முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எடை குறைப்பு மருந்தின் ஆபத்து


 

மௌஞ்சாரோ, வெகோவி ஆகிய மருந்துகள் இந்தியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றன. வாரம் ஒருமுறை இதை ஊசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டதும் பயனருக்குப் பசி குறைந்து அவர் தன் உணவைக் குறைவாக உண்படுவதால் எடை குறைகிறது. அமெரிக்காவில் இதைப் பயன்படுத்தியோர் சொல்லும் முக்கிய புகார் ஊசியை நிறுத்தியதும் திரும்ப எடை வந்துவிடும் என்பது. அதாவது இச்சிகிச்சை உங்களை மருந்துக்கு அடிமையாக்கும் - எடையைத் தக்கவைக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்து, எடை அதனளவில் ஒரு பிரச்சினை அல்ல. எடை என்பது 'பசித்த உடலின் அறிகுறி'. அதாவது உடல் நல்ல சத்தான உணவின்றி குப்பையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஹார்மோன் கோளாறுகள், கைகால், முட்டி, முதுகுவலி, மனப்பிரச்சினை, தூக்கமின்மை, அசதி, இதய தமனியில் அடைப்பில் இருந்து புற்றுநோய் வரை. சிலருக்கு கொழுப்பு செல்கள் பெருகி உடல் கனக்கிறது. ஒருவிதத்தில் இது நல்லதே - இதைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து உடலை அவர் சீராக்க முடியும். சிலருக்கு உடல் ஒல்லியாக இருக்கும், ஆனால் உள்ளுறுப்பைச் சுற்றி கொழுப்பு படியும். அப்படியே அது கல்லீரலைச் சுற்றிப் படியும். தமனிகளை அடைக்கும். இவர்கள் தாம் ஒல்லியாக இருப்பதால் எதையும் மாற்ற வேண்டாம் என நினைப்பதால் திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட பக்கவாதம் வரும், மாரடைப்பு வரும். உடலை நாம் மிக மோசமான நிலைக்குக் கொண்டு போகும்போது நமது அணுக்கள் வெறுத்துப் போய் தம்மை அழித்துக்கொள்ள முனைவதும், அவை ஆக்ஸிஜன் இன்றி புராதன நுண்ணுயிர்களைப் போல வாழ் முயன்று பெருகுவதுமே புற்றுநோய் என ஒரு கருதுகோள் உண்டு (atavistic theory). ஆக உடல் எடை மிகச்சிறிய பிரச்சினைதான். அது ஒரு அழைப்பு மணி. காலனின் அழைப்பு மணி. ஆனால் உடல் எடையால் காலன் வருவதில்லை. காலன் வந்துவிட்டான் என்பதை உணர்த்தவே உடல் எடை வருகிறது. பிரச்சினை எடையல்ல.
அழகுக்காகவும் சௌகர்யத்துக்காகவும் ஒருவர் எடையைக் குறைக்கலாம். ஆனால் அவர் காலனிடம் அத்துடன் டேட்டிங் போக முடிவு பண்ணிவிட்டார் என அர்த்தம். ஏனென்றால் அவர் இந்த ஊசியை எடுத்துக்கொண்டு அதே பழைய குப்பையான உணவுகளையே தின்பார். 99% அவரது உணவு மாவுச்சத்தாலும் துரித உணவாலும் அமைந்திருக்கும். ஆகையால் உணவின் அளவு குறைந்தாலும் அவர் தன் உணவு முறையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவருக்கு ஒரு குறுக்குவழி கிடைத்துவிட்டதே. அவர் உடலை நல்ல சத்துணவின்றி, சத்துக்கள் இன்றி 'பட்டினி போடுவதால்' பிரச்சினைகள் இன்னும் மோசமாகிக் கொண்டே போகும்.
அதனாலே இதை ஒரு மோசடி மருந்து என்கிறேன். மருத்துவர்கள் கமிஷனுக்காக இதைப் பரிந்துரை பண்ணுகிறார்கள். ஏதோ நீரிழிவு நோயாளிகளுக்காகப் பரிந்துரைப்பதாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் நீரிழிவு இல்லாதவர்கள், தோற்றத்துக்காக இதைப் பயன்படுத்துவோரே. அவர்கள் தம் அறிவீனத்தால் இதற்குப் பலியாகிறார்கள். இந்திய அரசோ மோசடிக்காரர்களுக்காகவே கடைபரப்பி வைத்திருக்கிறார்கள். எதையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க மாட்டார்கள். எந்த 'கிட்னி திருடும்' கார்ப்பரேட் நிறுவனம் வந்து கமிஷன் கொடுத்தாலும் அனுமதி கொடுத்துவிடுவார்கள். இந்த நாட்டில் எதையும் நம்பக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...