எனக்கு கடுமையான விமர்சனங்களில் நம்பிக்கையில்லை. சொல்லப்போனால் எனக்கு இலக்கிய மதிப்பீடல், தரவரிசை, வெற்றி தோல்வியிலும் நம்பிக்கையில்லை. இன்னும் சொல்லப்போனால் என் கண் முன்னால் புத்தகங்களே உள்ளன, எழுத்தாளர்கள் இல்லை. ஒரு பிரதியின் போக்குகளை, அதில் தோன்றும் சிக்கல்களை அலசலாம். அதிலும் நம்மால் புறவயமாக சில தொழில்நுட்ப உள்ளோட்டங்களை மட்டுமே அடையாளம் காண முடியும். வாசிப்பில் விரியும் படைப்பானது தோன்றி விகசிக்கும் மானுடப் பிரக்ஞை. புத்தகம் என்பது எழுதப்பட்டதோ, வாசிக்கப்படுவதோ அல்ல என்று நினைக்கிறேன். அதனாலே அது உடலுறவுக்கு நெருக்கமான அனுபவம். அது நம்மை இன்மைக்கு வெகு நெருக்கமாகக் கொண்டு போகிறது. எழுதி முடிக்கையில் மட்டுமல்ல எழுதும்போது கூட ஒரு படைப்பாளி மரணித்துவிடுவது இதனாலே. நான் இவ்விசயத்தில் விதிவிலக்கானவன் என நினைக்கிறேன்.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்