முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாயக் கதவின் கதை

 பொதுவாக கடுமையான விமர்சனங்களைப் பார்க்கையில் எனக்கு விமர்சிக்கப்பட்ட படைப்பாளி மீது இரக்கம் மேலிடும். ஆனால் அண்மையில் அவ்வாறு விமர்சித்த ஒருவரே என் இரக்கத்தை, வருத்தத்தை, கவலையைக் கோரும்படியாக ஒரு பதிவெழுதியிருந்தார்: தான் எழுதிய எதிர்மறை விமர்சத்தினால் தனக்கு எதிர்காலத்தில் திறக்கப்படக்கூடிய கதவுகள் திறக்கப்படாமல் போகக்கூடும் எனத் தனக்குத் தெரியும் என்று அவர் சொல்கிறார். அவரது வருத்தம் புரிகிறது. இது இன்றைக்கு பல எழுத்தாளர்களுக்குள்ளும் இருக்கும் அச்சம்தான். எழுத்தாளர்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் வரும் ஒரு இயக்கத்தின் பகுதியாக தம்மை மாற்றும்போது அவர்களை இணைப்பது தன்னலமும் அச்சமுமே. அவர்கள் அதனாலே தம் கருத்துக்களை தம் இதயத்துக்குள் புதைத்துக் கொள்கிறார்கள். எழுத்தாளர்கள் தம் கருத்துக்களைச் சுதந்திரமாகத் தெரிவிக்க முடியாமல் போகும்போது அவர்கள் அகவெளியும் சுருங்குகிறது, அவர்களுக்கும் சமூகத்துக்குமான தொடர்பு வலை அறுகிறது, அவர்கள் மௌனத்தை தூக்குக் கயிறாக முடிச்சிட்டு தம் கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். தமிழில் இதற்குச் சிறந்த உதாரணம் விஷ்ணுபுரம் அமைப்பு. ஜெயமோகன் என்னதான் எழுத்தாளர்கள் திமுக சார்பு எடுத்து போலியாக நடிப்பதாக விமர்சித்தாலும் உண்மையில் தமிழ் எழுத்தாளர்கள் என்றுமே அரசைப் பற்றி விமர்சனம் செய்ததில்லை. ஆனால் அவர்கள் கலாச்சார விமர்சனத்தை, கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். தொடர்ந்து விருதளிப்பது, வேறு இலக்கிய மேடைகளைத் தன் செல்வாக்கால் ஆக்கிரமிப்பது, வெளிநாட்டுப் பயணங்களைத் தன் ஆதரவாளர்களுக்கு அமைத்துக் கொடுப்பதன் வழியாக அவர் வெளியே உள்ள படைப்பாளிகளை தன்னை விமர்சிக்காமல், தன் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்லாமல் நாக்கைத் துண்டித்துவிடுகிறார். கமல்ஹாசன், மணிரத்னம் தொடர்பையும் அவர் சினிமா வாய்ப்பு எனும் ஆசை காட்டவே பயன்படுத்தி இருக்கிறார். சினிமாவுக்குப் போக விரும்பும் இளம் படைப்பாளிகளும் எதற்குப் பகைத்துக் கொள்ள வேண்டும் என அமைதியாகப் போகிறார்கள். எதையும் இழக்கச் சாத்தியமில்லாத வாசகர்களும் பேஸ்புக்கர்களுமே இப்போதும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இச்சூழல் அந்த காலத்துக்கு ஸ்டாலினிய ரஷ்யாவையும், ஹிட்லரின் ஜெர்மனியையும் நினைவுபடுத்துகிறது.

அச்சம் ஆபத்தானது. அது இலக்கியத்தை உள்ளிருந்தே தின்னும் புற்றுநோய். எனக்கு மேற்சொன்ன எழுத்தாளரின் விமர்சனப் பாணியிலோ கருத்துக்களுடனோ உடன்பாடில்லை. ஆனால் அவரது பயத்தைப் பார்க்க பயமாக உள்ளது. தமக்கான வாய்ப்புகள் பறிபோகக்கூடும் என ஒரு எழுத்தாளர் பயப்படும்போது அவர் தனக்கான வாய்ப்புகளும் திறக்கூடிய கதவுகளும் உள்ளன என நம்புகிறார் என்றே பொருள். (அதேநேரம் அவர் இதை ஒரு தற்காலிக உணர்வாகவே பார்க்கிறார். இது அவரை மௌனிக்க வைப்பதில்லை.) நிஜத்தில் இந்த அச்சமே ஒரு கற்பிதம்தான். இப்படியான கற்பிதங்கள் இன்னும் அச்சமூட்டுகின்றன.
நீங்கள் பொய்யாக ஒரு கதவை உருவாக்கி அதை ஒரு சிறு திரளின் முன் வைக்கிறீர்கள். ஒருவர் பாடல் எழுத வாய்ப்பு பெற்றால் அது தன்னாலே நடந்தது எனச் சொல்லி, ஒருவர் தேசிய விருது பெற்றால் அதுவும் தன்னால்தான் எனக் கோரி அக்கதவைக் கட்டமைக்கிறீர்கள். அமெரிக்காவில் இருபது பேர்கள் திரளும் கூட்டம் ஒன்றை நடத்தி நான் சர்வதேச அளவிலான கூட்டத்தை நடத்தி அங்கு என் ஆதரவளார்களை அனுப்புவேன் என ஒரு கதவை வரைந்து காட்டுகிறீர்கள். (ஒரு ஒப்பீட்டுக்கு, உலகம் முழுக்க மில்லியன் கணக்கில் புத்தகங்களை விற்கும் பெருமாள் முருகன் எவ்வளவு அடக்கமாக இருக்கிறார் எனப் பாருங்கள்.) இப்போது அக்கதவை நோக்கி பரிதவிப்புடன் மக்கள் நிற்கிறார்கள். அல்லது ஒருவேளை அக்கதவு திறந்துவிடுமோ எனும் அச்சத்தில் நிற்கிறார்கள். எப்படி கடவுள் பேசுவதில்லையோ அதேபோல இம்மாதிரி கதவுகளும் திறப்பதில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...