முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆப்யந்தர குற்றவாளி


 

"ஆப்யந்தர குற்றவாளி" சேதுநாத் பத்மகுமார் என்பவர் எழுதி இயக்கிய படம். ஆசிப் அலி நாயக வேடத்தில். 498A போன்ற போலி வழக்குகளால் அலைகழிக்கப்படும் இளைஞர் ஒருவரின் கதை. இக்கதை நான் கேட்ட, பார்த்த பல்வேறு சம்பவங்களை மீள்நிகழ்த்தியதைப் போல உள்ளது. பெற்றோரின் அழுத்தத்தின் பெயரில் திருமணம் செய்து அதிலிருந்து உடனடியாக வெளியேற பொய்க்குற்றங்களை கணவர் மீது சுமத்தி வழக்காடுமன்றம் வரும் ஒரு பெண். அவர் இறுதியில் மனம் மாறி நீதிபதி முன்பு உண்மையை ஒப்புக்கொண்டு வழக்கைப் பின்வாங்குகிறார். நடுவே துணைக்கதைகளாக பொய்க்குற்றச்சாட்டின் பெயரில் மகளைக் காண அனுமதிக்கப்படாத அப்பாவும், அம்மாவாலும் தாத்தாவாலும் அவர் மீது அச்சத்திடமும் இயல்பாகவே தனக்கு அப்பா மீதுள்ள பாசத்திடமும் மோதித் தடுமாறுகிற அவரது பெண் குழந்தை, கணவர் இறந்தபிறகு மாமனார் பெயரில் உள்ள சொத்தைக் கேட்டு வழக்காடு மன்றம் செல்லும் பெண் எனக் காத்திரமான சில காட்சிகளும் உள்ளன. அந்த மகளைக் காணத் தவிக்கும் அப்பாவின் பாத்திரத்தில் சித்தார்த் பரதன் அபாரமாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, பெரும்பாலானவர்கள் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். சிறு பாத்திரங்களும் தெளிவாக, சின்னச்சின்ன நகைச்சுவை சங்கதிகளுடன் எழுதப்பட்டுள்ளன.

இப்படத்தின் பலவீனம் அதன் திரைக்கதை. இத்தகைய ஆணியக் கதைகளை எழுதுவது கடினம் (இது பெண்ணியக் கதைகளுக்கும் பொருந்தும்) - பேச வேண்டிய பிரச்சினையும் கருத்தும் நம் முன்னே உள்ளதால் கதையில் உள்மோதலோ அடுத்தடுத்த சிக்கல்களோ உருவாகாது. பேச ஆரம்பித்ததும் முடிகிற பாணி கதை இது. ஆகையால் பல்வேறு நிலைகளில் நாடகீய மோதல்களைத் திட்டமிட்டு கவனமாக உருவாக்கினாலே இதை ஒரு சுவாரஸ்மான கதையாக்க முடியும்.
அல்லது இப்படத்தை இயக்குநர் நாயகியின் பார்வையில் இருந்து எழுத முயன்றிருக்க வேண்டும். குழந்தைப் பருவத்துச் சிக்கல்கள், வளர்ந்தபிறகு அவளுக்கு விருப்பமில்லாமல் திருமணம் முடிவு பண்ணப்படுவது, அதற்கு அவளது பெற்றோருக்கு வரும் அழுத்தங்கள், அவளுக்கு ஏற்கனவே உள்ள உறவு, அவள் பல நிலைகளிலும் ஏமாற்றப்படுவது, அவள் அடுத்து தன் கணவனையும் கணவன் குடும்பத்தினரையும் ஏமாற்ற முயல்வது, அதற்கு தனக்கு நியாயம் இருப்பதாக நம்புவது, அடுத்தடுத்து வரும் உள்மோதல்கள், அவளது துன்பங்கள், அவளது மனமாற்றம், அதற்கு அடுத்து வரும் திருப்பங்கள் என. நகைமுரணைக் கொண்டு இயக்குநர் தான் உத்தேசித்த கதையை, உண்மையை இன்னும் வலுவாக கொண்டு சேர்த்திருக்கலாம்.
வழக்கம்போல வோக் ஊடகங்கள் இப்படத்துக்கு மிகக்குறைவான ரேட்டிங்கே கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கூகிள் விமர்சனங்களில் ரேட்டிங் நன்றாக உள்ளது.
முக்கியமான படம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...