முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"சச்சின் அவுட் சரிதான்": ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பர் பேட்டி

1999-இல் மெக்ரேத்தின் பவுன்சருக்கு குனிந்து அடிவாங்கிய டெண்டுல்கருக்கு அவுட் வேறு வழங்கி இந்தியர்களின் கரிப்பையும் சாபத்தையும் தாராளமாக பெற்ற, 2009-ல் ஆட்டவீரர்கள் மூன்றாவது நடுவருக்கு முறையிடும் சோதனை முறை செயல்படுத்தப்பட்ட போது சர்வதேச அளவில் கண்டனம் பெற்ற ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பரில் நுண்ணிய நகைச்சுவையும், வக்கணையும் கொண்ட பேட்டி. பேட்டியாளர் cricinfo.com-இன் நாகராஜ் கோல்புடி. தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டும் தமிழாக்கி உள்ளேன்




நாகராஜ்: மட்டையாளரின் ஷாட்களால் என்றாவது வாங்கியது உண்டா?

ஹார்ப்பர்: பெற்றதிலேயே மோசமான அடி மேற்கிந்திய தீவுகளில் சனத் ஜெயசூர்யாவின் ஸ்கொயர் கட். பாப்பிங் கிரீஸ் ரன் அவுட்டுக்கான டீ.வி படப்பிடிப்பு கருவிகள் ஒரு பக்கம் மட்டுமே இருந்ததால் அவற்றுக்கு இடமளிக்க நடுவர்கள் ஆஃப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். அந்த மூர்க்கமான ஷாட்டிலிருந்து விலக எனக்கு எந்த வழியும் இல்லை; நேராக அது என் நடுமார்பில் மோதியது. ஒற்றை ஓட்டம் ஒடின பின்னர் மட்டையாளர்கள் என்னிடம் வந்தனர்; ஜெயசூர்யா என்னிடம் சொன்னதெல்லாம், “உங்களால் எனக்கு 4 ஓட்டங்கள் போச்சு”. நான் சொன்னேன், “உனக்கு ஒரு அதிலிருந்து ஒரு ஓட்டம் கிடைத்ததே”. அடுத்த ஒரு மாசமும் வலித்தது.

நாகராஜ்: ஐ.சி.சியின் வருடத்தின் சிறந்த நடுவர் விருதை சிமன் டௌபல் ஐந்து முறை வென்றுள்ளதை கருதுகையில், அது ஒரு மோசடி விருது என்று நினைக்கிறார்களா?

ஹார்ப்பர்: முதல் பன்னிரெண்டு வரிசையில் கண்டிப்பாக நான் உள்ளேன். எதிர்பார்க்கும் பதில்களை எப்போதும் தருகிறவனல்ல நான் என்பதால் அதை நான் வெல்லும் பட்சத்தில் எனக்கே அது ஏறத்தாழ ஏமாற்றமாக இருக்கும். வாக்களிப்பவர்களிடம் கடினமான கேள்விகளை கெட்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சில நடுவர்கள் என் அளவிற்கு விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், டௌஃபல் சிறந்த நடுவரே, முற்றுப் புள்ளி.

நாகராஜ்: நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டது போல், டௌஃபல் இப்போதும் தன் முடியை கண்ணாடியில் பார்த்து மகிழ்வுறுகிறாரா?

ஹார்ப்பர்: அவருக்கு உச்சியில் கொஞ்சம் முடி உண்டு; ஹார்ஷா போக்ளே மோஸ்தரில் சிகிச்சை எடுத்துக் கொள்ள நான் அவரிடம் பரிந்துரைத்தேன். இந்த கட்டத்தில் அவர் அதை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்.

நாகராஜ்: நீங்களும் அச்சிகிச்சையை செய்யலாமே?

ஹார்ப்பர்: அதைப் பற்றி கவலைப்படும் அளவுக்கு எனக்கு வீண்-பகட்டு இல்லை – நீங்கள் உச்ச்ந்தலையை பார்த்தீர்கள் என்றால் அங்கு எல்லாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. என் மகள் மற்றும் மகனிடம் எனக்கு பெரிய நெற்றி உள்ளதாக சொல்லி உள்ளேன்.

