முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தப்பு நிகழக்கூடாது என்று தப்பை ஆதரிப்பவர்

 ராஜன் குறை அரசியல் மனம் கொண்டவரல்லர், அரசியல்வாதியின் மனம் கொண்டவர். ஒரு ஓநாய் ஊருக்கு வந்து ஆட்டுக்குட்டியை அடித்து இழுத்துச்சென்று விடுகிறது. அப்போது அந்த ஓநாயைப் பிடித்து அடித்து பிரியாணி போட வேண்டும், கல்லால் அடித்து துரத்த வேண்டும் என்பது தார்மீகக் கோபம். அதுவே பிரச்சினையைத் தீர்க்கும். எந்த குடியானவனும் அதையே செய்வான். ராஜன் குறையோ அங்கு வந்து ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு போவது மிகப்பெரிய சமூக வலைப்பின்னலில் நிகழும் சின்னஞ்சிறு நிகழ்வு. அதற்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற காரணிகள் உள்ளன. அந்த கண்ணிகளைச் சரிசெய்யாமல் ஓநாய் வருவதை தடுக்க முடியாது. அதனால் ஓநாயுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வப்போது சில ஆட்டுக்குட்டிகளை அதற்குக் கொடுப்பதே நடைமுறை சாத்தியமானது. இல்லாவிட்டால் இயற்கையின் அடிப்படையான வலைப்பின்னலே சிதைந்து போகும். ஓநாய் திருந்தி சைவத்துக்கு வர இன்னும் சில நூறாண்டுகள். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும், நிதானமாக பக்குவமாக இதைக்குறித்து உரையாட வேண்டும். கொந்தளிக்கவோ அறச்சீற்றம் கொள்ளவோ கூடாது என்று நீண்ட உரையாற்றுவார். இப்படி ஒரு லட்சிய சமூக அரசியல் கட்டமைப்பைக் காட்டி, அதுவே நடைமுறை சாத்தியம் என்று சொல்லி அனேகமாக எல்லா சீரழிவுகளையும் ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ சொல்வார். ஜனநாயகத்துக்கும் வளர்ச்சிக்காகவும் ஊழல், குடும்ப அரசியலைக் கூட ஆதரித்து நீண்ட கட்டுரைகளை எழுதுவார். அவரது இந்த வழக்கறிஞர் அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள ஒருபோதும் முடிந்ததில்லை. அவரது எழுத்தில் நீதியுணர்வும் கோபமும் இல்லாமையால், மாறிவரும் சூழலில் தோன்றும் பல்வேறு குற்றங்களையும், அநியாயங்களையும் விமர்சிக்காமல் தொடர்ச்சியாக ஒரே விசயத்தை, அமைப்பை, இயக்கத்தை தொடர்ந்து கண்மூடித்தனமாக ஆதரிக்கையில் அவர் ஏதோ கட்சியின் கி.ப.செ போன்றே தோன்றுகிறார். (ஆனால் அவரது கொள்கைப் பிடிப்பு ஒரு பாவனையோ என்றும் தோன்றுகிறது.) அதனாலே அவரை வாசிப்பதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன். (ஆனால் அவர் நல்ல கல்வியாளர், தன் வாசிப்பை நன்றாகத் தொகுத்து எழுதுவதால் பலருக்கும் நன்மை பயப்பவர் என்பதால் அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு.)

மேலும், ராஜன் குறைக்கு இலக்கியம் என்பது சமூகக் கருவி மட்டுமே. அதாவது அது இருத்தலின் ஆழத்துக்குள் நம்மைக் கொண்டு செல்லும் அனுபவமோ, பல்வேறு காலங்களும் உலகங்களும் மோதி முயங்கும் நுண்ணுலகமோ அல்ல. இலக்கியச் செயல்பாடுகளை அவர் புரிந்துகொள்ளும் விதம் என் சிந்தனை மரபில் இருந்து வெகுவாக முரண்படுவது. உ.தா., கதர் துணியை காந்தியவாதி பார்ப்பதைப் போலவே எழுத்தாளர்கள் இலக்கியத்தை முன்னெடுக்கிறோம், முன்னெடுக்க வேண்டுமென அவர் நினைக்கிறார். கதரல்லாத துணிகளை எங்கு பார்ப்பாலும் எரிப்போம் என்று அந்த காலத்தில் சொல்லும் ஒரு தீவிரப் போராளியிடம் "பொறுமையாக இருங்கள், மக்கள் மாறுவதற்கு பல பத்தாண்டுகள் ஆகும், அதற்காக பக்குவமாக உரையாடி காத்திருங்கள்" என்பார். ஆனால் கதர் துணியைப் போல இலக்கியம் எங்களுக்கு கலாச்சார குறியீடு அல்ல. அது எங்கள் உயிர், எங்கள் வாழ்க்கை.
அதனாலே இலக்கியத் திருவிழாக்களை விமர்சிப்போரை தன் வழக்கப்படி கண்டித்து மனுஷ்ய புத்திரனின் கட்டுரையை வாழ்த்தி அவர் எழுதியிருப்பதைப் படித்தபோது எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அவர் இதைச் செய்யாதிருந்தால் ஆச்சரியத்தில் மாரடைப்பே வந்திருக்கும். காப்பாற்றி விட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...