Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மாற்று தெய்வம்

 

There Is No God. This negation must be understood solely to affect a creative Deity. The hypothesis of a pervading Spirit co-eternal with the universe remains unshaken.

— Percy Bysshe Shelley, Queen Mab, Canto VII, Note 13

நம் ஊரில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று ஒரு பக்கமும் வலதுசாரி சிந்தனை, மதவாதம், கடவுள் நம்பிக்கை, தமிழ் தேசிய சைவம் என இன்னொரு பக்கமும் இரு முகாம்களாகப் பிரிந்து போனதில் தன் எதிரிலுள்ள உலகை, வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றலோ முகமையோ இல்லாத தனிமனிதர்கள் கதிகெட்டவர்களாக, வழியற்றவர்களாக மாறினார்கள். இன்று அவர்கள் அதிகமாக கேளிக்கை, சுய அழிவு எனப் பயணிக்கிறார்கள். விஷ்ணுபுரம், ஈஷா போன்ற வசீகரமான முற்றதிகார அமைப்புகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். யோசித்துப் பாருங்கள் - பொருளாதாரம், அதை ஒட்டிய சமூக அமைப்புகள், அசைவுகள், தேசியம், அதன் பாலான அதிகாரத்துவம் எல்லாமே நம் எல்லையை மீறி உள்ளன. காலம் நமக்கு கைகூடாமல் நழுவிப் போய்க்கொண்டே இருக்கிறது. அப்போது நமக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தருவது அமைப்புகளோ, கருத்தியலோ, தத்துவமோ கூட அல்ல, படைப்பூக்கம் மட்டுமே.
படைப்பூக்கம், கற்பனை, தனித்துவ சிந்தனை, உள்-உலகம் இவை மகத்தானவை எனக் கருதுவதே இந்த காலத்தின் எதேச்சதிகார கலாச்சாரத்துக்கும் எதிரான நமது மிகப்பெரிய கருவி. கொள்கையை, சிந்தனையை, நிறுவனத்தை கடவுளாக்கினாலோ, ஆன்மீகம் பேசும் கடவுளைத் தேடி ஓடினாலோ நாம் கடுகைப் போல சிறுகியே போவோம். அதற்குப் பதிலாக நாம் நம்மையே கடவுளாக்குவதும், கற்பனையாலும் சொற்களாளும் உணர்ச்சிகளாலும் பலமடங்குப் பெருக்கிக் கொள்வதும், மாற்று உலகுகளைப் படைப்பதுமே சிறந்த பக்தி என்று கற்பனாவாதக் காலத்துக் கவி பெர்ஸி பைஸி ஷெல்லி சொல்கிறார்.

நமக்கு நாமே தெய்வம் என்பது எவ்வளவு மகத்தான வாக்கியம். பகுத்தறிவுவாதம், பக்தி இரண்டையும் விட மேலானது நாமே நாமான அத்தெய்வம். அத்தெய்வத்தை நாம் நிபந்தனைக்கு அப்பாலான சக்தியாகப் பார்க்கத் தேவையில்லை. அது நம் ஆற்றலுக்கு உட்பட்டு தோன்றும் தெய்வம். சமகாலத்தில் கற்பனாவாதத்தை மீள்நோக்குவது அவசியம் என இப்போது எனக்குத் தோன்றுகிறது!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...