முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு வளரும் தேசத்தின் சீரழிவு


 

"பெட்ரோ பரோமா" நாவலைக் குறித்து இப்படியொரு தகவல் உள்ளது: "Initially, the novel met with cool critical reception and sold only two thousand copies during the first four years." அதாவது நாவலை ஆரம்பத்தில் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை. சரியான கவனம் இல்லை. அதனால் 2000 பிரதிகள் இரண்டாண்டுகளில் விற்பனையாகின. இதுவே தமிழ்நாடு என்றால் இந்த 2000 பிரதிகள் எவ்வளவு பெரிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டிருக்கும்? மெக்ஸிக்கர்களுடன் ஒப்பிடுகையில் நாம் எவ்வளவு பண்பாட்டு நுண்ணுணர்வற்றவர்களாக இருக்கிறோம் பாருங்கள். இந்த நாவல் அங்கு எழுதப்பட்டபோது நாம் தியாகராஜ பாகவதருக்கு அடுத்தபடியாக எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். "பொன்னியின் செல்வன்" போன்ற மேலோட்டமான பொழுதுபோக்கு நாவல்கள் தொடராக கல்கியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்தன. பு.பி போன்றவர்கள் அப்போது எழுதி சாப்பிட முடியாமல் சினிமாவில் எழுத முயன்று பசியில் இறந்தார்கள். சி.சு செல்லப்பா கல்லூரி கல்லூரியாக பண்டல் பண்டலாகத் தன் நூல்களைத் தூக்கிக் கொண்டு போய் விற்று கஷ்டப்பட்டார்.

இந்தளவுக்கு மலிவான ரசனை கொண்டவர்கள் எப்படி ஒரு காலத்தில் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் எல்லாம் இயற்றினார்கள் என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது.
1950களில் மெக்ஸிக்கோவும் ஒரு மூன்றாம் உலக நாடுதான். நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? உண்மையில் பணத்திற்கும் வளர்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
19ஆம் நூற்றாண்டு முதலே வாசிப்பு, படிப்பு குறித்த விழிப்புணர்வும் வலுவான பண்பாடும் மெக்ஸிக்கோ மக்களுக்கு இருந்தாலும் 1920களில் நடந்த மெக்ஸிக்கப் புரட்சிதான் திருப்புமுனை. புரட்சிக்குப் பின் வந்த அரசு பொதுக் கல்வியிலும் நூலகங்களிலும் பெரும் முதலீட்டைச் செய்தது. கல்வி ஒரு தேசிய இலக்கானது. அதை அவர்கள் ஒரு புரோஜெக்டாகவே எடுத்து நடத்தினார்கள். José Vasconcelos எனும் கல்வி அமைச்சர் இதில் முக்கியப் பங்காற்றினார். மெக்ஸிக்கோ மட்டுமல்ல க்யூபா, கோஸ்டா ரிக்கா போன்ற நாடுகளிலும் கல்வியிலேயே பெருமை கண்டார்கள். 1940-70கள் வரை அங்கு இதனால் ஒரு மத்திய வர்க்க அதிசயம் எனப்படும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இம்மக்கள் நம்மூர் மத்திய வர்க்கத்தினரைப் போல சினிமா, சம்பாத்தியம், பைக், டிவி எனப் பெருமைப்படாமல் கல்வியையும் வாசிப்பையும் முதன்மைப்படுத்தினார்கள். படிக்கும் பழக்கம் அங்கு தனிமனிதப் பெருமையாகப் பார்க்கப்பட்டது. வாசிப்பு குடிமக்களின் கடமையாகியது. குடிமைச் சமூகத்தின் அடையாளமாகியது. இந்திய அரசோ சுதந்திரத்துக்குப் பின் தொழில்மயமாக்கலிலும் தேசிய உணர்வைப் பரப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியது. கல்வி பின்னுக்குச் சென்றது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியால் வளம் பெற்ற மாநிலங்களில் மட்டுமே (தனியார் முதலீட்டாலும் பொதுக்கல்வியாலும்) கல்வியும் அதை ஒட்டிய வளர்ச்சியும் சாத்தியப்பட்டது என்றாலும் நம் துவக்கமே தவறாக இருந்ததால் தேசப்பற்றும் செல்வச் செழுமையுமே குடிமை அடையாளமாகியது. மேலும், பொதுக்கல்வி, வாசிப்பு, சுயசிந்தனை, பண்பாடு மீது ஒன்றிய அரசு நீண்ட காலமாகவே பாராமுகம் காட்டுவதால் ஏற்றத்தாழ்வான, பண்பற்ற சமூகத் திரள்கள் இங்கு தோன்றின. இந்தியர்கள் மீது உலகெங்கும் அருவருப்பு நிலவுகிறது - எங்கு போனாலும் குடித்து நடனமாடி பான்பராக் துப்பி குப்பையை வீசி எரிச்சலூட்டுகிறார்கள். அவர்களுக்குத் தம்மிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியவில்லை. பணமுள்ள நாட்டுப்புறத்தான்களாக படித்த இந்தியர்கள் உள்ளனர் என்றால் பணமில்லாதவர்களோ சினிமாவினால் தம் வாழ்க்கையின் பிரச்சினைகள் தீரும், வெறுமைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்கள்.
ஒரு நாடு மூன்றாம் உலகத் தேசமாக இருந்தாலும் அது முன்னேற அவசியம் பரவலான கல்வியும் வாசிப்பைக் குறித்த பெருமிதமுமே. இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சி மேலானதாக இருந்ததாலும் பண்பாட்டையும் அறிவையும் பொறுத்தமட்டில் நாம் காட்டான்களாகவே இருக்கிறோம். ஒரு சிறிய நாட்டில் உள்ள ஜனங்களைப் போல உயர்-பண்பாட்டு ஆர்வத்துடன் இவ்வளவு பெரிய நாட்டில் வாழ்வோரால் முடியவில்லை. எப்போதும் பண்பாடு, அடையாளம் எனப் பெருமைப்படும் தமிழர்களோ மட்டமான ஒரு நடிகரை முதல்வராக்கி அவரைப் பார்த்துப் பெருமைப்படுகிறார்கள். அதிலும் இளைஞர்களில் கணிசமானோருக்கு 'சங்கம்' எனும் வார்த்தையே தெரியாது. அவர்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கோ தமிழைத் தவறின்றி படிக்கவே தெரியாது. ஆங்கிலம் அதைவிட மட்டம். ஆங்கில மீடியாவிடம் ஒரே ஐ ஸ்பீக் இங்கிலீஷ், ஐ வாக் இங்கிலீஷ்தான். (வீட்டுக்குள் புகுந்து கட்டையெடுத்து அடிக்க மட்டுமே தெரியும்).
நாம் நிஜத்தில் தமிழ்நாடு அல்ல, சினிமா நாடுதான். இம்மாநிலத்தின் பெயரை அப்படி மாற்றினால் நான் புகார் சொல்ல மாட்டேன்

கருத்துகள்

nithilan இவ்வாறு கூறியுள்ளார்…
Unami

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...