மக்களின் அடிப்படைப் பிரச்சினை பணமும் ஏற்றத்தாழ்வும் பொருண்மை உலகில் போதாமைகளுமே. ஆனால் அதைக் குறித்து விசனிக்க, கோபிக்க, கொந்தளிக்க, கலவரம் செய்யாமல் மனிதனை ஒரு பக்கம் கடவுள், பணம், பொழுதுபோக்கு தடுக்கிறது எனில் இன்னொரு பக்கம் நாக்பூர் மாதிரியான கலவரங்களும் கோபத்தை வெறுப்புக்கு திசைதிருப்பும், வடிகாலாகின்றன; ஆட்சியாளர்கள் அரியணையில் நீடிக்க உதவுகின்றன. மதம் சார்ந்த மற்றமை (இஸ்லாமியர்) இங்கு ஒரு பொருட்டு மட்டுமே. இஸ்லாமியர் இல்லாவிடில் வேறொரு மற்றமை. இங்கும் எங்கும் எப்போதும் மதவாதம் கலவரத்தை தூண்டாது - அதிருப்தியும் போதாமையுமே கலவரத்தின் எரிபொருள்.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்