முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்சத்திரத்தைச் சந்திப்பது

இரு பத்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நாளிதழில் மொழிபெயர்ப்புப் பிரிவில் வேலை செய்தேன். பயனர்களை ஊக்கப்படுத்த ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள் - சில தொடர் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் அப்போது முன்னணியில் உள்ள நடிகர் ஒருவருடன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடலாம். எனக்கு இது பெரிய ஹிட்டடிக்கும் என்று தோன்றியது. ஒன்று, அந்நடிகர் அப்போது பெரிய ஹிட்களைக் கொடுத்தவர். அபாரமான நடிகர். இரண்டாவது, அது பெரிய ஓட்டல். போட்டியில் நாற்பத்து சொச்சம் பேர் ஜெயித்தார்கள். எல்லாரையும் கூட்டி ரசிகர் சந்திப்பு போல ஏற்பாடு பண்ணி விருந்தும் அளிக்கலாம் என நிர்வாகம் முடிவு செய்தது. நடிகரும் ஏற்றுக்கொண்டார். இப்போது எங்கள் அணியில் இருந்து வெற்றி பெற்ற ஒவ்வொருவரையாக அழைத்து வரக் கேட்டோம். ஆனால் ஆச்சரியமாக அவர்களில் கணிசமானோர் வர மறுத்துவிட்டார்கள். அவருடன் விருந்து சாப்பிடவோ புகைப்படம் எடுக்கவோ அவ்வளவு தூரம் பயணித்து சென்னைக்கு வர முடியாது என்றார்கள். நாங்கள் திரும்பத் திரும்ப அழைத்ததில் எட்டு பேர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதிலும் நான்கு பேர்தாம் வந்தார்கள். கடைசியில் ரசிகர்கள் சந்திப்பு ஒருவாறு நடந்து முடிந்தது. அவர் அதன்பிறகு பல படங்களைச் செய்தார். இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

எனக்கு அந்தச் சம்பவத்தின்போது தான் நட்சத்திர பிம்பம் சிரமப்பட்டு கட்டமைக்கப்பட வேண்டியது, மிகமிகச் சிலருக்கே இயல்பாகவே பிரபல்யம் அமையும், அவர்கள் தோன்றினாலே மக்கள் திரள்வார்கள், அதுவும் சமய சந்தர்பங்களால் அமைவதுதான் என்று புரிந்தது. நல்ல கதை, இயக்கம், சகநடிகர்கள், அதிர்ஷ்டம் எல்லாம் அமையும்போது ஒருவர் நட்சத்திர நடிகர் ஆகிறார். தனியாக அவர் தோன்றினால் மதிப்பில்லை. அடுத்தடுத்த வெற்றிகள் வந்ததும் அவர் தனக்காவே படம் ஓடுகிறது என நம்ப வைக்க முயல்வார். சந்தை மதிப்பைப் பெருக்கித் தக்கவைத்த பிரயத்தனம் செய்வார். அது பல சமயங்களில் வேலையும் செய்யும்.
இன்னொன்று, நட்சத்திரங்களின் சிறப்பே அவர்கள் அரிதாகத் 'தோன்றுகிறார்கள்' என்பது. அதில் ஒரு வியப்பு உள்ளது. வியப்புதான் அவர்களது சந்தை மதிப்பு. திரையில் திடீரெனத் தோன்றும்போது வரும் வியப்பும் அத்தகையதே. அதை ரசிகர்களே ஒருபக்கம் அழிக்க விரும்ப மாட்டார்கள். இன்னொரு பக்கம், அந்த வியப்பு பல காரணங்களால் மிகப்பெரிதாக மாறும்போது அவர்களே அதைக் கலைத்து நெருங்க வேண்டும் என்றும் பெருவிருப்பம் கொள்வார்கள். தஸ்தாவஸ்கியின் "கரமசோவ் சகோதரர்கள்" நாவலில் வரும் Grand Inquisitor அத்தியாயம் இதனோடு ஒப்பிடத்தக்கது - அதில் ஏசு உயிர்த்தெழுந்து கத்தோலிக்க சாமியார் முன்வந்தால் என்னவாகும் எனும் கற்பனைக் கதையை வைத்து இவான் கடவுள் மறுப்பைப் பேச முயல்வார். ஏசுவைப் பார்க்கும் சாமியார் அவரைப் பிடித்து சிறையில் அடைக்கச் சொல்வார். அங்கு சென்று அவர் ஏசுவிடம் "அதிசயங்கள் செய்வதன் வழியாகவே ஒருவர் தெய்வமாகிறார். அதைச் செய்ய மறுத்து அல்லது அதை அன்றாட வழக்கமாக்கி நீ தெய்வீகத்தையே இல்லாமல் ஆக்குகிறாய். அதை மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீ தொடர்ந்து பூமியில் இருந்தால் மக்கள் கலவரம் பண்ணி தம்மையே அழித்துக் கொள்வார்கள். போய் விடு அல்லது இம்மக்களைப் பயன்படுத்தி உன்னை எரித்துக் கொல்வேன்" என்பார். உச்ச நட்சத்திரங்கள் நம்மிடையே புழங்கினால், நாம் காய்கறி வாங்கும்போது பக்கத்தில் வந்து நின்று தக்காளி அரைக்கிலோ போடுங்க என்றால் நமக்கு அது பெரும் தொந்தரவாகும். அவர்களை அடுத்து திரையில் பார்க்கும்போது திடீரென எங்கிருந்தோ வருகிறார்கள் எனும் அதிசய உணர்வு அந்தளவுக்கு வராது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...