முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுஜாதா பட் கவிதைகள்


குஜராத்தில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நவீன இந்திய கவிதையின் முகமாகத் திகழ்பவர் சுஜாதா பட். பிரியமும், வன்முறையும், இனத்துவேசமும் இவரது நுட்பமான கவிதைகளில் கூர்மையாகவும் அங்கதத்துடனும் எதிர்கொள்ளப் படும் கருக்கள். இவரது மூன்று சிறந்த கவிதைகளை இங்கு தமிழாக்கியுள்ளேன்.

ஷிரோத்கர் தையல் 



ஷிரோத்கர் தையலை கண்டுபிடித்தவரின் 

மகன் நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன் 

என் அப்பாவுடன் பணி புரிந்தார் 

திசு வளர்ப்பு முறை கற்றவாறே 


எதோ பயன்படப் போகிறது என்பது போல் 

இந்த சிறு விஷயத்தை நினைத்துக் கொண்டேன் 

-- தகுந்த காலம் வரும்வரை 

உன்னை என்னுள் பத்திரமாய் வைத்திருக்க -- 

ஷிரோத்கர் தையலை 

என் கருவறை வாய்க்குள் தைக்கப் போகும் 

மருத்துவர்களை எதிர்பார்த்து 

ஆஸ்பத்திரி கட்டிலில் கிடக்கையில் 




என் அம்மாவின் அம்மாவுக்கு 


கற்பனை செய்து பாருங்கள் 

காந்தியடிகளுக்கு அது இருந்திருந்தால் -- ஒருவேளை அந்த தவறான் குரோமோசோம் -- 

சர்க்கரையை ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு செய்ய இயலாமை -- 

இத்தனை உண்ணாவிரதங்களையும் 

ஒருக்காலும் தாங்கியிருக்க மாட்டார் -- 

உன்னைப் போல் 

மௌனமாய் கோமாவுக்குள் சென்றிருப்பார் 



மராத்தியிலிருந்து ஒரு ஞாபகம் 


இந்த ஞாபகம் 

தண்ணீரின் ஓசையிலிருந்து ஆரம்பிக்கிறது 

விட்டுப் போகாத ஞாபகம் இது 

இஞ்ஞாபகம் மராத்தியிலிருந்து வருகிறது 

நள்ளிரவில் 

மூன்று வயது சிறுமியின் தாகத்திலிருந்து 

ஆரம்பிக்கிறது இஞ்ஞாபகம் 


அங்கு ஓடும் நீரின் ஓசை 

- மென்மையாய் - 'ஸ்...' எனும் சீற்றொலி போல் 


அம்மாவருகில் தம்பிப் பாப்பாவின் ஆர்ப்பாட்ட உறக்கம் -- 

தண்ணீர் வேண்டுகிறாள் சிறுமி 


அப்பா அறைக்கு வெளியே செல்கிறார் 

ஆனால் திரும்பவில்லை -- 

கொட்ட விழித்துக் கிடக்கும் 

மூன்று வயது சிறுமியின் பொறுமையின்மை -- 


அப்பாவைத் தேடி 

வாசல் வரை நடந்தவள் 

பின் அங்கேயே நின்று விட்டேன் 

கையில் கிண்ணம் எந்தியவாறு அவர் 

சமையலறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் 

ஆனால் என்னை பொறுமை கொள்ளவும் 

ஸ்தம்பித்துப் போகவும் செய்தது 

எங்கள் நடுவே 

தரையில் கிடந்த பாம்புதான் -- அது ரொம்பவே இடத்தை ஆக்கிரமித்தது -- 

அது முடிவற்றுத் தோன்றியது -- 

எறத்தாழ மரங்களிடையே தெரியும் நிலவொளி போன்ற 

வெள்ளிய பச்சை -- 

அப்பா அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிய போது 

அது ரத்தம் சொரிந்து கொண்டே இருந்தது -- அதன் பிளந்த தோலிலிருந்து 

பெருகி ஓடிய செம்மையை ஒருபோதும் மறக்க முடிந்தததில்லை 


பல வருடங்களுக்குப் பிறகு 

அதைப் பற்றி பேசுகிறோம் 

ஒரே சாட்சிகளான நானும் அப்பாவும் 

சமையலறைக்குள் அது எவ்வாறு பாய்ந்தது என்று விவரிக்கிறார் -- 

அதை விரட்ட வேண்டியிருந்தது வருத்தமளிக்கிறது 

ஆனால் சமையலறைக்குள் அது ஒளிந்து விடவும் கூடாதே -- 

'அதைக் கொல்ல முடிந்தது அதிர்ஷ்டம்தான்', அவர் சொல்கிறார் 

இந்த வருடங்களுக்கு எல்லாம் பிறகு 

முதன்முறையாய் 

அதைப் பற்றி பேசுகிறோம் 

விருப்பமின்றியே 

சாகும்வரை அதை ஒரு குச்சியால் 

நெடுநேரம் ஓங்கி அடிக்க நேர்ந்ததை 

பிறகு முடிவாய் அதன் மேல் 

மண்ணெண்ணெய் ஊற்றினார் -- 

பிறகு தரையை சுத்தம் செய்யும் முன் 

அவர் அதை சேகரித்து ஜாடியில் இடுவதைப் பார்த்தேன் 


காலையில் அப்போதும் அம்மா உறங்குகையில் 

அவர் முகமும் செய்கைகளும் நினைவுள்ளது -- 

மேலும், நிதானத்துடன் ஆனால் அவசரமாய் விரைந்து 

பாம்பைக் கொண்ட ஜாடியைத் தூக்கியவாறு 

அவர் வேலைக்காய் ஆராய்ச்சிக் கூடம் சென்றதும் 








கருத்துகள்

கவிக்கிழவன் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னும் நிறைய எழுதுங்கள் நல்லாருக்கு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.