முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3d-இன் இரண்டு பக்கங்கள்: அவதாரும் கண்வலியும்



3d எனப்படும் முப்பரிமாணப் படங்களுக்கு ஹாலிவுட்டில் தனித்த வரலாறு உண்டென்றாலும் நம் கற்பனையை பாதித்தவை மை டியர் குட்டிச்சாத்தானும் அவதாரும். மேற்கில் 3d டி.வி தொடர்கள் பல ஒளிபரப்பப்பட்டுள்ளன. அத்தகைய தொடர்களின் போது டி.வி திரையின் ஓரமாய் குறிப்பு அளிக்கப்படும். உடனே பிரத்தியேக கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இப்போது 24 மணிநேர முப்பரிமாண டி.வி சேனலை ஸ்கை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கண்ணாடி தேவைப்படாத 3d தொழில் நுட்பமும் அண்மையில் உள்ளது. பொதுவாக முப்பரிமாண படைப்புகளுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பு பானசோனிக், சோனி, பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 3d தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்த பெரும் உற்சாகம் அளித்துள்ளது. இவ்வருடம் வெளிவரப் போகும் முப்பரிமாண தொலைக்காட்சி இந்தியர்களுக்கு வெறும் செய்தி சுவாரஸ்யமாக மட்டுமே இருக்கும். அதிக விலை, 3d புளூரே டிஸ்குகள் இந்திய சந்தையை எளிதில் அடையாமை, 3d தொழில்நுட்பத்தை இந்திய காட்சி ஊடகங்கள் வரிப்பதற்கான சாவகாசம் மற்றும் வணிக சாத்தியம் ஆகியன காரணங்கள். தோற்ற அளவிலேனும் முப்பரிமாண கணினி மற்றும் கைப்பேசிகள் நம் எதிர்கால தொடர்புலகை அணுக்கமாக்க போகின்றன் என்பதில் சந்தேகமில்லை. எளிதில் நமது அன்றாட உலகில் 2d மெல்ல மெல்ல மறைந்து 3d ஆக்கிரமிக்கும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு அறிவியலை முப்பரிமாண திரைகளில் கற்பித்தால் அபாரமான ஈடுபாட்டை உருவாக்கலாம். அதே போன்று 3g கைப்பேசி காட்சி அரட்டையில் விடப்படும் 3d முத்தங்களோ அறைகளோ நம் பிரக்ஞையில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுத்தும்? நம் மொழிப்படிமங்கள் எப்படி மாறும்? இப்படி கற்பனை செய்து கொண்டே போவதற்கு ஒரு வேகத்தடை தேவையுள்ளது. இப்போதைக்கு முப்பரிமாண காட்சிகளின் பக்கவிளைவுகள்.

உலகம் முழுக்க அவதார் திரைப்படம் மனதை பிரமிக்க வைத்த அளவு உடலையும் பாதித்துள்ளது. இப்படத்தை முப்பரிமாணத்தில் பார்த்தவர்களில் பலருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி உனர்வு, பார்வை மங்கல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டுள்ளன. ஏன்?

3d என்பது ஒரு செயற்கையான காட்சி அனுபவம். விளக்குகிறேன். இயல்பு வாழ்வில் மேலிருந்து கீழாக அல்லது தூரத்திலிருந்து பக்கத்திற்கு வரும் பொருளை தெளிவாக காண நம் கண்ணின் லென்ஸ் தன்னை தகவமைக்கும். மேலும் விளங்க உங்கள் சுட்டு விரலை தலைக்கு மேலிருந்து மூக்கு நோக்கி இறக்குங்கள். கண்கள் சுழல்கின்றன. இப்படி சுழன்று உள்நகரும் போது நம் லென்ஸ் உருமாறுகிறது. ஆனால் முப்பரிமாணக் காட்சியின் போது ஒரு பக்கம் லென்ஸ் தகவமைந்தாலும் மற்றொரு பக்கம் நிலையான திரையிலும் கண்ணை நிலைக்க வைக்க வேண்டியுள்ளது. அன்றாட வாழ்க்கையிலும் இருவேறு திசையிலுள்ள பொருட்களில் பார்வையை நிலைக்க வைப்பது கண்ணுக்கு களைப்பானது என்பதை கவனியுங்கள். 3dயின் போது இவ்வாறு செயற்கையான விழியசைவுகள் தேவைப்படுவதால் கண்கள் களைப்பாகி வெவ்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

எதிர்கால 3d யுகத்தில் அறிவியலுக்கு இது ஒரு சவால் தான். ஒவ்வொரு சவாலை வெல்லவும் ஒரு மார்க்கம் நிச்சயம் உண்டு. பார்மசுயூட்டிக்கல் நிறுவனங்களின் தவறை தொழில்நுட்ப நிறுவனங்கள் தவிர்க்க பொறுமை காக்க வேண்டும். கத்திரிக்காவில் இருந்து முப்பரிமாணம் வரை புதிய தொழில்நுட்பங்கள் மக்களிடம் செல்லும் முன் அரசாங்கம் கவனமாக மற்றும் கராறாக பரிசீலிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...