Skip to main content

தேர்வு குளறுபடிக்கு யார் பலிகடா?


 கிரிக்கெட்டில் ஒரு வீரரை தேர்வு செய்ய அடிப்படை என்ன?
திறமை. இத்திறமையை உள்ளுணர்வு சார்ந்து தேர்வாளர் கண்டறியலாம். அல்லது ஆட்ட ரிக்கார்டை வைத்து முடிவு செய்யலாம். மற்றொன்று ஆட்டவகைமைக்கான பொருத்தம்.
T20க்கு பொருத்தமானவர் பலசமயம் ஒருநாள் அட்டத்துக்கு கூட தோதாக இருப்பதில்லை. மனநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய காரணங்களுக்கு ஓஜ்ஹா, யூசுப் பதான் என உதாரணங்கள் சொல்லலாம். திறமைக்கு இன்றைய ஆட்டத்தில் (இந்தியா-நியுசிலாந்து ஒருநாள் ஆட்டம்) ஆடின சாஹாவை சொல்லலாம். சாஹாவின் மட்டையாட்டம் சற்று மட்டம் என்பது நமக்குத் தெரியும். மன உறுதி கொண்ட ஒரு சராசரி மட்டையாளர் அவர். அவரது கீப்பிங்கும் ஒன்றும் அபாரம் அல்ல. அவர் விசயத்தில் தேர்வாளர்கள் சிறு தவறு செய்கிறார்கள். சீனியர்கள் நடுக்கமான ஒரு மட்டையாட்ட வரிசையில் அவரை தேர்ந்ததால் அணியின் சமநிலை சற்று குலைந்து விட்டது. ஐந்து விக்கெட் இழந்தால் இந்தியாவின் மென்மையான அடிவயிறு எளிதாக இனி வெளிப்பட்டு விடும். கடைசி பத்து ஓவர்களில் பந்து வீச்சாளரில் ஒருவர் இனி பொறுப்பெடுத்து ஆட வேண்டி இருக்கும். சாஹாவால் மட்டையாட முடியாதா?
முடியும். ஒரு தீயணைப்பு வீரராக. 35-40 ஓவர்களுக்கு 5க்க்கு மேற்பட்ட விக்கேட்டுகள் இழந்து தடுமாறும் நிலையில் சாஹாவால் பொறுமையாக போராடி இன்னிங்சை இறுக்கி கட்டி முடிச்சிட முடியும். சுருக்கமாக, சாஹா நிச்சயம் ஒரு வளமையான முதலீடு அல்ல. சாஹா எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்? அவரது கீப்பிங் திறமைக்காக என்கிறார் அணித்தலைவர் காம்பிர். ஆனால் ஒருநாள் ஆட்டத்துக்கு கீப்பிங்கை விட அதிரடி மட்டையாட்டமே அதி முக்கியம். ஒரு நல்ல கீப்பரை விட அதிக வசூல் ஆகக் கூடியவர் ஒரு பாதுக்காப்பான கீப்பரும் ஆனால் மிக நல்ல மட்டையாளறுமான ஒரு ஆல்ரவுண்டரே. தேர்வாளர்கள் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் அல்லது கர்நாடகாவின் கவுதம் போன்றோரில் முத்லீடு செய்ய வேண்டும். பார்த்திவுக்கு போதுமான ஒருநாள் வாய்ப்புகள் தரப்படவில்லை. அவரை விட நல்ல கீப்பரான தினேஷ் துவக்க வரிசையில் வீணடிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் (276 மட்டுமே அடித்துள்ள நிலையில்) இந்தியா தோல்வியுறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெற்றி தோல்வி குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள ஒன்றும் இல்லை. இன்று தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்திற்கு யார் அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று யோசிக்கலாம்.
நிஜத்தில் இன்றைய முக்கிய மட்டையாட்ட திணறலுக்கு காரணம் சமநிலையின்மை. அதற்கு காரணம் சாஹாவின் தேர்வு. ஆனால் சமநிலையை மீட்க சாஹாவை விலக்க முடியாது. அணியில் அவர் மட்டுமே கீப்பர். இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் கூட தோற்கிற நிலையில் அஷ்வின் விலக்கப்படுவார். அல்லது ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அஷ்வினின் இடத்தில் சவுரப் திவாரி அல்லது சுழலர் ஜடேஜா அடுத்த ஆட்டத்தில் கொண்டு வரப்படுவார். இன்றைய ஆட்டத்தில் நமது பந்து வீச்சு நன்றாக உள்ள பட்சத்தில் (பதான் நன்றாக வீசும் பட்சத்தில்) மட்டையாளர் உள்ளே வர வாய்ப்பு அதிகம் இருக்கும். நியுசீலாந்து சுழலை நன்றாக ஆடி இலக்கை எளிதாக அடைந்தால் ஜடேஜா வருவார். இதனை நான் சொல்லக் காரணம் தேர்வாளர்கள் செய்யும் ஒரு அடிப்படை தவறால் நடக்கும் அநியாயத்தை சுட்டத் தான். ரஞ்சி தொடர்களில் இரண்டு பருவங்களிலுமாக நன்றாக ஆடி, இப்போது ஹர்பஜனும் இல்லாத பட்சத்தில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இத்தொடரில் தொடர்ச்சியாக ஒரு ஐந்து ஆட்டங்கள் ஏனும் ஆட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். தேர்வாளர்கள் மட்டையாட்ட தன்னம்பிக்கை உள்ள ஒரு நபரை கொண்டு வந்திருந்தால் இது எளிதாகி இருக்கும். அறுவை சிகிச்சையின் போது கத்தியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விடுவது போன்ற நிலைமை இது. அவசரமாக ஒரு பலிகடா தேவை!

Comments

Unknown said…
நல்ல அறிவு மதி பதிவு
ARV Loshan said…
அருமை..
நல்ல பார்வை. அழகான வார்த்தைப் பிரயோகங்கள்.

LOSHAN
www.arvloshan.com
Madumitha said…
அறுவை சிகிச்சையின் போது கத்தியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விடுவது போன்ற நிலைமை இது.

இப்படித்தானே ஒவ்வொரு
முறையும் நடக்கிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...