முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணத்தை மெல்ல பற்றி




காலை வெயிலுக்கு பின்னரும்
தங்கிடும் கொசுக்கள்
எண்ணிக்கையில் குறைவானவை
உருவத்தில் பெரியவை
போதையில் சலம்பும் நள்ளிரவு குடிகாரர்களை போல்
அவை உடலில் அமர்ந்திருக்க
காற்றில் மெல்ல நடுங்குகின்றன
அவை கடிப்பதே இல்லை
அல்லது தெரியாதபடி மிருதுவாக கடிக்கும்
பரிணாமத்துக்கும் அழிவுக்கும்
நடுவிலான
இக்கொசுக்கள்
அடிக்கப் போகும் நம் கையின்
நிழலை
காண்பதில்லை அல்லது அலட்சியப்படுத்துகின்றன
நீங்கள் வேகமாகவோ மெல்லவோ அசைந்தபடியோ
அடிக்கலாம்
திட்டமிடலும் சூழ்ச்சியும் வஞ்சகமும்
அவை முன் தோற்கின்றன
அடித்த உடன்
அவை ரத்தம் சிந்துவதில்லை
கொசுவின் ரத்தம் எவர் ரத்தம்?
ரத்தம் தெறிக்கும் போது
நாம் இதை கேட்பதில்லை
நம்மிடம் இருந்து
மிக காருண்யமான ஒரு அடியையே
அவை வேண்டுகின்றன
அதனால்
ஒரு செல்லப்பிராணியை போல்
நாம் அதை அன்பாக தட்டுகிறோம்
அடிபட்ட பின்
அவை சிதைவது இல்லை
உருண்டோடி பக்கத்தில்
எங்காவது விழுந்து
காணாமல் போகின்றன
சிறிது நேரம் தேடி விட்டு ஓய்கிறோம்
வற்புறுத்தாமல் வலியுறுத்தாமல் எதையும்
உறுதி செய்யாமல் உயிர் பிரியும் அவை
ஒரு வேளை நம்
முழங்கையில் இருந்த போதே
இறந்து விட்டிருந்தனவா
என்று நினைக்கும் போது
நமக்கு லஜ்ஜை ஏற்படுகிறது

காலை வெளிச்சத்தை அருந்தியபடி இருக்கும்
கொசுக்கள்
உறுதியின்மையால்
நம்மை வியப்பூட்டுகின்றன
மரணத்தின் விரலை
அவை
மிருதுவாக பற்றி இருக்கின்றன
எதையும் எதிர்பார்த்து இருக்கும் போது
எதுவும் நிகழ்வதில்லை
என் நாளை ஆரம்பிக்கும் பரபரப்பு
தொற்றும் முன்
இதோ அடுத்த கொசு
கட்டை விரலில் அமர்ந்து
மெல்ல தியானிக்கிறது

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக வந்து இருக்கிறது.
ஆனந்தி.. இவ்வாறு கூறியுள்ளார்…
அபி..நீங்க நல்லா குணமாகிட்டிங்க தானே இப்போ?? உடம்பை நல்லா பார்த்துக்கோங்க..
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சித்ரா
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
குணமாகி விட்டேன் ஆனந்தி. பழைய உடல் நலத்தை சிறுக சிறுக மீட்டு வருகிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...