30-40 பேர்கள் மட்டுமே வருவார்கள். ஒவ்வொருவரும் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு வருவார்கள். புத்தகத்தைப் பற்றி தம் கருத்தை வெளிப்படையாகச் சொல்வார்கள். முகஸ்துதி, வெற்றுப் பேச்சுக்கள் இல்லை. சிலர் விரிவாக ஆழமாக அலசுவார்கள். சற்றும் எதிர்பாராத ஒரு கண்ணோட்டத்தை, வாசிப்பை முன்வைப்பார்கள். கடந்த முறை "தாயைத்தின்னி" நாவலுக்கான கூட்டம் நடந்தபோது அப்படித்தான் இருந்தது. ஒரு புத்தகத்தைப் பற்றி முப்பதுக்கும் மேற்பட்ட மூளைகள் தம் கற்பனையால் 2 மணிநேரங்களாகப் புதியபுதிய களங்களைக் கண்டடைந்து விவாதித்து முன்னகர்வது வியப்பான அனுபவமாக இருந்தது. அலங்காரப் பேச்சுக் கூட்டங்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போன நான் அன்று உற்சாகமாகிப் போனேன். இலக்கியத்துக்கு பெருங்கூட்டம், படோடாபம், விளம்பரம், லாபியிங் ஆகிய விசயங்களைவிட தீவிரமான விவாதங்களும், முழுக்கமுழுக்க பிரதியைக் குறித்த வினாக்களும் குறுக்கீடுகளுமே முக்கியம்.
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...
கருத்துகள்