Skip to main content

தேர்வு குளறுபடிக்கு யார் பலிகடா?


 கிரிக்கெட்டில் ஒரு வீரரை தேர்வு செய்ய அடிப்படை என்ன?
திறமை. இத்திறமையை உள்ளுணர்வு சார்ந்து தேர்வாளர் கண்டறியலாம். அல்லது ஆட்ட ரிக்கார்டை வைத்து முடிவு செய்யலாம். மற்றொன்று ஆட்டவகைமைக்கான பொருத்தம்.
T20க்கு பொருத்தமானவர் பலசமயம் ஒருநாள் அட்டத்துக்கு கூட தோதாக இருப்பதில்லை. மனநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய காரணங்களுக்கு ஓஜ்ஹா, யூசுப் பதான் என உதாரணங்கள் சொல்லலாம். திறமைக்கு இன்றைய ஆட்டத்தில் (இந்தியா-நியுசிலாந்து ஒருநாள் ஆட்டம்) ஆடின சாஹாவை சொல்லலாம். சாஹாவின் மட்டையாட்டம் சற்று மட்டம் என்பது நமக்குத் தெரியும். மன உறுதி கொண்ட ஒரு சராசரி மட்டையாளர் அவர். அவரது கீப்பிங்கும் ஒன்றும் அபாரம் அல்ல. அவர் விசயத்தில் தேர்வாளர்கள் சிறு தவறு செய்கிறார்கள். சீனியர்கள் நடுக்கமான ஒரு மட்டையாட்ட வரிசையில் அவரை தேர்ந்ததால் அணியின் சமநிலை சற்று குலைந்து விட்டது. ஐந்து விக்கெட் இழந்தால் இந்தியாவின் மென்மையான அடிவயிறு எளிதாக இனி வெளிப்பட்டு விடும். கடைசி பத்து ஓவர்களில் பந்து வீச்சாளரில் ஒருவர் இனி பொறுப்பெடுத்து ஆட வேண்டி இருக்கும். சாஹாவால் மட்டையாட முடியாதா?
முடியும். ஒரு தீயணைப்பு வீரராக. 35-40 ஓவர்களுக்கு 5க்க்கு மேற்பட்ட விக்கேட்டுகள் இழந்து தடுமாறும் நிலையில் சாஹாவால் பொறுமையாக போராடி இன்னிங்சை இறுக்கி கட்டி முடிச்சிட முடியும். சுருக்கமாக, சாஹா நிச்சயம் ஒரு வளமையான முதலீடு அல்ல. சாஹா எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்? அவரது கீப்பிங் திறமைக்காக என்கிறார் அணித்தலைவர் காம்பிர். ஆனால் ஒருநாள் ஆட்டத்துக்கு கீப்பிங்கை விட அதிரடி மட்டையாட்டமே அதி முக்கியம். ஒரு நல்ல கீப்பரை விட அதிக வசூல் ஆகக் கூடியவர் ஒரு பாதுக்காப்பான கீப்பரும் ஆனால் மிக நல்ல மட்டையாளறுமான ஒரு ஆல்ரவுண்டரே. தேர்வாளர்கள் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் அல்லது கர்நாடகாவின் கவுதம் போன்றோரில் முத்லீடு செய்ய வேண்டும். பார்த்திவுக்கு போதுமான ஒருநாள் வாய்ப்புகள் தரப்படவில்லை. அவரை விட நல்ல கீப்பரான தினேஷ் துவக்க வரிசையில் வீணடிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் (276 மட்டுமே அடித்துள்ள நிலையில்) இந்தியா தோல்வியுறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெற்றி தோல்வி குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள ஒன்றும் இல்லை. இன்று தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்திற்கு யார் அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று யோசிக்கலாம்.
நிஜத்தில் இன்றைய முக்கிய மட்டையாட்ட திணறலுக்கு காரணம் சமநிலையின்மை. அதற்கு காரணம் சாஹாவின் தேர்வு. ஆனால் சமநிலையை மீட்க சாஹாவை விலக்க முடியாது. அணியில் அவர் மட்டுமே கீப்பர். இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் கூட தோற்கிற நிலையில் அஷ்வின் விலக்கப்படுவார். அல்லது ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அஷ்வினின் இடத்தில் சவுரப் திவாரி அல்லது சுழலர் ஜடேஜா அடுத்த ஆட்டத்தில் கொண்டு வரப்படுவார். இன்றைய ஆட்டத்தில் நமது பந்து வீச்சு நன்றாக உள்ள பட்சத்தில் (பதான் நன்றாக வீசும் பட்சத்தில்) மட்டையாளர் உள்ளே வர வாய்ப்பு அதிகம் இருக்கும். நியுசீலாந்து சுழலை நன்றாக ஆடி இலக்கை எளிதாக அடைந்தால் ஜடேஜா வருவார். இதனை நான் சொல்லக் காரணம் தேர்வாளர்கள் செய்யும் ஒரு அடிப்படை தவறால் நடக்கும் அநியாயத்தை சுட்டத் தான். ரஞ்சி தொடர்களில் இரண்டு பருவங்களிலுமாக நன்றாக ஆடி, இப்போது ஹர்பஜனும் இல்லாத பட்சத்தில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இத்தொடரில் தொடர்ச்சியாக ஒரு ஐந்து ஆட்டங்கள் ஏனும் ஆட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். தேர்வாளர்கள் மட்டையாட்ட தன்னம்பிக்கை உள்ள ஒரு நபரை கொண்டு வந்திருந்தால் இது எளிதாகி இருக்கும். அறுவை சிகிச்சையின் போது கத்தியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விடுவது போன்ற நிலைமை இது. அவசரமாக ஒரு பலிகடா தேவை!

Comments

Unknown said…
நல்ல அறிவு மதி பதிவு
ARV Loshan said…
அருமை..
நல்ல பார்வை. அழகான வார்த்தைப் பிரயோகங்கள்.

LOSHAN
www.arvloshan.com
Madumitha said…
அறுவை சிகிச்சையின் போது கத்தியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விடுவது போன்ற நிலைமை இது.

இப்படித்தானே ஒவ்வொரு
முறையும் நடக்கிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...