முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் எழுத்தில் வந்துள்ள தேக்கம்?

 


புத்தகம் என்றாலே பண்டம்தான். அதைப் படைப்பாக்குவது வாசிப்பு. நல்ல வாசிப்பு நல்ல எழுத்தை உண்டாக்குகிறது. நல்ல எழுத்து நல்ல வாசிப்பை ஏற்படுத்துவதில்லை. நான் சொல்வது பரவலான வாசிப்பு கூட அல்ல. சிறுகுழுக்களுக்குள் நிகழும் தீவிர விவாதங்கள், பரிசோதனைகளுக்கான தேடல்கள், கடுமையான ஏற்புகள், மறுப்புகள், பரிசீலனைகள். துரதிஷ்டவசமாக இன்று சிறு வட்டத்துக்குள் நிகழும் கூட்டங்களுக்குள் கூட படைப்புகளை வாசித்து விமர்சிக்கும் திறன் உள்ளவர்கள் வருவதில்லை. அங்கும் அறிமுக வாசகர்களே அதிகம். அவர்களை வழிநடத்த ஆட்கள் மிகமிகக் குறைவு. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் நம் இலக்கிய இதழ்களில் புத்தக மதிப்புரைகள், இலக்கிய விவாதங்களில் வீழ்ச்சியைக் காண ஆரம்பித்தோம். அந்த இடத்தை சமூக, அரசியல், ஊடக விவாதங்கள் எடுத்துக் கொண்டன. பின்னர் சிறுபத்திரிகைகளிலும் துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் வெகுமக்கள் பண்பாடு, நாட்டுப்புறவியல் போன்ற விசயங்கள் மீதான விவாதங்கள் நடந்த அளவுக்குக் கூட இலக்கிய விவாதங்கள் இடம்பெறவில்லை என்பது என் புரிதல். மதிப்புரை எழுதுவோரும் ஒன்று தம் ஒருதலைப்பட்சமான கருத்தை எழுதுகிறார்கள், அல்லது போலியாகப் பாராட்டுகிறார்கள் அல்லது நூல்களின் கருத்துக்களையும் கதையையும் தொகுத்து எழுதுகிறார்கள். கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் கூட இன்று நூல்கள் நிராகரிக்கப்படுவதில்லை - வாசிப்புத்தன்மைக்காக மட்டுமே மறுக்கப்படுகின்றன. இதுவும் நம் வாசிப்பில் நேர்ந்துள்ள வீழ்ச்சிதான். 60-70களில் துவங்கி 90கள் வரையிலும் வெவ்வேறு விதமான மதிப்புரைகள், அளவுகோல்களின்படி செய்யப்பட்ட விமர்சனங்கள் அதற்கு அடுத்த இரு பத்தாண்டுகளில் மறைந்துவிட்டன. இந்த விமர்சகர்களை நாம் கேலி செய்தும், நிராகரித்தும் ஒழித்துவிட்டோம். இவர்களுடைய வழித்தோன்றல்கள் இன்று இலக்கியத்தில் அனேகமாக இல்லை. மீதமுள்ளோர் அன்றாட அரசியலைக் குறித்தும், கோட்பாட்டு அரசியலை வைத்தும் எழுதுகிறார்கள். ஏனென்றால் நம் சமூகச் சூழல் தீவிர இலக்கிய உரையாடல்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அவற்றின் இடத்தில் நம் சூழல் வெகுஜனத்தன்மை கொண்ட எளிய உரையாடல்களைக் கொண்டு வந்தது. தீவிர எழுத்தாளர்களும் பதிப்பாளர்களாக, கல்ட் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்களாக, பேச்சாளர்களாக, அரசியல்வாதிகளாக மாறிவிட்டதில் அவர்களைப் பின் தொடர்ந்து போகவே அடுத்த தலைமுறையும் விரும்புகிறார்கள். இது ஏற்படுத்திய இடைவெளி மிகப்பெரியது. இதன் விளைவாக இன்று எழுதும் நாவலாசிரியர்களுக்கு எப்படி, எதை எழுதுவது, எதை லட்சியமாக வைத்து எழுதுவது என ஒன்றும் புரியவில்லை. அவர்கள் உலக இலக்கியம் படித்தும் எழுத வருவதில்லை. ஒரு வெற்றிடத்தில் இருந்து வருகிறார்கள். நம் இலக்கிய வரலாற்றில் வேறென்றுமே இல்லாத ஒரு நெருக்கடியை இன்று சந்திக்கிறோம்.

ஆகையால் இலக்கியம் பண்டமாக்கப்படுவது, அதன் தரம் குறைவதைப் பற்றி கவலைகள் அவசியமில்லாதவை. நமக்குத் தேவை நல்ல வாசிப்புக் கூட்டங்கள், நல்ல படைப்பாளிகளுக்கு அங்கீகாரம், பொருளாதார ஆதரவு, நாவலுக்கான நிதி நல்கைகள், தீவிர விவாதங்கள், உலக இலக்கிய உரையாடல்கள், மொழிபெயர்ப்புகள், ஊடக கவனம். நல்ல நாவல்கள் தாமாகவே தோன்றி நிலைகொள்ளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...