முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்ன தலைவலியில் இயங்கும் உலகம்



இன்று முழுக்க
ஒரு சின்ன தலைவலியுடன்
வேலைகள் செய்வதற்கு பழகுகிறேன்

எரிச்சலானவை சுவாரஸ்யமாவதும்
வழக்கமான தருணங்களில்
கோபமே வராததையும்
கவனிக்கிறேன்

சின்ன தலைவலியுடன் இருக்கும் போது
வழக்கத்துக்கு மேலாக
எதுவுமே நிகழ்வதில்லை
ஆனாலும் எனது
செயல்களுக்கு
சிறப்பாக ஒரு தகுதி கிடைத்தும் விடுகிறது

ஒவ்வொன்றையும்
கூர்மையாக கவனித்து
கச்சிதமாக துரிதமாக தயக்கமின்றி
செய்தவதற்காக
அப்போது நீங்கள் யாருமே
பாராட்டும் பாத்திரத்தில்
இருக்க வேண்டியதில்லை
எனக்காக சதா புன்னகைத்து கொள்கிறேன்

சின்ன தலைவலிக்கு
மருந்து உண்பது
ஒத்திசைவற்ற ஒரு பொய்யை
சொல்வது போன்றது
சின்ன தலைவலி
தரும் தன்னம்பிக்கையை
மருந்து ஒருபோதும் தராது

தொடர்ந்து வழங்கப்படும் தண்டனைகளை
எதிர்ப்பது
சின்ன தலைவலியின் போது
லாவகமாகிறது
தண்டனைகள் மயக்க ஊசியை போன்றவை என்றால்
சின்ன தலைவலி
நம்மை உறங்க விடுவதே இல்லை
தண்டிப்பவரின் மனதுக்கு
மிக அருகாமையில் இருப்பதால்
விழிப்பாக இருப்பது கூட
அவசியமற்றதாகிறது

போதையை விடவும்
கூர்மையை விடவும்
வாதசாமர்த்தியத்தை விடவும்
அன்பற்ற இறுக்கத்தை விடவும்
சின்ன தலைவலி
பாதுகாப்பானது
அதிகாரமிக்கவரின் குற்றங்களை போல்
பரிசுத்தமானது

சின்ன தலைவலியுடன்
தூங்க முயல்வதை விட
அல்லது விழித்து வேலை செய்வதை விட
பாசாங்கு
வேறேதும் இருக்க முடியாது
அப்போது நமக்கு
நண்பர்களோ
பகைவர்களோ இல்லை
அனைவரையும்
மௌனம் காக்க வைப்பது
மெல்ல பதற்றம் கொள்ள வைப்பது
முள்ளை விடுவிப்பது போல் அன்பை விடுவிப்பது
கத்தி முனைவில் நிறுத்தி வைப்பது
இயல்பான ஒன்றாகிறது

வலியும் இன்பமும் துய்ப்பதற்கான
காரியங்கள்
என்று நம்புகிறோம்
ஒன்றை மறப்பதும்
மற்றதை நீட்டிப்பதும்
இவ்வளவு மெத்தனமாய் நகரும் வாழ்வுக்கு
செய்யும் அநீதி

ஒரு சின்ன தலைவலி
மிகப் பெரிய வலியாகவோ
மிக சிறந்த இன்பமாகவோ
ஆகும் போது தான்
‘நாம் மிக கவனமாக வேண்டும்
அப்போது
அவர்களுக்கு
அது வந்து விட்டதென்று அர்த்தம்
பின்
சின்ன தலைவலியுடன்
இயங்கும் உலகை
அசூயையுடனும் அச்சத்துடனும் கவனிக்க ஆரம்பிக்கிறீர்கள்

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
வித்தியாசமான கருத்துக்களும் கவிதையும் அருமையாக வந்து இருக்கிறது. பாராட்டுக்கள்!
பனித்துளி சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
தலைவலி என்ற ஒற்றை உணர்வுக்குள் இத்தனை வார்த்தைக் குவியலா !???
சிறப்பு
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சித்ரா மற்றும் சங்கர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...