நாகராஜ்: நீங்கள் மறக்க விரும்பும் ஒரு சந்தர்பத்தை சொல்லுங்கள்



ஹார்ப்பர்: 1999-இல் அடிலைடில் சச்சின் (கிளன்) மக்ராத்தின் பவுசருக்கு குனிந்த சந்தர்பத்தை தான் உலக மக்கள் மறக்க விரும்புகிறேன். என் மடிக்கணினியில் அந்த படத்துணுக்கை வைத்துள்ளேன்; இப்போதும் கூட பார்த்தால் அது அவுட் தான்! நான் ஆட்ட அரங்கை விட்டு வெளியேறிய போது பல நண்பர்களும் தங்கள் ஏமாற்றத்தை தெரிவித்தது தான் எனக்கு பிடிக்கவில்லை. “ஹேய் டேரில் நாங்கள் பார்க்க வந்தது சச்சின் மட்டையாடுவதை, நீங்கள் நடுவர் செய்வதை அல்ல”. அதற்கு நான் சொன்னேன், “மன்னிச்சுக்குங்க, நான் என் கடமையை தான் செய்தேன்”. சுனில் கவாஸ்கர் தான் அப்போது வர்ணனையாளர்; அவரும் ஏற்றுக் கொண்டார், குச்சிகள் ஆறு அங்குலம் அதிக உயரமிருப்பின் அது அவுட் ஆகவிருக்கலாம் என்றார். சச்சின் தான் அப்போது அணித்தலைவர்; அவர் தன் அறிக்கையில் அதை குறிப்பிடவில்லை – சச்சின் எப்போதும் நியாயமானவர்; அவர் இப்போதும் ஒரு அட்டகாசமான விளையாட்டு வீரர்.

நாகராஜ்: ஒரு விளையாட்டு வீரரிடம் இருந்து நீங்கள் பெற்ற மிகச்சிறந்த பாராட்டு எது?

ஹார்ப்பர்: ஆடம் கில்கிறிஸ்ட் தனது தன்வரலாற்றின் முதல் அத்தியாயத்தில் நான் அவரது ஆட்ட முறை பற்றி சொன்ன கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். நான் என் அவரது கடைசி டெஸ்டில் நின்று கொண்டிருந்தேன்; நான் சொன்னேன், “அடுத்து உன் பெற்றோர்களை பார்த்தால், அவர்களுக்கு சரியாக அமைந்து விட்டது, அவர்கள் வேறெதையும் வித்தியாசமாக செய்ய வேண்டியிருக்க இல்லை என்று சொல்” என்றேன். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர் ஒரு மிகச்சிறந்த நபராக உருவாகி உள்ளார். அதைத் தன் நூலில் பயன்படுத்தினார்.




மற்றொரு சந்தர்பத்தில், ஆஸ்திரேலியாவில் ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் நான் கால் பக்கமாய் ஒரு வைடு பந்தை அறிவித்தேன்; கில்லி அப்பந்து பேடுகளில் பட்டு திரும்பியதாக கருதியதால், சற்று நேரம் அத்தீர்மானத்தை எதிர்த்தார். பிறகு ரீப்ளெ பார்த்து விட்டு, ஓவர் முடிவில் என்னை கடக்கும் போது சொன்னார், “அதற்காக மன்னியுங்கள்; இதனால் தான் நீங்கள் உலகத்தரமான நடுவராகவும் நான் விளையாட்டு வீரனாகவும் இருக்கிறோம் என்று யூகிக்கிறேன்” .

நாகராஜ்: ஊடகங்கள் உங்களிடம் கேட்க அனுமதிக்கக் கூடாத ஒரு கேள்வி?

ஹார்ப்பர்: "நீங்கள் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”

கருத்துகள்

Ashok D இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாயிருந்ததுங்க...
ஹாப்பரின் வேறு பக்கம் அறிந்துகொண்டேன். நகைசுவைமிக்கவராகவும் இருக்கிறார்.

மொழியாக்கத்திற்கும் பகிர்வுக்கும் நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.