முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒப்பந்தத் தொழிலாளர்கள் - அயோத்தி ராமி ரெட்டியின் மோசடி வரலாற்றில் மற்றொரு மைல் கல்



 ராம்கி நிறுவனத்தின் தலைவர் 'அல்ல அயோத்திய ராமி ரெட்டி' மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை வழக்குகள் மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரது நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2021இல் உலக வங்கிக் குழுமமே அமெரிக்காவில் இவர்களை ஒரு முறைகேட்டின் பெயரில் தடைபண்ணி விட்டார்கள் (பெரிய சம்பவக்காரர்கள்). ஏற்கனவே சென்னையில் 2012இல் பணிகளைச் சரிவரச் செய்யாததற்காக சென்னை மாநகராட்சி இவர்களுடனான ஒப்பந்தத்தைத் தடைபண்ணியுள்ளது. இவர்களுடைய முறைகேடுகளின் பட்டியலை பதிப்பித்தால் அது ஜெயமோகனின் வெண்முரசு அளவுக்கு நீண்டுவிடும் என்பதால் அதை இங்கே செய்ய முடியாது. ஆனால் இவரது நிறுவனங்களுக்குத் தொடர்ந்து இந்தியா முழுக்க ஒப்பந்தங்களை ஏன் வழங்குகிறார்கள்? இவர் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பி. ஜெகன் மோகன் ரெட்டியின் வலதுகை என அறியப்பட்டவர். அண்மையில் இவர் பாஜக பக்கம் சாய்ந்து விட்டாரோ என ஐயம் நிலவியது. இல்லை நான் ரெட்டிகாரு பக்கம்தான் என ஒரு கையை ஜெகன் மோகன் பக்கமும் நீட்டினார். துப்புரவுப் பணியாளர் சம்பளப் பிரச்சினைக்குப் பின்னால் முறைகேடுகளின் மலைத்தொடரே ஓடுகிறது. ராமி ரெட்டிக்குப் பின்னால் பாஜகவா ஜெகன் மோகன் ரெட்டியா என்பது கரகாட்டக்காரன் கார் காமிடியைப் போன்றது. இவர் தன் ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பார் என்பது அல்ல பிரச்சினை என இப்போது தெரிகிறது - இவர் இந்த புரோஜெக்டையே முடிக்காமல் பாதியில் கைவிட்டுப் போகவே வாய்ப்பதிகம். அதுவே அவரது வரலாறு. பணத்தை வாங்கி கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு ஜகா வாங்குவதே இவரது 13 ஆண்டு வரலாறு. இவர்களை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தம் வாழ்க்கையை அடமானம் வைப்பது நித்தியானந்தாவை நம்பி கைலாசாவுக்குப் போவதற்குச் சமம். மேயர் ப்ரியா சொல்வதைப் போல இவர்கள் தம் ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளைப் பண்ணிக்கொடுப்பார்கள் எல்லாம் சும்மா கதைதான். இவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியையே முடிக்க மாட்டார்கள். ஊழியர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

எப்படியும் மிஸ்டர் ராமிரெட்டி ராவோடு ராவாக தலைமறைவாகிவிட்டு இன்னொரு ஊரில் இதே போல வேறு பெயரில் தோன்றி லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிக்கொண்டே பாஜக, ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் என இருவேறு கட்சிகளின் சட்டைப் பைகளில் பாதுகாப்பாக உறங்குவார். அப்படியே ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து என்றுகூட மோசடி வேலை செய்து பல இடங்களில் தடைசெய்யப்பட்டு சர்வதேச டானாகிவிடுவார்.
நீரவ் மோடி, மல்லையா போன்ற மற்றொரு வகை மோசடித் தொழிலதிபரான இந்த ராமி ரெட்டியிடம் இத்தனை ஆயிரம் தொழிலாளர்களிடம் கொடுப்பதற்குப் பதிலாக அரசே அவர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம். ராமி ரெட்டிக்கும் அமலாக்கத்துறைக்கும், அவரது கட்சிக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் அட்ஜெஸ்மெண்டில் சாதாரண மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...