Skip to main content

ஒரு பதிப்பாளர் இளம் நாவலாசிரியருக்குச் சொல்ல விரும்புவதென்ன?






நேற்றைய வகுப்பில் நடந்த பதிப்பாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட்டவற்றை நாவல் வகுப்பின் மாணவரான மாலதி பதிவாக்கியிருக்கிறார். படித்துப் பாருங்கள்:

நாவல் உலகில் எது வெற்றி தோல்வி என்று பார்த்தால் குறிப்பிட்டு சொல்ல முடியும்.
நான் இதுவரை 400 டைட்டில்ல பண்ணியிருக்கிறேன்.
சிறுகதைகள் என்றால் அதற்கு தனியாக அட்டெண்டஸ் இருக்கும்.
ஆனால் பப்ளிஷ் பண்ணுவதற்கு நாவல்தான் முக்கியம். ஒருவர் எத்தனை நாவல் பதிப்பித்து கையில் வைத்திருக்கிறார்கள் என்றுதான் பார்ப்போம்.
ஒவ்வொரு எழுத்தாளரும் தான் எழுதும் நாவலை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
2019 ல் 9 நாவல்கள் புதிய தலைமுறையை சேர்ந்த நாவல்கள் பதிப்பித்தோம். கிட்டத்தட்ட 6 துறைகளை சேர்ந்த நாவல்கள். துறை சார்ந்த நாவல்கள் என்றால் வாசகர்களிடம் ஒரு ஈர்ப்பு இருப்பதை மறுக்கவே முடிவதில்லை. மினிமம் ஒரு நாவலாவது வணிக ரீதியாக ஜெயிக்கும்.
உதாரணமாக பயர் சர்வீஸ் சம்பந்தப்பட்ட ஒரு கதை. அதில் உள்ள கன்டென்ட் தனிப்பட இருந்தது. கவனத்தை ஈர்த்தது.
கணேஷ் குமாரின் குருநாவல், நோய்மையை அடிப்படையாகக் கொண்டது. டயபட்டிக் அறுவை சிகிச்சையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
இதெல்லாம் துறைகள் சம்பந்தப்பட்ட நாவல்கள்.
திரில்லர் கதைகள் பற்றி பெரிதாக சொல்லமுடியவில்லை.
பாப்புலர் கன்டென்ட் வகையறாவில் சேர்க்கவும் முடியாது.
கொத்தாளி விருதுகள் பெற்ற ஒரு நாவல்.
என்னோட விருப்பம் பற்றி சொல்கிறேன்…
எழுத்தாளராக அவர் முதலில் என்ன எழுதுகிறார்கள்
எப்படி அணுகுகிறார்கள்
எதாவது ஒன்றை மட்டும் செய்ய வேண்டும்
எழுதும் பொழுது மொழியில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும்.ஒரு எழுத்தாளருக்கு இதையெல்லாம் அவசியமாக சொல்லுவேன் நான்.
ஒரு சாதாரண கதையில் மொழி விளையாட்டை தாராளமாக செய்யலாம்.
நாவல் மதிப்பீடுகள் வேண்டும்.
ஒருவேளை மதிப்பீடுகள் இல்லையென்றால் நாவலைப் பற்றிய குறிப்புகளை சரியாக கொடுக்க வேண்டும். அவர் தரும் குறிப்பை வைத்தே கதையை படிப்பதற்கு ஆர்வம் வரும் அளவில் இருக்க வேண்டும்.
மற்றபடி எழுத்தாளர் யார், அவர் படிப்பு, ஸ்கூல் இதெல்லாம் அவசியம் இல்லை.
நீங்க எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது.
நான் எப்பொழுதுமே அபிலாஷ்க்கு முக்கியத்துவம் அளிப்பேன். அவரது வகுப்பு மாணவர்களுக்கும் அதே முக்கியத்துவம் தருவேன்.
கேள்வி பதில்கள்
அபிலாஷ்…
ஒரு படைப்பாளி தன் நாவலைப் பதிப்பிக்க பதிப்பாளருக்கு பணம் கொடுப்பது, buy back கொள்கைப்படி பதிப்பிப்பது சரியா?
நேரடியாக பதிப்பாளரிடம் தன் படைப்பை கொடுத்து பப்ளிஷ் பண்ணுவது
பதிப்பிற்கான பணத்தை நானே தருகிறேன். எனக்கு புத்தகம் இருந்தால் போதும்
