முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்மையான சிறுபான்மை 'ஆதிக்கம்'

பெங்களூரில் மலையாளிகளின் ஆதிக்கத்தின் விளைவாக மாட்டுக்கறி தாராளமாகக் கிடைத்து வந்தது. அங்கு அரசு தடைவிதித்தபோதும் கூட முதிய மாடுகளை அறுக்கலாம் எனும் நிபந்தனைகளுடன் அனுமதித்தது. அங்கு இக்கடைகளை நடத்தி வரும் இஸ்லாமியர்களும் ஓரளவுக்கு சுதந்திரமாக செயல்பட முடிகிறது. அதாவது பாஜக அரசு இருந்தபோதும் கூட இதுவே நிலை. ஆனால் மைசூர் அப்படி அல்ல. மைசூர் மன்னர்களின் காலத்தில் பிராமணர்களுக்கு அதிகமாக நிலத்தையும் செல்வத்தையும் பதவிகளையும் வழங்கினார்கள். பிராமணர்களுக்கு இங்கு ஒரு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. அடுத்து மார்வாரி ஜெயின்களின் ஆதிக்கமும் அதிகம். அவர்கள் வசமே பெரும்பாலான கடைகளும் வீடுகளும் உள்ளன. இதனால் மறைமுகமாகவே இறைச்சி உணவுகள் பரவலாகக் கிடைக்காமல் தடை செய்துவிடுகிறார்கள். ஒருமுறை சுற்றி வந்தாலே இதுவொரு சைவ உணவு நகரம் எனும் உணர்வு ஏற்படும். ஆனால் அது உண்மையல்ல, இறைச்சி உணவை உண்போர் குறிப்பிடத்தக்க அளவில் உள்கிறார்கள். தாம் உண்ணும் உணவைக் கொண்டாடும் உரிமை மட்டும் அவர்களுக்கு இருப்பதில்லை. கூச்சம், குற்றவுணர்வு இங்குள்ள பொதுப்பண்பாட்டில் உள்ளது.

நாங்கள் இங்கு வந்தபோது மாட்டுக்கறியைத்தான் தேடினோம். அது கிடைக்காது என்றே எல்லாரும் சொன்னார்கள். கூகிளும் கூடச் சொன்னது. அதன்பிறகு நாங்கள் உள்ளூரில் ஒவ்வொருவரிடமாக விசாரித்தோம். ஒரு கடையைக் கண்டுபிடித்தோம். அங்கும் ஒளித்தே விற்கிறார்கள். அக்கடைக்காரரிடம் கேட்டால் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதால் வெளிப்படையாக விற்க முடியவில்லை என்றார். இன்னும் அப்பிரச்சினை சரியாகவில்லை. ஒருவிதத்தில் மைசூரின் உண்மையான சிறுபான்மை பிராமணர்களும் ஜெயின்களுதாம். ஆனால் அவரக்ள்தாம் பெரும்பான்மையினரின் மென்னியை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார்கள். (இன்னொரு காரணம் இங்குள்ள பிராமணமயமாகிவிட்ட லிங்காயத்துகள். ஆனால் அவர்களுடைய எண்ணிக்கையும் இஸ்லாமியர்களின் கூட்டுத்தொகைக்கு குறைவுதான். மேலும் அவர்களும் ரகசியமாக இறைச்சி உண்கிறார்கள்.)
(அரசு வெளியிட்டுள்ள SES ஆவணத்தின்படி)கர்நாடகாவிலே மொத்தமாகவே அவர்கள் 17 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியரோ 70 லட்சம் பேர்கள் இருக்கிறார்கள். மைசூரில் இஸ்லாமியர் 2 லட்சத்துக்கு மேல் இருக்கிறார்கள். இங்குள்ள பிராமணர்களுக்கு சில ஆயிரங்களுக்குள்ளே இருப்பார்கள். ஜெயின்களின் மக்கள் தொகையோ 1.13%.
எதற்கு மக்கள் தொகையைக் குறிப்பிடுகிறேன்? வரிப் பங்களிப்பைச் சொல்லத்தான். பெரும்பான்மையினரே அதிகமாக உழைத்து வருமானத்தைப் பெருக்கி ஒரு மாநிலலத்தை, நகரத்தை வளமாக வைக்கிறார்கள். அரசுக்கு அதிகமாக வரியளிக்கிறார்கள். இங்கு என்ன சிக்கலென்றால் நிலமும் வணிக முதலீடுகளும் 1-3% கீழுள்ள மக்களிடம் அதிகமாக உள்ளது. கலாச்சார விழுமியங்கள் மீதும் அவர்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. விளைவாக பெரும்பான்மையினரை மாற்றுவழியில் சென்று முந்திக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முடிகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனம் மோனோபொலிதான். அதன் விளைவாக பெரும்பான்மை மக்களுக்கு புரதச் சத்து அதிகமான உணவு கிடைப்பதில்லை. தமது உணவு விருப்பங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடிவதில்லை.
இத்தரவைப் பாருங்கள் - தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு, ஆந்திராவுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் இறைச்சி உண்போர் எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் அதுவொன்றும் சாதாரண தொகை அல்ல - மாநிலத்தின் 81.2% பேர்கள். 40,000 டன்களுக்கு மேல் கோழிக்கறியையும் மாட்டுக்கறியையும் மக்கள் கர்நாடகாவில் உண்கிறார்கள்.
ஆனால் இதை வெளிப்படையாக பெங்களூரில் பார்க்க முடியாது. இஸ்லமியர் வசிக்கும் பகுதியில் மட்டுமே காண முடியும். அங்குதான் இந்துக்களும் போய் பரவலாக இறைச்சியை உண்ண வேண்டும். அதாவது இறைச்சிக் கடைகளையும், இறைச்சி உணவுக் கடைகளையும் ஒருவித 'சேரியாக' பெருநகரத்திற்குள்ளேயே மாற்றி வைத்திருக்கிறார்கள்.
சிறுபான்மையினரின் (18%) கையில் இந்துப் பெரும்பான்மையினர் போவதும், அவர்களின் கைப்பாவைகளாக இவர்கள் மாறுவதும் இந்துத்துவாவின் செயல்திட்டம்தான். ஆனால் அப்போதும் கூட பண்பாட்டு அரசியல்தான் மக்களின் அன்றாட வாழ்வின் அடையாளத்தைத் தீர்மானிக்கிறது. அதன் குடுமி எப்போதும் சிறுபான்மையினர் கையிலே இருக்கிறது.
இன்னொரு சிக்கல் வெளிப்படையாக ஒன்றைச் செய்ய முடியாமல் போகையில் மக்கள் சுதந்திரமாக தம் வாழ்வை அனுபவிக்கும், இருத்தலை முழுமையாக உணரும் உரிமையை கைவிடுகிறார்கள். தமக்குள்ளேயே அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். சொந்த மண்ணில் குடியேறிகளாக உணர்கிறார்கள். முன்பு பிரிட்டீஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியர்கள் இப்படித்தான் உணர்ந்தார்கள் என்பதால் இதை ஒரு 'நவகாலனிய நிலை' என்றும் சொல்லலாம். நீங்கள் இதை பெரும்பாலான கன்னடர்களின் உடல்மொழியில் தென்படும் கூச்சத்தில், மென்மையில், சிறுபிரச்சினைகளுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்படும் போக்கில் காணலாம்.
பிடித்த உணவை வெளிப்படையாக உண்ணாமல் போவதன் பின்னால் கூட்டு உளவியலில் இவ்வளவு விசயங்கள் நடக்கின்றன. அது பின்னர் ஒரு நோய்மையாகவே மாறிப் போகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.