முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எடை குறைப்பு மருந்தின் ஆபத்து


 

மௌஞ்சாரோ, வெகோவி ஆகிய மருந்துகள் இந்தியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றன. வாரம் ஒருமுறை இதை ஊசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டதும் பயனருக்குப் பசி குறைந்து அவர் தன் உணவைக் குறைவாக உண்படுவதால் எடை குறைகிறது. அமெரிக்காவில் இதைப் பயன்படுத்தியோர் சொல்லும் முக்கிய புகார் ஊசியை நிறுத்தியதும் திரும்ப எடை வந்துவிடும் என்பது. அதாவது இச்சிகிச்சை உங்களை மருந்துக்கு அடிமையாக்கும் - எடையைத் தக்கவைக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்து, எடை அதனளவில் ஒரு பிரச்சினை அல்ல. எடை என்பது 'பசித்த உடலின் அறிகுறி'. அதாவது உடல் நல்ல சத்தான உணவின்றி குப்பையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஹார்மோன் கோளாறுகள், கைகால், முட்டி, முதுகுவலி, மனப்பிரச்சினை, தூக்கமின்மை, அசதி, இதய தமனியில் அடைப்பில் இருந்து புற்றுநோய் வரை. சிலருக்கு கொழுப்பு செல்கள் பெருகி உடல் கனக்கிறது. ஒருவிதத்தில் இது நல்லதே - இதைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து உடலை அவர் சீராக்க முடியும். சிலருக்கு உடல் ஒல்லியாக இருக்கும், ஆனால் உள்ளுறுப்பைச் சுற்றி கொழுப்பு படியும். அப்படியே அது கல்லீரலைச் சுற்றிப் படியும். தமனிகளை அடைக்கும். இவர்கள் தாம் ஒல்லியாக இருப்பதால் எதையும் மாற்ற வேண்டாம் என நினைப்பதால் திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட பக்கவாதம் வரும், மாரடைப்பு வரும். உடலை நாம் மிக மோசமான நிலைக்குக் கொண்டு போகும்போது நமது அணுக்கள் வெறுத்துப் போய் தம்மை அழித்துக்கொள்ள முனைவதும், அவை ஆக்ஸிஜன் இன்றி புராதன நுண்ணுயிர்களைப் போல வாழ் முயன்று பெருகுவதுமே புற்றுநோய் என ஒரு கருதுகோள் உண்டு (atavistic theory). ஆக உடல் எடை மிகச்சிறிய பிரச்சினைதான். அது ஒரு அழைப்பு மணி. காலனின் அழைப்பு மணி. ஆனால் உடல் எடையால் காலன் வருவதில்லை. காலன் வந்துவிட்டான் என்பதை உணர்த்தவே உடல் எடை வருகிறது. பிரச்சினை எடையல்ல.
அழகுக்காகவும் சௌகர்யத்துக்காகவும் ஒருவர் எடையைக் குறைக்கலாம். ஆனால் அவர் காலனிடம் அத்துடன் டேட்டிங் போக முடிவு பண்ணிவிட்டார் என அர்த்தம். ஏனென்றால் அவர் இந்த ஊசியை எடுத்துக்கொண்டு அதே பழைய குப்பையான உணவுகளையே தின்பார். 99% அவரது உணவு மாவுச்சத்தாலும் துரித உணவாலும் அமைந்திருக்கும். ஆகையால் உணவின் அளவு குறைந்தாலும் அவர் தன் உணவு முறையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவருக்கு ஒரு குறுக்குவழி கிடைத்துவிட்டதே. அவர் உடலை நல்ல சத்துணவின்றி, சத்துக்கள் இன்றி 'பட்டினி போடுவதால்' பிரச்சினைகள் இன்னும் மோசமாகிக் கொண்டே போகும்.
அதனாலே இதை ஒரு மோசடி மருந்து என்கிறேன். மருத்துவர்கள் கமிஷனுக்காக இதைப் பரிந்துரை பண்ணுகிறார்கள். ஏதோ நீரிழிவு நோயாளிகளுக்காகப் பரிந்துரைப்பதாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் நீரிழிவு இல்லாதவர்கள், தோற்றத்துக்காக இதைப் பயன்படுத்துவோரே. அவர்கள் தம் அறிவீனத்தால் இதற்குப் பலியாகிறார்கள். இந்திய அரசோ மோசடிக்காரர்களுக்காகவே கடைபரப்பி வைத்திருக்கிறார்கள். எதையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க மாட்டார்கள். எந்த 'கிட்னி திருடும்' கார்ப்பரேட் நிறுவனம் வந்து கமிஷன் கொடுத்தாலும் அனுமதி கொடுத்துவிடுவார்கள். இந்த நாட்டில் எதையும் நம்பக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...