வலதுசாரி பார்வையுடன் எழுதப்பட்ட ஒரு மோசமான கட்டுரை. நலத்திட்டங்களால் தமிழ்நாட்டு பொருளாதாரம் அழிவில் இருப்பதாக கட்டுரையாளர் சொல்வது உண்மையல்ல. வேறு எந்த மாநிலத்தையும் விட ஆரோக்கியமான நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட பலமடங்கு அதிகம். அது மட்டுமல்ல, நலத்திட்டங்கள் மக்களிடம் பணத்தைக் கொண்டு சேர்ப்பதால் மக்கள் செலவு செய்கிறார்கள், இதனால் சந்தையில் பணப்புழக்கம் ஏற்படுகிறது, பொருளாதாரம் வருகிறது என்று சொன்னவர் முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம். அதை இம்மாதிரி வலதுசாரிகள் ஏற்பதில்லை. அவர்கள் அதிக வரி போட்டு மக்களை வாட்டி, மொத்தப் பணத்தையும் பிடுங்கி கடனாகவும், கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்களாகவும் தனியாருக்குக் கொடுப்பதைக் கொண்டாடுவார்கள். அதனால் நாட்டுக்கு கிடைக்கும் லாபம் என்ன, எவ்வளவு வருவாய் எனக் கேட்க மாட்டார்கள். இங்கிருந்து கடனாகப் பெற்ற பணத்தை வெளிநாடுகளில் முதலீடு பண்ணுகிறேன் என்று பணத்தை வெள்ளையாக்குவதைக் கேள்வி கேட்க மாட்டார்கள். நலத்திட்டங்களை மட்டும் 'இலவசம்' என விமர்சிப்பார்கள்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments