Skip to main content

"சச்சின் அவுட் சரிதான்": ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பர் பேட்டி

1999-இல் மெக்ரேத்தின் பவுன்சருக்கு குனிந்து அடிவாங்கிய டெண்டுல்கருக்கு அவுட் வேறு வழங்கி இந்தியர்களின் கரிப்பையும் சாபத்தையும் தாராளமாக பெற்ற, 2009-ல் ஆட்டவீரர்கள் மூன்றாவது நடுவருக்கு முறையிடும் சோதனை முறை செயல்படுத்தப்பட்ட போது சர்வதேச அளவில் கண்டனம் பெற்ற ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பரில் நுண்ணிய நகைச்சுவையும், வக்கணையும் கொண்ட பேட்டி. பேட்டியாளர் cricinfo.com-இன் நாகராஜ் கோல்புடி. தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டும் தமிழாக்கி உள்ளேன்




நாகராஜ்: மட்டையாளரின் ஷாட்களால் என்றாவது வாங்கியது உண்டா?

ஹார்ப்பர்: பெற்றதிலேயே மோசமான அடி மேற்கிந்திய தீவுகளில் சனத் ஜெயசூர்யாவின் ஸ்கொயர் கட். பாப்பிங் கிரீஸ் ரன் அவுட்டுக்கான டீ.வி படப்பிடிப்பு கருவிகள் ஒரு பக்கம் மட்டுமே இருந்ததால் அவற்றுக்கு இடமளிக்க நடுவர்கள் ஆஃப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். அந்த மூர்க்கமான ஷாட்டிலிருந்து விலக எனக்கு எந்த வழியும் இல்லை; நேராக அது என் நடுமார்பில் மோதியது. ஒற்றை ஓட்டம் ஒடின பின்னர் மட்டையாளர்கள் என்னிடம் வந்தனர்; ஜெயசூர்யா என்னிடம் சொன்னதெல்லாம், “உங்களால் எனக்கு 4 ஓட்டங்கள் போச்சு”. நான் சொன்னேன், “உனக்கு ஒரு அதிலிருந்து ஒரு ஓட்டம் கிடைத்ததே”. அடுத்த ஒரு மாசமும் வலித்தது.

நாகராஜ்: ஐ.சி.சியின் வருடத்தின் சிறந்த நடுவர் விருதை சிமன் டௌபல் ஐந்து முறை வென்றுள்ளதை கருதுகையில், அது ஒரு மோசடி விருது என்று நினைக்கிறார்களா?

ஹார்ப்பர்: முதல் பன்னிரெண்டு வரிசையில் கண்டிப்பாக நான் உள்ளேன். எதிர்பார்க்கும் பதில்களை எப்போதும் தருகிறவனல்ல நான் என்பதால் அதை நான் வெல்லும் பட்சத்தில் எனக்கே அது ஏறத்தாழ ஏமாற்றமாக இருக்கும். வாக்களிப்பவர்களிடம் கடினமான கேள்விகளை கெட்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சில நடுவர்கள் என் அளவிற்கு விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், டௌஃபல் சிறந்த நடுவரே, முற்றுப் புள்ளி.

நாகராஜ்: நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டது போல், டௌஃபல் இப்போதும் தன் முடியை கண்ணாடியில் பார்த்து மகிழ்வுறுகிறாரா?

ஹார்ப்பர்: அவருக்கு உச்சியில் கொஞ்சம் முடி உண்டு; ஹார்ஷா போக்ளே மோஸ்தரில் சிகிச்சை எடுத்துக் கொள்ள நான் அவரிடம் பரிந்துரைத்தேன். இந்த கட்டத்தில் அவர் அதை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்.

நாகராஜ்: நீங்களும் அச்சிகிச்சையை செய்யலாமே?

ஹார்ப்பர்: அதைப் பற்றி கவலைப்படும் அளவுக்கு எனக்கு வீண்-பகட்டு இல்லை – நீங்கள் உச்ச்ந்தலையை பார்த்தீர்கள் என்றால் அங்கு எல்லாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. என் மகள் மற்றும் மகனிடம் எனக்கு பெரிய நெற்றி உள்ளதாக சொல்லி உள்ளேன்.

