முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எடை குறைப்பு மருந்தின் ஆபத்து


 

மௌஞ்சாரோ, வெகோவி ஆகிய மருந்துகள் இந்தியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றன. வாரம் ஒருமுறை இதை ஊசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டதும் பயனருக்குப் பசி குறைந்து அவர் தன் உணவைக் குறைவாக உண்படுவதால் எடை குறைகிறது. அமெரிக்காவில் இதைப் பயன்படுத்தியோர் சொல்லும் முக்கிய புகார் ஊசியை நிறுத்தியதும் திரும்ப எடை வந்துவிடும் என்பது. அதாவது இச்சிகிச்சை உங்களை மருந்துக்கு அடிமையாக்கும் - எடையைத் தக்கவைக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்து, எடை அதனளவில் ஒரு பிரச்சினை அல்ல. எடை என்பது 'பசித்த உடலின் அறிகுறி'. அதாவது உடல் நல்ல சத்தான உணவின்றி குப்பையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஹார்மோன் கோளாறுகள், கைகால், முட்டி, முதுகுவலி, மனப்பிரச்சினை, தூக்கமின்மை, அசதி, இதய தமனியில் அடைப்பில் இருந்து புற்றுநோய் வரை. சிலருக்கு கொழுப்பு செல்கள் பெருகி உடல் கனக்கிறது. ஒருவிதத்தில் இது நல்லதே - இதைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து உடலை அவர் சீராக்க முடியும். சிலருக்கு உடல் ஒல்லியாக இருக்கும், ஆனால் உள்ளுறுப்பைச் சுற்றி கொழுப்பு படியும். அப்படியே அது கல்லீரலைச் சுற்றிப் படியும். தமனிகளை அடைக்கும். இவர்கள் தாம் ஒல்லியாக இருப்பதால் எதையும் மாற்ற வேண்டாம் என நினைப்பதால் திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட பக்கவாதம் வரும், மாரடைப்பு வரும். உடலை நாம் மிக மோசமான நிலைக்குக் கொண்டு போகும்போது நமது அணுக்கள் வெறுத்துப் போய் தம்மை அழித்துக்கொள்ள முனைவதும், அவை ஆக்ஸிஜன் இன்றி புராதன நுண்ணுயிர்களைப் போல வாழ் முயன்று பெருகுவதுமே புற்றுநோய் என ஒரு கருதுகோள் உண்டு (atavistic theory). ஆக உடல் எடை மிகச்சிறிய பிரச்சினைதான். அது ஒரு அழைப்பு மணி. காலனின் அழைப்பு மணி. ஆனால் உடல் எடையால் காலன் வருவதில்லை. காலன் வந்துவிட்டான் என்பதை உணர்த்தவே உடல் எடை வருகிறது. பிரச்சினை எடையல்ல.
அழகுக்காகவும் சௌகர்யத்துக்காகவும் ஒருவர் எடையைக் குறைக்கலாம். ஆனால் அவர் காலனிடம் அத்துடன் டேட்டிங் போக முடிவு பண்ணிவிட்டார் என அர்த்தம். ஏனென்றால் அவர் இந்த ஊசியை எடுத்துக்கொண்டு அதே பழைய குப்பையான உணவுகளையே தின்பார். 99% அவரது உணவு மாவுச்சத்தாலும் துரித உணவாலும் அமைந்திருக்கும். ஆகையால் உணவின் அளவு குறைந்தாலும் அவர் தன் உணவு முறையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவருக்கு ஒரு குறுக்குவழி கிடைத்துவிட்டதே. அவர் உடலை நல்ல சத்துணவின்றி, சத்துக்கள் இன்றி 'பட்டினி போடுவதால்' பிரச்சினைகள் இன்னும் மோசமாகிக் கொண்டே போகும்.
அதனாலே இதை ஒரு மோசடி மருந்து என்கிறேன். மருத்துவர்கள் கமிஷனுக்காக இதைப் பரிந்துரை பண்ணுகிறார்கள். ஏதோ நீரிழிவு நோயாளிகளுக்காகப் பரிந்துரைப்பதாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் நீரிழிவு இல்லாதவர்கள், தோற்றத்துக்காக இதைப் பயன்படுத்துவோரே. அவர்கள் தம் அறிவீனத்தால் இதற்குப் பலியாகிறார்கள். இந்திய அரசோ மோசடிக்காரர்களுக்காகவே கடைபரப்பி வைத்திருக்கிறார்கள். எதையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க மாட்டார்கள். எந்த 'கிட்னி திருடும்' கார்ப்பரேட் நிறுவனம் வந்து கமிஷன் கொடுத்தாலும் அனுமதி கொடுத்துவிடுவார்கள். இந்த நாட்டில் எதையும் நம்பக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.