முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாடா மலர்



 எனக்கு இடதுபுறம் நிற்பவர் என் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். ஆன் தெரஸா பென்னி. அவருக்கு நேற்றே முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடந்தது. கடுமையான உழைப்பாளி. ஆய்வுக் காலத்திலே கல்யாணம், குழந்தைப் பிறப்பு, புது வேலை என மாற்றங்களும் சவால்களும் வர அவர் அவற்றுடன் முனைவர் ஆய்வுப் பணியையும் செறிவாக மேற்கொண்டார். எனக்கு வலப்பக்கம் நிற்பவர் எப்.டி எனக்கு எம்.ஸி.ஸி கல்லூரியில் பிரசித்தமாகத் திகழும் பேராசிரியர் பிராங்கிலின் டேனியல். நான் அங்கே முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தபோது எப்.டி சார் அங்கு ஏற்கனவே நிலைப்பெற்று பெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த பேராசிரியர்களின் மத்தியில் ஒரு நாட்காட்டியில் விடுமுறைத் தினங்கள் கவனப்படுத்தப்பட வேலை தினம் போலத் தோன்றினார். சற்று கூச்சமான, கனவான் தோரணை கொண்ட நட்பான மனிதர். இளைஞர்களுக்கு ஈடானத் தன்னைக் கருதி இளைஞர்களாலும் (இயல்பாகவே) அவ்வாறே கருதப்பட்டு சமமாக நினைக்கப்படவர். நான் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பத்தில் விரும்பி பின்னர் அப்பணி செய்யப் பிடிக்காமல் ஊடகம், இதழியல் என்று சிறிது காலமும் அறிவியல் இதழ்களைத் திருத்தும் பணியிலும் இருந்து வேலையில்லாதவன், வேலை தெரிந்தவன் தான் உண்மையான வேலைக்காரன் எனக் கருதி கல்லூரி வேலைக்குச் சென்று முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தேன். பட்டம் பெற்று பெங்களூருக்கு வந்தேன். அப்போது நிரந்தர வேலையில் எம்.ஸி.ஸியில் இருந்த எப்.டி சார் பேராளுமைகள் ஓய்வுபெற்று எப்.டி சார் துறையின் தலைவராகவும் முனைவர் பட்ட தேர்வாளராகவும் மாறிவிட்டார். ஆனின் தேர்வாளர்களுக்கானப் பட்டியலைத் தயாரிக்கும்போது நான் கொடுக்க பெயர்களில் அவரும் ஒருவர். அவரைத் தேர்வு பண்ணினார்கள் என்பதே எனக்கு அவரது பெயரில் தேர்வாளர் அறிக்கை வரும்போதுதான் தெரியும். நேற்று நடந்த வாய்மொழித் தேர்வின்போது அவரைச் சந்திக்கையில் எனக்கு சற்று விசித்திரமாக இருந்தது - என் மனத்தில் காலம் கடந்து நானும் அவரும் மாறிவிட்டதாக எந்தத் தடயமும் இல்லை. அம்மாற்றங்கள் புறவயமானவை. எப்போதும் வாடாத மலரொன்று காற்றில் அசைந்தபடி காற்றில் நிற்கிறது.

எப்.டி சார் நேற்றைய தேர்வில் பயங்கரமாகக் கேள்விகளை அள்ளி வீசியபோது இவ்வளவுக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லையே என்று சில கணன்ங்கள் யோசித்தேன். ஆனால் அவர் உடனடியாகக் கனிவாகவும் அன்பாகவும் பேசி பட்டத்தையும் அறிவித்தார், நிகழ்ச்சி முடிந்ததும் கலாய்ப்பது, சொற்களை வைத்து விளையாடுவது என துடிப்பாக லகுவாக இருந்தார். எல்லாமே எம்.ஸி.ஸி ஸ்டைல்தான் என்பதும், அதுவே எனக்கு வாழ்க்கைப் பாடமாகவும் ஒரு காலத்தில் இருந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது.
இத்தனை ஆண்டுகளில் வாடாத அம்மலர் எங்களுக்கு இடையில் சுடரொளி வீசுவதை, அவ்வொளி காலமெனும் கண்ணாடியை மறையச் செய்வதை உணர்ந்தேன். வயது, அனுபவம், மாற்றங்கள் நம்மை நாமே எதையோ நம்பவைக்கச் செய்யும் பிரயத்தனங்கள். இருபதுகளுக்குப் பின் நாம் எதையும் புதிதாகக் கற்பதோ மாறுவதோ இல்லை.
பட்டம் அறிவிக்கப்பட்டபின் நான் ஆன் தெரஸா பென்னியிடம் சொன்னேன்: அரசுப் பணியொன்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். முனைவர் பட்ட நெறியாளராக உங்கள் மாணவர்களிடம் அன்பாக, கனிவாக, பொறுமையாக, கூலாக இருங்கள். புன்னகையுடன் மகிழ்ச்சியுடன் "நிச்சயமாக" என்றார். நான் என் நெறியாளரிடம் இருந்து பெற்ற தாக்கத்தையே என் மாணவர்களிடம் வெளிப்படுத்தினேன். ஆனும் அவ்வாறே நடந்துகொள்வார் என நினைக்கிறேன். இது ஒரு சங்கிலித் தொடர். அன்பையும் மகிழ்ச்சியையும் ஜனநாயகப் பண்புகளையும் நாம் விதைத்தால் அது ஒரு தனியான மரபை உண்டுபண்ணும்.
அவருக்கு என் வாழ்த்துகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.