இதன் சாதகம பாதகம் சொல்ல முடியுமா?
பதில்…
என்னை பொறுத்த வரையில் buy book வேஸ்ட் டைம். எழுத்தாளரே ரிஸ்க் ஏற்கிறேன் என்றாலும் நாங்கள் யோசிப்போம்.
ஒருமுறை ஒரு புத்தகம் பதிப்பிக்க எடிட் பண்ணும் பொழுதுதான் தெரிந்தது அது ஒரு சினிமா காப்பி என்று. எழுத்தாளரிடம் செக் பண்ணி வரும் போது முழுக்க முழுக்க டைம்தான் வேஸ்ட். அப்படியே பதிப்பித்தாலும் அது வெற்றி பெறுவது இல்லை.
மார்க்கெட்டிங் முக்கியம். பதிப்பாளரிடம் நேரம் செலுத்த வேண்டும்.
புக் பிரம்மா கூட இதைப் பற்றி பேசியிருக்கிறார்.
கேள்வி…
நான் தனிப்பட்ட முறையில் எழுத்தாளரின் டெக்ஸ்ட் பார்ப்பேன்.
மனுஷ்ய புத்திரன் எழுத்தாளர் என்பவர் எப்பொழுதுமே இயக்கத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
கதை எழுதுபவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டுமா?
பதில்…
எழுத்தாளர் தன் எழுத்துடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
உதாரணமாக கவிஞர்கள் சிவப்பிரகாசம், ரஞ்சித், மற்ற மொழி கவிஞர்கள் தினமும் மாடர்ன் ஆர்ட் எழுதுவார்கள். அதுதான் அவர்களை எப்போதுமே எழுத்துடன் தொடர்பில் வைத்திருக்கிறது.
அடுத்தது பிராண்டிங்…
எழுத்தாளர்கள் தங்களை பிராண்ட்டிங்காக மாற்ற வேண்டும்.
உதாரணமாக சரவண கார்த்திகேயன், ஜெயகாந்தன் இவர்கள் தங்களையே பிராண்டிங் பண்ணிட்டு வந்தார்கள்.
அதனால் ஒவ்வொரு படைப்பாளியும் அதில் கவனம் செலுத்தலாம்.
பதிப்பாளருடன் நல்ல இணக்கம் வேண்டும். புத்தகம் பதிப்பில் ஒருவருடன் கவனம் செலுத்த வேண்டும்.
இதையெல்லாமே ஒரு எழுந்தாளர் கவனத்தில் வைத்துக் கொள்ளலாம்.
கேள்வி…
நாவலுக்கான குறைந்தபட்ச, அதிகபட்ச பக்க அளவென்ன?
ஒரு நாவல் 200 பக்கம் அதாவது 27000 முதல் 32000 வரை இருக்கலாம்.
60 to 70 பக்கம் இருந்தால் அவ்வளவாக போவது இல்லை. இருந்தாலும் வணிக ரீதியாக சிக்கல்கள் இருக்கும்.
ஒரு நாவல் என்பது 13000 முதல் 14000 வார்த்தை வரலாம் உச்சமாக 32000 வார்த்தைகள் வரை வரலாம்.
கேள்வி… ஞானசேகரன்
இன்றைய காலத்தில் உங்களை ரீச் பண்ணிய எழுத்தாளர் இருக்கிறார்களா?
பதில்…
70 சதவீதம் நானாக தேடிப் போய்தான் புத்தகங்களை வாங்கினேன். எல்வின் ஜேக்கப் கதையை கூட நான்தான் கேட்டு வாங்கினேன். அவர் கதைக்கு விசிறி ஆகிவிட்டேன் நான்.
கேள்வி ஹபிப்
தத்துவம் சார்ந்த கதைகள் நன்றாக இருக்குமா? வரவேற்பு இருக்குமா?
பதில்
வரவேற்பு பற்றி தெரியாது. அதன் வடிவம் டெக்ஸ்ட் நன்றாக இருந்தால் பதிப்பிப்பேன்.
அபிலாஷ் கேள்வி …
பதிப்பிக்கும் முன் முழுநாவலையும் படிப்பிங்களா?
பதில்…
என்னோட டீம் இருக்கிறார்கள். அவர்களும் படிப்பார்கள். ஒரு கதையில் பத்து சதவீதம் படித்தால் போதும். அதன் தரம் தெரிவதற்கு.
- எழுதித் தொகுத்தவர் மாலதி

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...