த வழக்கறிஞர் அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள ஒருபோதும் முடிந்ததில்லை. அவரது எழுத்தில் நீதியுணர்வும் கோபமும் இல்லாமையால், மாறிவரும் சூழலில் தோன்றும் பல்வேறு குற்றங்களையும், அநியாயங்களையும் விமர்சிக்காமல் தொடர்ச்சியாக ஒரே விசயத்தை, அமைப்பை, இயக்கத்தை தொடர்ந்து கண்மூடித்தனமாக ஆதரிக்கையில் அவர் ஏதோ கட்சியின் கி.ப.செ போன்றே தோன்றுகிறார். (ஆனால் அவரது கொள்கைப் பிடிப்பு ஒரு பாவனையோ என்றும் தோன்றுகிறது.) அதனாலே அவரை வாசிப்பதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன். (ஆனால் அவர் நல்ல கல்வியாளர், தன் வாசிப்பை நன்றாகத் தொகுத்து எழுதுவதால் பலருக்கும் நன்மை பயப்பவர் என்பதால் அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு.)

மேலும், ராஜன் குறைக்கு இலக்கியம் என்பது சமூகக் கருவி மட்டுமே. அதாவது அது இருத்தலின் ஆழத்துக்குள் நம்மைக் கொண்டு செல்லும் அனுபவமோ, பல்வேறு காலங்களும் உலகங்களும் மோதி முயங்கும் நுண்ணுலகமோ அல்ல. இலக்கியச் செயல்பாடுகளை அவர் புரிந்துகொள்ளும் விதம் என் சிந்தனை மரபில் இருந்து வெகுவாக முரண்படுவது. உ.தா., கதர் துணியை காந்தியவாதி பார்ப்பதைப் போலவே எழுத்தாளர்கள் இலக்கியத்தை முன்னெடுக்கிறோம், முன்னெடுக்க வேண்டுமென அவர் நினைக்கிறார். கதரல்லாத துணிகளை எங்கு பார்ப்பாலும் எரிப்போம் என்று அந்த காலத்தில் சொல்லும் ஒரு தீவிரப் போராளியிடம் "பொறுமையாக இருங்கள், மக்கள் மாறுவதற்கு பல பத்தாண்டுகள் ஆகும், அதற்காக பக்குவமாக உரையாடி காத்திருங்கள்" என்பார். ஆனால் கதர் துணியைப் போல இலக்கியம் எங்களுக்கு கலாச்சார குறியீடு அல்ல. அது எங்கள் உயிர், எங்கள் வாழ்க்கை.
அதனாலே இலக்கியத் திருவிழாக்களை விமர்சிப்போரை தன் வழக்கப்படி கண்டித்து மனுஷ்ய புத்திரனின் கட்டுரையை வாழ்த்தி அவர் எழுதியிருப்பதைப் படித்தபோது எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அவர் இதைச் செய்யாதிருந்தால் ஆச்சரியத்தில் மாரடைப்பே வந்திருக்கும். காப்பாற்றி விட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...