முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுஜாதா பட் கவிதைகள்


குஜராத்தில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நவீன இந்திய கவிதையின் முகமாகத் திகழ்பவர் சுஜாதா பட். பிரியமும், வன்முறையும், இனத்துவேசமும் இவரது நுட்பமான கவிதைகளில் கூர்மையாகவும் அங்கதத்துடனும் எதிர்கொள்ளப் படும் கருக்கள். இவரது மூன்று சிறந்த கவிதைகளை இங்கு தமிழாக்கியுள்ளேன்.

ஷிரோத்கர் தையல் 



ஷிரோத்கர் தையலை கண்டுபிடித்தவரின் 

மகன் நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன் 

என் அப்பாவுடன் பணி புரிந்தார் 

திசு வளர்ப்பு முறை கற்றவாறே 


எதோ பயன்படப் போகிறது என்பது போல் 

இந்த சிறு விஷயத்தை நினைத்துக் கொண்டேன் 

-- தகுந்த காலம் வரும்வரை 

உன்னை என்னுள் பத்திரமாய் வைத்திருக்க -- 

ஷிரோத்கர் தையலை 

என் கருவறை வாய்க்குள் தைக்கப் போகும் 

மருத்துவர்களை எதிர்பார்த்து 

ஆஸ்பத்திரி கட்டிலில் கிடக்கையில் 




என் அம்மாவின் அம்மாவுக்கு 


கற்பனை செய்து பாருங்கள் 

காந்தியடிகளுக்கு அது இருந்திருந்தால் -- ஒருவேளை அந்த தவறான் குரோமோசோம் -- 

சர்க்கரையை ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு செய்ய இயலாமை -- 

இத்தனை உண்ணாவிரதங்களையும் 

ஒருக்காலும் தாங்கியிருக்க மாட்டார் -- 

உன்னைப் போல் 

மௌனமாய் கோமாவுக்குள் சென்றிருப்பார் 



மராத்தியிலிருந்து ஒரு ஞாபகம் 


இந்த ஞாபகம் 

தண்ணீரின் ஓசையிலிருந்து ஆரம்பிக்கிறது 

விட்டுப் போகாத ஞாபகம் இது 

இஞ்ஞாபகம் மராத்தியிலிருந்து வருகிறது 

நள்ளிரவில் 

மூன்று வயது சிறுமியின் தாகத்திலிருந்து 

ஆரம்பிக்கிறது இஞ்ஞாபகம் 


அங்கு ஓடும் நீரின் ஓசை 

- மென்மையாய் - 'ஸ்...' எனும் சீற்றொலி போல் 


அம்மாவருகில் தம்பிப் பாப்பாவின் ஆர்ப்பாட்ட உறக்கம் -- 

தண்ணீர் வேண்டுகிறாள் சிறுமி 


அப்பா அறைக்கு வெளியே செல்கிறார் 

ஆனால் திரும்பவில்லை -- 

கொட்ட விழித்துக் கிடக்கும் 

மூன்று வயது சிறுமியின் பொறுமையின்மை -- 


அப்பாவைத் தேடி 

வாசல் வரை நடந்தவள் 

பின் அங்கேயே நின்று விட்டேன் 

கையில் கிண்ணம் எந்தியவாறு அவர் 

சமையலறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் 

ஆனால் என்னை பொறுமை கொள்ளவும் 

ஸ்தம்பித்துப் போகவும் செய்தது 

எங்கள் நடுவே 

தரையில் கிடந்த பாம்புதான் -- அது ரொம்பவே இடத்தை ஆக்கிரமித்தது -- 

அது முடிவற்றுத் தோன்றியது -- 

எறத்தாழ மரங்களிடையே தெரியும் நிலவொளி போன்ற 

வெள்ளிய பச்சை -- 

அப்பா அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிய போது 

அது ரத்தம் சொரிந்து கொண்டே இருந்தது -- அதன் பிளந்த தோலிலிருந்து 

பெருகி ஓடிய செம்மையை ஒருபோதும் மறக்க முடிந்தததில்லை 


பல வருடங்களுக்குப் பிறகு 

அதைப் பற்றி பேசுகிறோம் 

ஒரே சாட்சிகளான நானும் அப்பாவும் 

சமையலறைக்குள் அது எவ்வாறு பாய்ந்தது என்று விவரிக்கிறார் -- 

அதை விரட்ட வேண்டியிருந்தது வருத்தமளிக்கிறது 

ஆனால் சமையலறைக்குள் அது ஒளிந்து விடவும் கூடாதே -- 

'அதைக் கொல்ல முடிந்தது அதிர்ஷ்டம்தான்', அவர் சொல்கிறார் 

இந்த வருடங்களுக்கு எல்லாம் பிறகு 

முதன்முறையாய் 

அதைப் பற்றி பேசுகிறோம் 

விருப்பமின்றியே 

சாகும்வரை அதை ஒரு குச்சியால் 

நெடுநேரம் ஓங்கி அடிக்க நேர்ந்ததை 

பிறகு முடிவாய் அதன் மேல் 

மண்ணெண்ணெய் ஊற்றினார் -- 

பிறகு தரையை சுத்தம் செய்யும் முன் 

அவர் அதை சேகரித்து ஜாடியில் இடுவதைப் பார்த்தேன் 


காலையில் அப்போதும் அம்மா உறங்குகையில் 

அவர் முகமும் செய்கைகளும் நினைவுள்ளது -- 

மேலும், நிதானத்துடன் ஆனால் அவசரமாய் விரைந்து 

பாம்பைக் கொண்ட ஜாடியைத் தூக்கியவாறு 

அவர் வேலைக்காய் ஆராய்ச்சிக் கூடம் சென்றதும் 








கருத்துகள்

கவிக்கிழவன் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னும் நிறைய எழுதுங்கள் நல்லாருக்கு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...