Skip to main content

3 BHK




இப்படத்தில் வரும் பல்வேறு கருத்துக்கள், தருணங்கள் எனக்குப் பிடித்திருந்தன. இந்தக் காலத்தின் மத்திய வர்க்கச் சிக்கல்கள் இரண்டை எடுத்திருக்கிறார்கள்: பிடிக்காத வேலை, அதில் அவமானம், தோல்வியிலே நீடித்திருப்பது, எதிர்காலத்துக்காக வாழ்வது, வீடு போன்ற ஒற்றை அபத்தக் கனவுக்காக வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவது. மக்களின் உணர்வுகளை நேரடியாகத் தொடும் நோக்கில் படத்தைத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சரத்குமாரின் பாத்திரமான வாசுதேவன் நன்றாக எழுதப்பட்ட பாத்திரம் - அவர் தன் குழந்தைகள் நல்ல வீட்டுக்குப் போய் வாழவேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுக்கிறார். அதை நோக்கி ஒவ்வொருவரையாக நகர்த்துகிறார். பிடிக்காத குடும்பத்தில் மகளை வாழ வைப்பது, அதற்காக மகனைக் கடன் வாங்க வைப்பது, பிடிக்காத படிப்பில் மகனைத் தள்ளுவது, அதற்காக தியாகம், குடும்பம், முயற்சி போன்ற செண்டிமெண்டுகளைப் பயன்படுத்துவது - அவரது இந்த தந்திரத்தை அவரது பிள்ளைகள் கடைசியில் புரிந்துகொள்வது, அவரது மனைவியே அதை ஓரிடத்தில் சுட்டிக் காட்டுவது படத்தின் நல்ல பகுதிகள்.
ஆனால் இப்படத்தைப் பார்க்கையில் ஏதோ ஒன்று சரியாக வரவில்லை எனத் தோன்றிக்கொண்டே இருந்தது. முதல் அரைமணிநேரம் கடந்த பின்னரே உறைத்தது:
படத்தில் பாத்திரங்கள் வீட்டுக்காக படும் பாடுகள் - வாடகை வீட்டில் உரிமையாளரால் அவமதிக்கப்படுவது, வசதியின்மை, வெள்ளம் போன்ற கஷ்டங்களால் அவதிப்படுவது, நாயகன் படிப்பில் தொடர்ந்து தோல்வியடைவது போன்றவை - நம்மை அசைப்பதில்லை. நான் மனதளவில் இப்படத்தை பாலுமகேந்திராவின் "வீடு" படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். அதில் துவக்கத்திலேயே வீட்டை மாற்றும் கட்டாயம் ஏற்படுகிறது. புது வீட்டைக் கண்டடைந்து மாறுவதில் ஏகப்பட்ட சவால்கள். சரி புது வீடு கட்டலாம் என முடிவெட்டுத்ததும் அடுத்தடுத்து இடைஞ்சல்களும் அவற்றை நாயகி எதிர்கொள்ளப் படும் பாடுகளும் வரும். எல்லாமே சின்னச்சின்ன பிரச்சினைகளே, ஆனால் அவற்றுக்கு சுலபமான தீர்வு இருக்காது. எல்லா விசயங்களிலும் நாயகி சரியாகத் திட்டமிட்டு முடிவெடுக்கவே செய்வாள், ஆனாலும் எதிர்பாராத பிரச்சினைகள் வரும். இனிமேல் வாய்ப்பே இல்லை எனத் தோன்றும், அதன்பிறகு மற்றொரு கதவு எங்கிருந்தோ திறக்கும். இந்த கதை நுட்பத்தை 3BHKவில் தவறவிட்டுவிட்டார்கள்.
படிப்பு வரவில்லையென்றால் உழைக்கலாம், டியூஷனில் சேர்ந்து படிக்கலாம், ஆனால் அப்போதும் ஏதோ ஒரு சிக்கல், தீர்க்க முடியாத நெருக்கடி நாயகனுக்கு வரவேண்டும். வீடு வாங்குவதிலும்கூட அப்படித்தான். வீட்டின் விலை அதிகமாக மொத்த குடும்பமும் உழைத்துப் பணம் சேர்க்கிறார்கள். ஆனால் அப்பாவுக்கு ஆஸ்பத்திரி செலவு வந்து பணம் அதில் கரைந்துவிட விட்ட இடத்தில் மறுபடியும் நிற்கிறார்கள். இது திருப்புமுனை - சவால் அல்ல. இப்படம் முழுக்கவே அப்படித்தான் எழுப்பப்பட்டுள்ளது ஏனெனப் புரியவில்லை. இதனால் முதல் இரு மணிநேரங்கள் மனதுடன் ஒட்டுவதில்லை. என்ன நடக்கப் போகிறது என்பது உள்ளது, ஏன் எனும் கேள்விக்கும் பதில் உள்ளது, எப்படி என்பதைக் கோட்டைவிட்டு விட்டார்கள். எப்படி என்பதற்குள் எதிர்கொள்ள இயலாத இடையூறுகளே இல்லை. உ.தா., சித்தார்த்தின் பாத்திரம் ஒவ்வொரு நேர்முகத்திலாகத் தோற்கிறான். கடைசியில் தன் தோல்விக்குக் காரணம் தோல்வி பயமே என உணர்கிறான். பயமின்றி எதிர்கொண்டு கடைசி நேர்முகத்தில் வெல்கிறான். இதுவே ஒரு தனி எப்பிஸோட்தான் - அவன் அதை எப்படிக் கண்டுபிடிக்கிறான், பயமின்றி கேள்விகளை எதிர்கொள்கையில் எப்படியெல்லாம் சிரமப்படுகிறான் என்பதைக் காட்டியிருக்க வேண்டும் ("The Pursuit of Happiness" படத்தில் வரும் நேர்முகக் காட்சியைப் போல; ராக்கி படத்தின் முதற்பாகத்தின் பிற்பகுதியில் சில்வஸ்டர் ஸ்டாலோனின் பாத்திரம் தன் அணுகுமுறையை மாற்றுவதையும், அதற்காக எடுக்கும் ரிஸ்கையும் காட்டுவதைப் போல).
சேரன் தன் "தவமாய் தவமிருந்து" படத்தில் இப்பகுதிகளை சில இடங்களில் நன்றாக எழுதியிருப்பார். பிரசவத்துக்கு மனைவி ஆஸ்பத்திரியில் இருக்கையில் நாயகன் பணத்துக்காக படும் பாடுகள். சட்டென அப்பா பணத்துட்ன வரும் இடம். கிட்டத்தட்ட பணமே கிடைக்காது எனும் இடத்துக்குக் கொண்டு போய்விட்டு ஒரு தீர்வைக் காட்டுவார்கள் (அது சாத்தியமில்லாத தீர்வாக Deus ex machinaவாக இருந்தாலும் கூட நன்றாகாவே இருக்கும்.)
3 BHKவில் கடைசி 20 நிமிடங்களை (பார்வையாளரின் விருப்ப நிறைவேற்றம் போல) நன்றாக எடுத்துள்ளதால் நமக்கு திருப்தியாக இருக்கிறது. இன்னும் நன்றாக எழுதப்பட்டிருந்தால் கிளாஸிக்காக மாறியிருக்கும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...