முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் ஆணைய முறைகேடு 2



 

ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ள முறைகேடுகள் வாக்காளர் பட்டியலிலும் வாக்களிப்பிலும் நடக்காமல் இருக்க என்ன வழி?

ஒன்றிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மக்களே உணர்ந்து போராடி அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொணர வேண்டும்.
ஒன்றிய அரசு ஆட்சியில் உள்ள ஐந்தாண்டுகளும் அவ்வபோது கருத்துக்கணிப்பின் வழியாக விசாரிக்கப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும். அரசைத் தொடர்ந்து கண்காணித்து மட்டுப்படுத்தும் நேரடி அதிகாரத்தை பொதுமக்களுக்கும் நீதிமன்றம், என்.ஜி.ஓ போன்ற அமைப்புகளுக்கு கொடுப்பதுதான் சரியான மக்களாட்சிக்கு இடமளிக்கும். தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வழியாக ஆளும் அரசைத் தண்டிக்கும் சட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். ஒருமுறை வென்றால் அடுத்த தேர்தல் வரை யாரும் கையை வைக்க முடியாது எனும் பாதுகாப்பு ஆபத்தானது. இப்போது பாருங்கள் - ஊடக முதலாளிகளை மோடி அரசு தன் கட்டுக்குள் வைத்துள்ளது. யாரும் வாயைத் திறப்பதில்லை. தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் ஆதார் போன்ற சான்றுகளைக் கொண்டு வாக்காளர்களை ஏற்கலாமே எனக் கேட்க அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. தேர்தல் ஆணையம் மோடியின், அமித் ஷாவின் கைப்பாவைகள் என்பதால் பிரமரும் உள்துறை அமைச்சருமே உச்சநீதிமன்றத்தை புறங்கையால் டீல் பண்ணிவிட்டார்கள் என்பதே உண்மை. ஒட்டுமொத்தமாக அவர்கள் யாரையும் மதிப்பதோ பொருட்படுத்துவதோ இல்லை. பாராளுமன்றத்தில் இந்தியா பாக் போர் குறித்து எழுப்பப்பட்ட எந்த கேள்விகளுக்கும் மோடி அரசு சரிவர பதிலளிக்க முன்வரவில்லை. அதற்கெல்லாம் அவசியமில்லை என நினைக்கிறார்கள். இப்போது அவர்களை ஒட்டி தேர்தல் ஆணையமும் ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு அமைதிகாக்கிறது. சத்தியப் பிரமாணம் செய்துசொல்லுங்க என அவரிடம் கேட்கிறது.
இதன் பெயர்தான் மக்களாட்சியா? முன்பு ஜெர்மனியில் ஹிட்லர் இப்படித்தான் ஆண்டார். இந்தியாவின் மிகப்பெரிய பாசாங்கு இந்த மக்களாட்சி எனும் சொல்தான்.
நாளை காங்கிரஸோ வேறு கட்சியோ ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மோடியைப் பிரதியெடுக்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்? மனசட்சியையும் கொள்கையையும் நம்பி எப்படி ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைப்பது? காவலர்களை யார் காவல் காப்பது, கண்காணிப்பது என ஜூவனெல் கேட்டார். அது எக்காலத்திற்கும் ஏற்ற கேள்வி. பிரதமரை யார் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது? மக்களவை முழுக்க அவரது ஆதரவாளர்கள் இருந்தால்? எதிர்க்கட்சிகள் கையறு நிலையில் இருந்தால்? ஊடகங்களும் நீதித்துறையும் அவரது அடிமைகளாக மாறினால்? மக்களே ஒவ்வொருமுறையும் தெருவுக்கு வந்து போராட வேண்டும் எனில் அதை ஊக்கப்படுத்தும், அம்மக்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் உண்டா? இல்லை. ஆக மக்களும் செயலற்றுப் போகிறார்கள். வேறெந்த அமைப்பிலும் இப்படித் தன்னிகரற்ற அதிகாரம் ஒரு சிலருக்கு மட்டுமென இருப்பதில்லை.
ஆட்சியில் முறைகேடுகள் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் மக்களால் அரசு கேள்விக்குள்ளாக்கப்பட்டு அதனால் தாம் பெற்ற நாடாளுமன்ற இடங்களுக்கு வேட்டு வைக்கப்படும், எதிர்காலத்தில் தேர்தலில் நிற்பதற்கு தடை வரும் எனும் சட்டம் வரவேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறை வரவேண்டும். ஒரு நல்ல அரசு எப்போதுமே நெருக்கடியில் இருக்க வேண்டும். ஜாலியாக கடவுளைப் போல இருக்கக்கூடாது. இருந்தால் அது மோசமான ஆட்சிக்கே வழிவகுக்கும். ஸ்திரமான அரசை விட ஸ்திரமற்ற அரசே நல்லது என்பதே வரலாறு சொல்லும் உண்மை. ஸ்திரமற்ற அரசிலே ஜனநாயகம் தழைக்கும்.
தேர்தல் ஆணையத்தின் படத்தில் மக்கள் காறி உமிழ்ந்து அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இன்று வேறெதையும் செய்ய முடியாதென நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.