நாகராஜ்: நீங்கள் மறக்க விரும்பும் ஒரு சந்தர்பத்தை சொல்லுங்கள்



ஹார்ப்பர்: 1999-இல் அடிலைடில் சச்சின் (கிளன்) மக்ராத்தின் பவுசருக்கு குனிந்த சந்தர்பத்தை தான் உலக மக்கள் மறக்க விரும்புகிறேன். என் மடிக்கணினியில் அந்த படத்துணுக்கை வைத்துள்ளேன்; இப்போதும் கூட பார்த்தால் அது அவுட் தான்! நான் ஆட்ட அரங்கை விட்டு வெளியேறிய போது பல நண்பர்களும் தங்கள் ஏமாற்றத்தை தெரிவித்தது தான் எனக்கு பிடிக்கவில்லை. “ஹேய் டேரில் நாங்கள் பார்க்க வந்தது சச்சின் மட்டையாடுவதை, நீங்கள் நடுவர் செய்வதை அல்ல”. அதற்கு நான் சொன்னேன், “மன்னிச்சுக்குங்க, நான் என் கடமையை தான் செய்தேன்”. சுனில் கவாஸ்கர் தான் அப்போது வர்ணனையாளர்; அவரும் ஏற்றுக் கொண்டார், குச்சிகள் ஆறு அங்குலம் அதிக உயரமிருப்பின் அது அவுட் ஆகவிருக்கலாம் என்றார். சச்சின் தான் அப்போது அணித்தலைவர்; அவர் தன் அறிக்கையில் அதை குறிப்பிடவில்லை – சச்சின் எப்போதும் நியாயமானவர்; அவர் இப்போதும் ஒரு அட்டகாசமான விளையாட்டு வீரர்.

நாகராஜ்: ஒரு விளையாட்டு வீரரிடம் இருந்து நீங்கள் பெற்ற மிகச்சிறந்த பாராட்டு எது?

ஹார்ப்பர்: ஆடம் கில்கிறிஸ்ட் தனது தன்வரலாற்றின் முதல் அத்தியாயத்தில் நான் அவரது ஆட்ட முறை பற்றி சொன்ன கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். நான் என் அவரது கடைசி டெஸ்டில் நின்று கொண்டிருந்தேன்; நான் சொன்னேன், “அடுத்து உன் பெற்றோர்களை பார்த்தால், அவர்களுக்கு சரியாக அமைந்து விட்டது, அவர்கள் வேறெதையும் வித்தியாசமாக செய்ய வேண்டியிருக்க இல்லை என்று சொல்” என்றேன். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர் ஒரு மிகச்சிறந்த நபராக உருவாகி உள்ளார். அதைத் தன் நூலில் பயன்படுத்தினார்.




மற்றொரு சந்தர்பத்தில், ஆஸ்திரேலியாவில் ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் நான் கால் பக்கமாய் ஒரு வைடு பந்தை அறிவித்தேன்; கில்லி அப்பந்து பேடுகளில் பட்டு திரும்பியதாக கருதியதால், சற்று நேரம் அத்தீர்மானத்தை எதிர்த்தார். பிறகு ரீப்ளெ பார்த்து விட்டு, ஓவர் முடிவில் என்னை கடக்கும் போது சொன்னார், “அதற்காக மன்னியுங்கள்; இதனால் தான் நீங்கள் உலகத்தரமான நடுவராகவும் நான் விளையாட்டு வீரனாகவும் இருக்கிறோம் என்று யூகிக்கிறேன்” .

நாகராஜ்: ஊடகங்கள் உங்களிடம் கேட்க அனுமதிக்கக் கூடாத ஒரு கேள்வி?

ஹார்ப்பர்: "நீங்கள் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”

Comments

Ashok D said…
நல்லாயிருந்ததுங்க...
ஹாப்பரின் வேறு பக்கம் அறிந்துகொண்டேன். நகைசுவைமிக்கவராகவும் இருக்கிறார்.

மொழியாக்கத்திற்கும் பகிர்வுக்கும் நன்றி

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...