முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட்சேவும் செந்திலும்



நீட்சேயின் “அவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரன் கதையில் ஜாருதுஷ்டிரன் பல வருடங்கள் மலையில் துறவியாய் வாழ்ந்த பின் மனிதர்களை சந்திக்க ஒருநாள் இறங்கி வருவான். அப்போது ஒரு வயதான துறவி அவனை தடுப்பார். “வேண்டாம். மிருகங்கள் மத்தியில் மேலும் பாதுகாப்பாய் இருப்பாய். ஆனால் இந்த மனிதர்கள் மோசமானவர்கள். அவர்களிலும் மேலானவர்களை அவர்களுக்கு பிடிக்காது. உன்னை கொன்று போட்டு விடுவார்கள் என்பார். அதற்கு ஜாருதுஷ்டிரன் “ஏன் அப்படி சொல்கிறீர்கள். நான் பெற்ற ஞானத்தை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? என்பான். அதற்கு முதியவர் “மனிதர்களுக்கு உன்னதமானவர்களை தாங்க முடியாது. அவர்களுக்கு தேவை பொழுதுபோக்குக்கு ஏற்ற கோமாளிகள் தாம் என்று பக்குவமாய் சொல்லிப் பார்ப்பார். பிறகு ஜாருதுஷ்டிரன் கேட்காமல் மனிதர்களிடத்து சென்று உதாசீனப்படுத்தப்பட்டு வருந்துவான். இருநூறு வருடங்களுக்கு பின்னரும் இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டே வருகிறோம்.
ஒரு மனிதன் முன்னேறாமால் சீரழிந்தால் அவனை அன்புகாட்டி விசனிப்பார்கள். அதே மனிதர் உயர்ந்து வந்தால் கரித்துக் கொட்டுவார்கள். மனிதர்களுக்கு தம்மிடையே ஒருவன் வளர்வது தமது தாழ்வை சுட்டிக் உணர்த்தி உறுத்தல் தரும். அதனாலே அவர்கள் பிச்சைக்காரர்களையும் குஷ்டரோகிகளையும் அடிமைகளையும் சுற்றி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். படையப்பா படத்தில் பெண் பார்க்க போகும் செந்தில் உணர்வது போல் என்னதான் செய்தாலும் பக்கத்தில் இரும்பு இருப்பதால் வெண்கலம் தங்கமாகி விடப் போவதில்லை.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
1. இந்த பிளாகை சர்வ சாதாரணமாய் நினைத்து அசால்ட்டாய் மேய்ந்தவர்கள் நீங்கள் விஜய் டிவியில் நடுவராக வந்த பின்னால் மட்டுமே இவர் பெரியவர் போல் இருக்கே என்று நினைத்திருப்பார்கள். ஜெமோ வம்பு நடந்த போது உங்கள் ப்ளாக் என் கண்ணில் பட்ட போது 'யாருடா இவன்' என்று அசால்ட்டான நினைப்பில்தான் அந்த வம்பு கட்டுரையை(பாதி வரை) படித்தேன். அதன் பிறகு கல்லிவர் படம் போட்ட கட்டுரையை பார்த்து படிப்போமே என்று எண்ணி படித்தேன். அதன் பிறகு அவ்வப்போது உங்கள் பிளாகை படிக்க ஆரம்பித்தேன். விஜய் டிவியில் நீங்கள் வருவதற்கு முன்பில் இருந்தே நான் உங்களோடு பேசிக் கொண்டு இருக்கின்றேன்.


2. காட்சியை வைத்து ஒருவரை எடை போடக் காரணம் புத்தி என்பது இவர்களிட‌ம் இல்லை என்பது மட்டும் தான். புத்திக்கான விளக்கம் இது. எல்லோரும் தெரிந்து கொள்ளவும். மனித‌ மனதில் சுயம்(self) சார்ந்தவைகளை உதறிய‌ நிலையில் உள்ள‌ சிந்தனை போக்கின் திறன் தான் 'புத்தி'.


3. அடுத்தவன் மேலேறும் போது தம்மை தாழ்வாய் இவர்கள் உணர்கிறார்கள் என்று சொல்வது சரி அல்ல. இவர்கள் நிஜத்தில் யாரோ அந்த உண்மையை உணர்கின்றார்கள். இவர்களைப் பற்றின உண்மை இவர்களின் ஈகோவைச் சுடுகின்றது. ஈகோ இல்லை என்றால் தம்மைப் பற்றி தம் ஈகோ உருவாக்கியிருந்த கற்பனையான இமேஜ் அல்ல தாம் என்று உணர்ந்திருப்பார்கள். தம்மைப் பற்றி தாம் இப்போது உணர்ந்திருக்கும் உண்மையை தம்மைப் பற்றின உண்மையான இமேஜாக ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் மாட்டார்கள். உங்களை ஏசுவதின் மூலம் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஜராதுஷ்ட்ரா புக்கை சில பக்கங்கள் முன்பு படித்தேன். புரியவில்லை. விட்டு விட்டேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என் தவறை சரி செய்து கொள்ள விரும்புகின்றேன்.

Definition for புத்தி:


மனிதனின் மனதில் 'இது என்ன?', 'என்ன நடந்திருக்கும்?', 'ஏன்?', 'எப்படி?', 'யார்?', 'நான் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றேனோ அதுதான் நானா?', 'என்ன செய்து கொண்டு இருக்கின்றேன்?', 'பின்விழைவு என்ன?', 'இப்படி ஒன்று நடந்தால் அப்போது என்ன செய்வேன்?' என்றெல்லாம் காரண(cause) காரியங்களை(action or effect due to cause) ஆராயும்(analysing) திறன் தான் 'புத்தி'(power of reasoning in human mind).

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...