முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதம் இருந்தே ஆகும்


சப்பைக்கட்டுக்காக சொல்லவில்லை - பிரான்ஸைப் போல இந்தியா முழுமையான மதசார்பற்ற நாடு அல்ல. இந்தியாவில் அரசியல்வாதிகள், பிரதமர்கள், முதல்வர்கள் எல்லாருமே வெளிப்படையாக மதச்சின்னங்களை பாவிப்பார்கள், நிகழ்வுகளில் பங்கு கொள்வதை பிரச்சாரம் ஆக்குவார்கள், அவர்களுடன் ஒட்டுறவில் இருக்கும் அதிகாரிகளும் இவ்வாறே இருப்பார்கள். சிறுபான்மை மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்களிலும் மதத்தை / மதக்கருத்துக்களை போதிப்பதில் சட்டரீதியாக தடையில்லை (ஆனால் துபாய் போன்ற நாடுகள் அனுமதிக்காததால் அங்கு இதைவிட நிபந்தனைக்குட்பட்ட மதசார்பின்மை உள்ளது.) 

நாம் ஏன் மதவாத மதசார்பின்மை தேசமாக இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள 18-19ஆம் நூற்றாண்டுக்குப் போக வேண்டும் - இந்தியாவின் சமூக சீர்திருத்த, அரசியல் எழுச்சி அமைப்புகள், நிகழ்வுகள் மதத்தின் அடிப்படையில் தோன்றியவையே. நமது சுதந்திரப் போராட்டமும் அதன் நீட்சியே. நம்மை ஆண்ட பிரிட்டீஷ் அரசும் இதை ஊக்குவித்தது. அவர்கள் காலத்தில்தான் -1870இல் - கும்பமேளா மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. பிரிட்டீஷார் இதை வருமான வழியாகவும், மதம்சார்ந்த தேச உருவாக்க உத்தியாகவும் கண்டார்கள். நேருவின் காலத்தில் தான் மிகப்பெரிய கும்ப மேளா நிகழ்ந்து அதில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தார்கள். இது அண்மையில் மோடி யுகம் வரை தொடர்கிறது. மதச்சடங்குகளில் அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் அமைச்சர்களும் பங்கேற்பது தமிழ்நாட்டிலும் நீள்கிறது. 

இந்த வரலாற்றை கருத்திற் கொண்டு நாம் மதசார்பற்ற நாடு எனும் பாசாங்கை விட்டொழிக்க வேண்டும். 

இன்னொரு விசயம் - நம் ஊரில் மதப்பழக்கத்தை மூடநம்பிக்கை, பிற்போக்கு சிந்தனை, சாதியத்துடன் முடிச்சுப்போட்டு ஒரு பக்கம் இதைக் கண்டித்தபடியே பாசாங்காக உள்ளுக்குள் பின்பற்றுகிறோம். என்னிடம் கேட்டால் இதன் பயன் என்னவென வினவ வேண்டும் - இந்திய / தமிழ்ச் சமூகம் இந்த நவதாராளவாத நெருக்கடியில், பின்நவீன மனநிலையில் சிக்கிச் சிதறாதிருக்க, ஒற்றைத் திரளாக உணர்வதற்கு மதநம்பிக்கையும் கூட்டுச் சடங்குகளும் உதவுகின்றன, தற்கொலைகள், மனநிலைக் குலைவுகளைக் குறைக்கின்றன. சமூகமாகத் தொடர சில நன்மைகளை அளிக்கின்றன. ஆகையால் அரசியல், வரலாற்றுரீதியாகவும், சமூக உளவியல் ரீதியாகவும் மதம் இருந்தே ஆகும்.

இது சிறுபான்மைக்கு என்னவிதமான நெருக்கடியைக் கொணரும் என்பது மட்டுமே முக்கியமான ஒரே கேள்வி - இதை 100 ஆண்டுகளுக்கு முன்பே ஜின்னா எழுப்பினார். அவர் சொன்னது உண்மையாகி இருக்கிறது. அதற்குத் தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...